திங்கள், 17 நவம்பர், 2014

தொலைபெசி

தங்கையொரு தொலைபெசி வாங்கி வந்தாள்
தக்கபடி காப்பதாக எண்ணிக் கொண்டு,
என்கையே அன்றிப்பிற கைகள் எல்லாம்
இதைத்தொடுதல் ஆகாதே என்று  சொன்னாள்
பின், கையால் அதனையவள் தூக்குங் காலை
பெட்டென்ற ஒலியோடு வீழ்ந்த பேசி,
கண்களிலே நீர்தன்னை வீழச் செய்ய‌
கலங்கிவிட்டாள் கவலையவள் நெஞ்சைக் கவ்வ.

என்னதங்காய்!என்றேன் நான்; பாவம் அன்னாள்
என்செய்வாள் என்மனமோ இரங்கிற் றின்றே
சொன்னமருட் சொல்தன்னை மறக்க வேண்டி]
சோர்வுலகில் வீழாதே என்றல் போலென்
கண்னொளியைச்  செலுத்தினேன்  மற்றென் செய்வேன்;
கண்மணியே வாவென்றே அணைத்துக் கொண்டேன்;
தன்னொளியை மீள்பெற்ற நிலவோ பின்னாள்
தக்கனவே அறி நிறைவை அடைவாள் உண்மை.



கருத்துகள் இல்லை: