By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
திங்கள், 10 மார்ச், 2025
மகமும் மிருகமும்
சனி, 8 மார்ச், 2025
வந்தனமும் வணக்கமும்.
வந்தனம், வணக்கம் என்ற இரண்டு சொல்லையும் இன்று ஆய்வு செய்வோம்.
வந்தனம் என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்கள் வந் என்பது. வணக்கம் என்ற சொல்லின் வண என்பது உண்மையில் வண் என்ற அடியைக் கொண்டுள்ளது. இதை ஒலிமுறைப் படி அவிழ்ப்பதானால் வண் + அ+ கு + அம் என்று பிரிக்கவேண்டும். ஏன் வண் என்பது அடியாகிறது என்று கேளுங்கள். வண் என்பது வள் என்பதன் திரிபு. வள் என்பது உண்மையில் வளை என்ற சொல்லைப் பிறப்பித்த அடி. வளை என்றால் கோணிக்கொண்டு என்று பொருள். வணக்கம் என்பது என்னவென்றால் தன்னினும் பெரியவனாய் அல்லது தலைதாழ்த்தக்கூடிய மேன்மையுடைய ஒருவனின் முன் நாணிக்கோணி நின்று தன்பணிவைத் தெரிவிப்பதுதான். பழங்கால மனிதன் தன்னைப் பிறனுக்கு சிறியோனாய்க் கருதித்தான் வணங்கினான். யாவரும் சமம் என்ற கருத்து அப்போது எந்த மன்பதையிலும் ( சமுதாயத்திலும்) இன்னும் தோன்றவில்லை. மன்+ பது + ஐ > மன்பதை. அதாவது மனிதர் ஒருவருடன் பிறர் குறித்த எண்ணிக்கையினருடனாகப் பதிவுகொண்டு அல்லது உறவுகொண்டு ஒன்றுபட்டிருப்பது. பது, பதி, பதுங்கு, பொதி எல்லாம் உறவுற்ற சொற்கள்.
வந்தனம் என்ற சொல் எப்போது வணக்கம் என்ற சொல்லுடன் உறவு காட்டுகிறது என்றால் :
வந் > வந்தனம்,
வண் > வணக்கம் என்னும் போதுதான்.
வந், வண் உண்மையில் ஒன்று அல்லது தம்முள் உறவு உடையவை.
எப்படி முடியும். :இணக்கம்
அன்பு என்ற சொல்லில் உள்ள அன் என்பதும் அணுக்கம் என்ற சொல்லில் உள்ள அண் என்ற அடியும் எப்படி ஒன்றாம் ஈர்ப்பினைக் காட்டுகின்றனவோ அங்கனம் வண் என்பதும் வந் என்பதும் வளைவு காட்டுபவை. இரண்டும் ஓரின எழுத்துக்கள். ந, ண இரண்டும் இனம் ஒன்றியவை. இவை பெரிய வேறுபாடு உடையவை அல்ல.
இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல், வந்தனம் என்பது வளைந்தனம் என்பது தான் அன்றி வேறில்லை. வண் என்பதும் அது. இன்னும் விளக்கமாய்ப் பின் எழுதுவோம். வளைந்தனம் > (இதில் ளை குறுக்கினால்) வந்தனம் ஆகிவிடுகிறது. எவரும் சொல்லாத ஒன்றைக் கண்டு சொல்லும் போது அது ஆய்வு என்பதை விடக் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும்..
இவ்வாறு இவை உறவுச்சொற்கள். சமஸ்கிருதம் என்பது தமிழின் அக்காள் தங்கை உறவுள்ள மொழி என்பதுதான் உண்மை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்,
Copyright for this post is waived.
You may share this through any social media.
[ This post had been attacked and errors had been found. Now it has been re-edited ]
திங்கள், 3 மார்ச், 2025
சித்து சித்தர்
இப்போது சித்து என்பதையும் தொடர்புடைய சொற்களையும் கவனித்து ஆய்வோம்.
முனிவர்கள் பலர் பரத கண்டத்தில் வாழ்ந்துள்ளனர். விசுவாமித்திரர் போலும் முனிவர்கள் பேராற்றல் காட்டிப் பெரும்புகழ் படைத்தவர்கள். இவர்களை நாம் பெரிய முனிவர்கள் என்று சொல்வோமானால் பல்வேறு முனிவர்கள் அத்துணை ஆற்றல் போற்றல்களுக்கு இலக்காக இல்லாமல் சிறுசிறு நிகழ்வுகள் மூலமே தங்கள் இறைத்தொடர்பினை வெளிப்படுத்தியவர்களும் இருந்துள்ளனர். இவர்களைச் சித்தர்கள் என்று மக்கள் போற்றியுள்ளனர்.
இது பேரரசர், சிற்றரசர் என்று அரசர்களை வகைப்படுத்தியது போலவே யாகும். பெருமை சிறுமை என்று வகைப்படுத்தப்பட்ட இறையறிவர்கள் மட்டுமல்லர், மரங்களில் கூட இத்தகைய பாகுபாடுகள் நுழைந்துள்ளன. மா மரம் என்பது ஒரு மரத்தின் பெயரென்றால், அரச மரம் என்பது அரசுமுறையோடு ஒப்பிட்டு வைக்கப்பட்ட பெயராகும் என்பது அறிக. சித்தரத்தை அல்லது சிற்றரத்தை என்ற பெயரையும் காண்க. பெருங்காயம் என்று ஒரு காயப்பொருளுக்குப் பெயர் உள்ளமை நீங்கள் அறிந்தது. இப்படிப் பெயர் புனைவது பெருவழக்கு ஆகும்.
சிறு > சிற்றர் என்பது சித்தர் என்று திரிந்துவிட்டது காணலாம். சித்தர் அறிந்து சொன்ன வைத்தியம் சித்தவைத்தியம் ஆயிற்று. வைத்தியம் என்றால் வைத்து - கொஞ்சம் நீண்ட காலமாகத் தகுந்த சிகிச்சை யளித்துக் குணப்படுத்துவது என்று பொருளாயிற்று.
பார்த்து வியக்கத் தக்க சிறுசிறு வித்தைகளை இந்தச் சித்தர்கள் செய்தார்கள். கொடுத்த உணவினை வீட்டுக் கூரைமேல் எறிந்து "யானுமிட்ட தீ மூள்க மூள்கவே:" என்று சொல்ல, கூரை தீப்பற்றி எறிந்த வியப்புச்செயல் ஒரு வித்தை எனப்பட்டது.
வியத்தல்: விய > வியத்தை> ( இடைக்குறைந்து) வித்தை ஆனது. இது வியப்புக்குரியதைக் குறிக்கும். படிப்பு பற்றிய வித்தை, மற்றொன்று. அது வித்து என்னும் சொல்லினின்று பிறந்தது ஆகும்.
சித்தர் செய் விந்தைகள், சித்து எனப்பட்டது. இது சிறு > சிற்று> சித்து என்று அமைந்த சொல்.
சின்> சிந்து என்பது சிறிய அளவில் கொட்டும் நீர்குறிக்கும் சொல். மனத்துச் சிறிய எண்ணங்கள் சிந்தனை எனப்பட்டது. தொடர்சிந்தனையாக இல்லாம ல் நீண்டு செல்லாத மனவினையாகும்.
சித்தர், சித்து என்பதை இவ்வாறு அறிக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
ம்