வெள்ளி, 24 அக்டோபர், 2025

துரியோதனன்

துரியோதனன் தான் கல்வி கற்கும் காலங்களில் சிறப்புடையோனாகத் திகழ்ந்ததாகவே தெரிகிறது.  தான் கசடறக் கற்றதுடன், பிறருக்கும் போதித்த பெருமையோன் என்பது தெளிவு.  துரியோதனன் என்ற பெயர் இயற்பெயராகத் தோன்றினபோதிலும்  இது தமிழ் மூலங்களை உடைய சொல் என்பது எமக்குத் தெளிவாய் உள்ளது.  நீங்கள் இதை உடனடியாக ஏற்கவேண்டியதில்லை,  ஆய்வு செய்து ஏற்கலாம்  அல்லது புறந்தள்ளிவிடலாம்.  இவ்வாறு செய்வது உங்கள் ஆய்வுரிமை.

துரியோதனன் கல்வியிற் சிறந்தோன்.  அவன் '' துருவி ஓதுநன்''  ஆவான்.

ஒன்றைத் துருவி துருவிக் கற்று மனத்தில் அமைத்துக்கொள்பவன்.

துருவி ஓதுநன் >  துருவோதுநன் >  துரியோதன >  துரியோதனன்.

பாண்டவர் என்பதற்கும் பாண்டியர் என்பதற்கும் உள்ள ஒலியொற்றுமையை கவனித்துக்கொள்ளுங்கள். உடன்வீழ்க என்று யாம் சொல்லவில்லை.

இதை வேறு யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று யான் அறியவில்லை. அவர்களை மேற்கோள் காட்டவும் எண்ணவில்லை.

ஒன்றை நன்றாகத் துருவி ஆய்ந்து அறிந்தபின்  அவன் அதை  ஓதும் பண்பினன். அவன் அதைப் பின் ஒலிப்படுத்துவான். தன் செவிகட்கும் அவன் ஓதுவான்; பிறருக்கும் ஓதுவான்  ( ஓதுவிப்பான் /கற்பிப்பான்).

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

  

திங்கள், 20 அக்டோபர், 2025

பயம் (அச்சம்) என்ற சொல்.

 இன்று பயம் என்ற சொல்லை ஆய்வு செய்தல் நண்ணுவோம்.

பைம்மை என்பது  இளமைக்காலத்தைக் குறிக்கும்.   பை>  பையன்,  இது இளவயதினனைக் குறிக்கும் சொல்.  இச்சொல் முன் தமிழில் பையல் என்றிருந்து பின்னர் பையன் என்று அன் விகுதி பெற்றது.  லகர ஒற்றால் இறுதி பெற்று, பின்னர்  னகர ஒற்றால் முடியும்  சொற்களில் பையன் என்பதும் ஒன்றாகும்.  பையல் > பையன் ;  

பையல் >  பயல் என்றுமாகும்.   ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியத்தில் சொல்லப்படுகின்றது.  சொல்லாக்கத்திலும் இக்குறுக்கம் நிகழும்.

ஒருவன் பையனாக இருக்கும்போது,  எளிதில் அவனைப் பயமுறுத்திவிடுதல் கூடும். அச்சமின்றி நடந்துகொள்வது எல்லாப் பையன்களாலும் இயலுவதில்லை.   சொற்கள் பெரும்பாலும் பொதுப்பண்பு கருத்தியே அமைபவை. இவ்வாறு,  பயம் என்ற சொல்  அச்சத்தைக் குறிக்கலாயிற்று. இதன் அடிச்சொல் பை  என்பதே.

இதே அடியிலிருந்து  பைத்தியம் என்ற சொல்லும் வந்துள்ளது. இது:

பை -  இளமை குறிக்கும் அடிச்சொல்.

பை+ து >  பைத்து   பொருள்:  இளந்தன்மை காரணமாய் எழுவது.

பைத்து + இ+ அம் > [பைத்தியம்.  இளமையினால் அல்லதூ முதிர்வின்மையால் எழும் மனநோய்.]

''ஆளும் வளரணும்  அறிவும் வளரணும்'' என்று பாட்டில் சொல்வதுபோல்  ஆள் வளர்ந்தும் அறிவு பைம்மை நிலையில் இருப்பதுதான்  பைத்தியம்.

பயில்தல், பயிற்றுதல் என்ற சொற்களும் பைம்மை அடியாகப் பிறந்தவையே.  

பை> பயம் என்பதே  இதன் பிறப்பு.   பயன் என்ற சொல் பயம் என்றும் வரும்.  அதை வேறு சொல்லாகக் கொள்ளலாம்.  இங்குப் பயிர் என்ற சொல்லையும் இணைத்துப் பொருள் சொல்லலாம் எனினும் அதை வேறோர் இடுகையில் செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை,


வியாழன், 16 அக்டோபர், 2025

உலவுதலும் உராவுதலும்.

 லகரம்  சொல்லில் ரகரமாக மாறிவிடும் என்பது நம் பல இடுகைகளில் முன்னர் சொல்லியிருத்தலைக் காணலாம். இம்மாற்றங்களில் பலவற்றை மிக்க நுட்பமாக ஆய்வு செய்தால் இந்தத் திரிபு மனப்பாடமாக மறக்க முடியாததாகி விடும் என்பது தெளிவு.

இவ்வகைத் திரிபு மிக விரிந்த தாக்கமுடையது ஆகும். 

பழந்தமிழில் லகர ஒற்றில் முடிந்த சொற்கள் பலவிருந்தன.  வள்ளல் என்ற சொல் இன்னும் வழக்குடையதாய் உள்ளது. நாளடைவில் அல் என்று முடிந்த மனிதனைக் குறிக்கும் சொற்கள் அல் என்று முடியும்படி இல்லாமல் அர் என்று முடிவெய்தின. இளவல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம் .  தம்பி என்று பொருள்படும் இச்சொல் இறுதி லகர ஒற்றில் முடிந்தது. இதுவும் எப்போதாவது உயர்ந்தோர் (கல்வியாளர்கள்) நடையில் தோன்றி மகிழ்விக்கும்.  தோன்றல் என்ற சொல்லும் மிகப்பெரியோன் என்று பொருள்தருவது.  வேறு பொருள் உண்டாயினும்,  இது லகர ஒற்றில் முடிதலைக் கண்டுகொள்க.

இங்கு காட்டப்பெற்றவை சொல்லின் இறுதியில் வரும் லகர ஒற்று. லகர ரகரங்கள் சொல்முதலாக வருவதில்லை.  ( மொழிமுதல் என்பர் இலக்கணியர்).

உலாவுதல் என்பது உராவுதல் என்றும் வந்ததற்கான இலக்கியம் உண்டு என்பதறிக. இத்திரிபு  லகர ரகரத்தது ஆகும்.

லகர ரகரத் திரிபுகள் பிறமொழிகளிலும் காணப்பெறுவது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை