சனி, 19 மார்ச், 2016

Chanakya was probably a Tamil.

சாணக்கியன் வடதிசைச்  சென்று பணிபுரிந்த 
தென்னாட்டுப் பிராமணன் என்ப.. சோழ நாட்டினன் 
என்றும்  சொல்லப்படுகிறது. இப்போது இவன்
பெயரை ஆராய்வோம்.
இவன் நுண்மாண் நுழைபுலம் உடையவன். 
எத்தகு நுண்ணிய பொருளாயினும்
அதில் உள் நுழைந்து அறிந்து வந்து விளக்கும் 
வல்லமையே  நுண்மாண் நுழைபுலம்
என்று தமிழில் சொல்லப்படும்.

 
ஐந்தடிக்கு மேல் வளர்ந்து நலமுடன் திகழ்ந்த அவன், 
எந்த விடயத்திலாவது புகுந்து உண்மை 
காணவிழைந்தால் ஒரு சாணாகக்  குறைந்து உள் 
நுழைந்து மறைந்திருக்கும் உண்மையைக் 
கண்டுபிடித்துவிடுவான் என்று மக்கள் நம்பினார். 
இந்த நம்பிக்கை தமிழ் மரபில் சொல்லப்படும்
நுண்மாண் நுழை திறனைப் படியொளிர்வதாக உள்ளது.  
சாண்  ஒரு சாணாக;
1அக்குதல் : குறைதல்.
இஅ  இஅன் என்பன சொல்லிறுதிகள்.

சாணக்கியன்   விடையத்தை அறிய சாணாகக்
 குறைகின்றவன்.

ஆகவே இது காரணப் பெயராகிறது. 
 இவனுக்கு வேறு பெயர்களும் உள 
-------------------------------------------------------------------------------------------------------------------

1அஃகுதல்  ‍  குறைதல். 


Some historians have claimed Chanakya to be a fiction
 and such a person never existed. Others said his alleged
 written output were by other  (several )  writers composing
 their material under that name. Also that events ascribed
 to him were allegedly too good to be true.


கருத்துகள் இல்லை: