புதன், 25 மார்ச், 2009

ஒன்றுபட முடியுமா உன்னால்?

(புதுக்கவிதை )

இன்றைய புத்துலகில்,
நாட்டுக்கு நாடு,
ஊருக்கு ஊர்.
எண்ணற்ற  அரசியல் கட்சிகள்;
கட்சித் சண்டை---, மற்றும்
கட்சிக்குள் சண்டை!
ஆளுக்கு ஆள்,
கருத்து வேற்றுமை!

தமிழருக்குள்ளும் இதுதான் நடக்கிறது!
ஒப்பமுடிந்த அனைவருக்குமான நிலையில்
தப்ப முடியுமா தமிழன் மட்டும்?

ஒன்றுபடு நீ என்றும்
ஒப்பற்ற நல்லறிஞர் எவர் சொன்ன போதிலும்
ஓன்றுபட்டுவிட முடியுமா உன்னால்?

பாவம் நீ!
உலகின் தலைவிதிக்கு நீ என்ன விதிவிலக்கா?

கருத்துகள் இல்லை: