செவ்வாய், 30 ஜூன், 2026

ilavakam இலாவகம்

 ஒன்றைச் செய்ய விழைந்தவன்,   அவ் விழைந்த செயலின்பால் மனத்தைச் செலுத்தாமலும்,  உடல்முயற்சி செய்யமலும் அக்காரியத்தை  செய்து முடிப்பனாயின்  அவன் அதனை இலாவகமாகச் செய்து முடித்தான் எனல் சரியாகும்.

இப்படிச் செய்து முடித்தால்,  ( மனமுயற்சியும் செயல்முயற்சியும் இல்லாமல்  முடிப்பீரானால் ),  உண்மையில் அதைத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.

எளிதாக்கம்,  நுணுக்கம் காட்டுதல், சாதுரியமாகச் செய்தல், சீருடன் முடித்தல் என்று பலவாறும் கூறலாம்.

இனிச் சொல்லைப் பார்ப்போம்.

இலா+ அகம் >  இலாவகம்.

உள்ளிருந்து வெளிவந்து   செயலைச் செய்ய உதவுவது:  மனத் திட்பம் மட்டுமன்றி, உடலின் கைகளின் ஆற்றல் முதலியவையும் தாம்.   மனவலிமை மட்டுமின்றி உடல்வல்லமையையும் இது உளப்படுத்தும் என்பதறிக.

இற்றை நிலையில் செயலகத்தில் பணி செயவதில் திறமையானவர், வெளியிடங்களிலும் அவ்வாறு திறமை காட்டினால் அவர் செயலும் இலாவகம் என்று கொள்ளப்படுதல் கூடும்.  செயலகம் இல்லாதவிடத்தும் மனத்திட்பத்துடன் பணிபுரிவது.

(1) இலகுவாக, (2) இலாகுவாக என்றும் வழங்குவதாகத் தெரியும் சொல் இது.

இல் என்பதும் இலா என்பதும் ஒன்றுதான். இல் அகு, இலா அகு, இலா அகு அம், இவை ஒன்றுதாம்.  சுருக்கி எழுதவும் விரித்து எழுதவும் இயலும் மொழி தமிழ்.  இது ஒரு வசதி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


சனி, 27 ஜூன், 2026

நபர் என்னும் சொல் ( நண்பர் இடைக்குறை)

நண்பர் என்ற சொல்லை ஒரு சீனர், மலாய்க்காரர், இந்தோனேஷியர், வெள்ளைக்காரர் ஆகியோரிடம் சொல்லிக்கொடுத்து,  உச்சரிக்கச் செய்தால் அதைச் சரியாக வெளிப்படுத்த அவர்களால் இயல்வதில்லை. இதைப் போலவே நம்மில் பலருக்கு, பிறமொழியில் பல சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதனால் தமிழ்ச்சொற்கள் வேற்று மொழிக்காரர்களால் கையாளப்படும்போது வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.  இது எந்த மொழிச்சொல் என்ற கேள்வி வரும்போது, பதிலைத் தருகிறோம்.

ஒரு சொல் எந்த மொழிக்கும் சொந்த மாக இருக்கும்;  பிறமொழிச் சொற்களைக்   கற்று,  எவ்வெச் சொற்கள் எவ்வாறு  திரிகின்றன என்று கண்டுபிடித்துச் சொல்லலாம்.  அவ்  இருப்பினால் மட்டும் அந்தச் சொல்லுக்கென்று எந்த தகுதிமேம்பாடும் ஏற்படுவதில்லை. உச்சரிப்பினால்மட்டும் ஒரு சொல்லுக்கு  நிலையுயர்வு உண்டாகு மென்பது ஒரு வெற்றுக்கற்பனை.   பிறழ் பலுக்கினால் (தடுமாறி உச்சரித்தால்) சொல் புரியாமற் போய்விடும் இடர் உள்ளது என்பது மட்டுமே   உண்மை ஆகும்.

நீங்கள் உங்கள் கருத்தை இங்குப் பதிவிடலாம். இவ்வுரிமை யார்க்கும் உள்ளதே ஆகும்.   இதனை நாம் மதிப்போம்.   ஆனால் பின்னர் உண்மை இது என்றும் சொல்லவேண்டும். நீங்களும் இங்கு இதைச் சொல்லலாம்.

நண்பர் என்பது தமிழில் வழங்கிய சொல்.  இதை தமிழரல்லாதார் சொல்லும்போது,  நண் என்பதைச் சொல்வதற்கு இடர்ப்படுவர்.  அதனால் ண் என்பதை விடுத்து, நபர் என்றுதான் சொல்வர். ண் அப்படியே வந்தாலும் அரைகுறையாக வெளிப்படும்.  இப்படிப் பிறர்க்கு தொந்தரவு கொடுப்பதினும் நபர் என்று நாமும் சொல்லி அவர்களுடன் இணைந்துவிடுவது சிறப்பு   ஆகும்.  உங்கள் தமிழ் நாவிற்காக மற்றவர்களைத் தொல்லைப்படுத்தாமை நன்று.  அப்படி வந்தது தான் நபர்,   பின்னர் நபர் வேறு, நண்பர் வேறு என்று எண்ணிவிட்டனர்.

நபர் என்ற அதை ஒலித்ததனால் இன்னொரு சொல் கிடைத்துள்ளது என்று மகிழ்வு கொள்ளவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

28.06.2029 திருத்தம்.

பகிர்வுரிமை 











ர்ர

செவ்வாய், 23 ஜூன், 2026

சேதம் செது என்னும் அடிச்சொல்

 செது என்பது ஓர்  அடிச்சொல்.  தமிழில் உள்ளது. இழைத்தல் என்பதுp ஏறக்குறைய இச்சொல்லின் பொருளாகலாம். இச்சொற்கள் பருப்பொருள் ஒற்றுமையும் நுண்பொருள் வேறுபாடுகளும் உடையனவாயிருப்பது மறுக்கவியலாது. ஒன்று ஒருவருக்குக் கூடுதலான அல்லது குறைவான பொருண்மையை வழங்கலாம். நிகண்டுகள் எது கூறினும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தெடுக்கும் காரணங்களும் இருக்கும்..

செதுக்குவது வேறு  இழைப்பது வேறு எனலாம்.

கதுவுதல் என்றாலும் செதுக்குதல்தான்.   இதிலிருந்து கதவு என்ற சொல் வருகிறது. பழங்காலக் கதவுகள் செதுக்கிச் சேர்க்கப்பட்டவை.  இப்போது நெகிழிக் (plastic) கதவுகள் ஒரே வார்ப்பாக உள்ளன, இணைக்கப்பட்டவையும் உள,

கது > கதுவு > கதுவுதல்  ( வினைச்சொல்: கதுவு).

கது >  கதுவு >  கதவு.

ஒப்பு:

உது > உதவு  

உது என்பது முன்செல்லுதல் குறிக்கும் அடிச்சொல்.

மடை என்பது  மதகு   எனவும் படுவதாகும்,.இவற்றின் வேலை,  அளவோடு நீரை வெளியேற்றுதல்.

இனிச் செது.   இந்த அடியிலிருந்து,   

செது >  செதுக்கு.

செது > செத+ அம் > சேதம்.  முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.

ஒப்பு:  சா+ அம் > சவம்,  இங்கு முதனிலை குறுகிற்று.   தோண்டு > தொண்டை என்பதிலும் காண்க.

செது - ( செதும்பு )- செதும்பல்.   ( குழம்பிய மண்).

செதும்பல் தாமரை.

செதுகு என்பது குப்பை கூளத்தையும் உட்படுத்தும் சொல்.  செதுகாத படை என்றால் குற்றமற்ற படை என்றும் பொருள்.

செதுகை என்றால் தீமை என்றும் பொருள்.  சேதமில்லாத இந்துஸ்தான் என்று பாரதியார் பாடலில் வருகிறது.

செது என்னும் அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை