வெள்ளி, 5 ஜூலை, 2019

பாசுரம்

பாசுரம் என்ற சொல்லை முன் யாம் விளக்கியதுண்டு எனினும் இது வேறு ஒரு வலைப்பூவிலிருந்து போந்தது என்பது நினைவில் உள்ளது. 

பாசுரம் என்னும் சொல் பற்றிய சிந்தனையை ஈண்டு பதிவு செய்வாம்.

பா என்பது பாட்டு என்று பொருள்படும் தமிழ்ச்சொல் தான்.

சுரத்தல் என்பது வெளிப்படுதல் என்று பொருள்படும்.  அதாவது ஒரு பெரும் பற்றாளரின் வாய்மொழி மூலமாகவோ அவர்தம் எழுத்துக்களின்  மூலமாகவே இறைப்பற்று மேலவாக எழுதரும் பாடல்களே பாசுரம் எனத்தக்கவை.

பா+  சுர +  அம் =  பாசுரம்.

இதில் ஓர் அகரம் வீழ்ந்தது  .  சுர என்பதன் ஈற்றில் அகரம்;  அம் என்பதன் தொடக்கத்தில்  ஓர் அகரம்.   ஓன்று மறைதல் வேண்டும்.  இல்லையேல் ஒரு வகர உடம்படு மெய் தோன்றும்.

மறம் > மற + அர் >  மறவர்.    மற + வ் + அர். 

--  என அறிக.

தாயுமானவர்,   அருட்பிரகாச வள்ளலார் ஆகியவர்கள் பாசுரங்களின் ஊற்றுக்கள் ஆயினர்.

எழுத்துப்பிழைத் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: