ஞாயிறு, 2 நவம்பர், 2014

பிரகாசம்


பிரகாசம் என்ற பெயருள்ள ந(ண்)பர்கள் பலருள்ளனர். பிரகாசம் என்பது ஒளி என்று பொருள்படுமாதலின், இந்தச் சொல்லுக்குப் பால்பாகுபாடு இல்லை என்றாலும் இப்பெயர் தாங்கியோர் பெரும்பாலானவர்கள் ஆடவர்களே ஆவர் 
பிரகாசம் என்பதைச் சங்க நூல்களில் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் கண்டிருந்தால் தெரிவியுங்கள்
ஆகவே இது தமிழ்  அன்று எனபர்.

பண்டைக் காலத்தில் அரசர் அரண்மனைகள் பெரியனவாய் இருந்தன. ஆனால் பெரும்பாலான மக்கள் சிறு வீடுகளிலேதாம்  வாழ்ந்தனர். வீடுகளும் போதுமான  வெட்டம் (ஒளி) இல்லாமல் இருக்கும்.  வீட்டுக்கு வெளியிலேதான் வெளிச்சம்.

புறத்தே கதிரவன் அல்லது நிலா காயும்.

புற காயம் > புறகாசம் > பிரகாசம்.

யகரம் > சகரமானது.

புற காசம் என்பதில் வல்லெழுத்து மிகாது காக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: