ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

இலாபம் சொல் தமிழ் ஆவது

 இலாபம் என்ற சொல்லில்  இல்,  ஆதல் என்ற இரண்டு பகவுகள் உள்ளன.

இல் என்பது இன்மை. இன்மை புகுந்துவிட்டால் புதிய வரவு இல்லை என்று பொருள்.

அடுத்து ஆதல் என்ற சொல் வருகிறது. இச்சொல்லுக்கு திரிபுகள் ஏற்பட்டுள்ளன.  ஆ + அம் >  ஆவம்.  ஆ (என்பது ஆக்கம் )  என்னும் வினையடி. ஆவம் என்பது வகர பகரத் திரிபால்  ஆபம் என்றாகிறது.

வரவின்மை  ஆக்கம்  ஆவதுதான் ( மாறுவதுதான் )  மேல் 

 ஆக்கம் ஆகிய இலாபம்.

இல்லாமை ஆக்கம் ஆனால்  அது இலாபம்.

இல் என்பதற்கு இடம் என்றும் பொருள் உள்ளது.  இடத்தில் ஆவது என்பது வருமென இருக்கும் இடத்தில்  ஆக்கம் பெறுவது என்றும் கூறின் அதுவும் சரியாகும். 

profectus என்ற இலத்தீன் முன்னேற்றம் என்ற பொருள் உள்ளது.   தமிழ் இலாபத்தில்  ஆவது என்பது  முன்னேற்றமே ஆகும்.

தமிழர்  பண்பாட்டில் உள்ள கருத்துப்படி  ஒரு கெடுதல் ஏற்படின் அதை நலம் நலம் என்ற சொற்களால் மறைத்துக் குறிக்கவேண்டும்.  நல்கூர்ந்தார் என்ற சொல்லுக்கு நனமை அடைந்தோர் என்பது சொற்பொருள் ஆனாலும்,  வறுமை என்பதுதான் புரிந்துகொள்ளவேண்டிய பொருள் ஆகும். வறுமையிலும் செம்மை என்பதே மந்திரம் ஆகும். வறுமையில் ஒழுக்கம் காக்கவேண்டும், அதுவே முதன்மை யாகும் என்றறிக. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதே வள்ளுவனார் குறள். அதுதான் விழுப்பம் தருதலால்.

இல்லாதவிடத்து ஆக்கமே இலாபம் என்றும்  கூறலாம்.

ஒருவனுக்குத் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே  அல்லது பரம்பரை பரம்பரையாக முதலை விட அதிகமாக வருமானம் வந்துகொண்டே இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்படி வருவது சிறப்புத்தான் என்றாலும் இதை அவன் மாமூலாகக் கருதுவான். அவனிடம் யாரும்போய் சிறப்புடன் செய்கிறீர்கள் என்றால், " புதியது ஒன்றுமில்லை, என்றும் உள்ளதுதான், எனினும் இறைவனின் கருணை" என்பான். அவனிருக்கும் வரவு உயரத்திலிருந்து இன்னும் மேல்போகவேண்டும். அப்போது மனம் மகிழும்.  எப்போதும் வருவதற்கு எப்போதும்போல் செலவுகள் பட்டியல் இருக்கும். வாங்கித் தின்போர் பட்டியலும் நிரந்தரம் ஆனதாகவே இருக்கும்.  ஆகவே இலாபம் என்று கருதுவது ஓர் ஒப்பு நிலையிலிருந்து மேலாக வரும் வருமானம். புதிதாக ஒன்றும் இல்லையானால் அதுவும் ஒரு இல்லாமைதான். புதியது செய்யப் புதுவருமானம் வேண்டும். இதை இலாபம் என்ற சொல்லில் உணரவேண்டும்.  Similarity to existing or earlier conditions is nothing new.  A normal margin has already been established.  The margin must move to show something new. இல் என்ற சொல்லில் இதை உட்கிடை என்க.


 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 

For Memory


 in memory of Wanaja who loved and respected all humankind



Wanaja M next to the young lady

நிகண்டு என்ற சொல்.

 சொற்களின் பொருளை நிறுத்துக் காணவேண்டும். அல்லது சிந்தனை பலவாறு ஓடி வழிந்து விடாமல் நிற்பித்துக் காணவேண்டும். யாம் நிறு, நிற்பி என்றசொற்களை இங்குப் பயன்படுத்துவதற்குக் காரணி,  இந்த இருசொற்களினின்றும் இது விளக்கமுறுகிறது என்பதுதான். கண்டு என்ற வினை எச்சம் இறுதி முடிபு கொள்ளுதல் என்பதை வலியுறுத்துகிறது. பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என்று சொற்களிலும் எல்லாமோ அல்லது சிலமட்டுமோ வரலாம்.

நிறு த்திக் கண்டு கொள்ளுதல்>   நிறு கண்டு >  நிகண்டு என்றாகும். இங்கு  ஒரு வினைச்சொல்லும் அதனோடு ஒரு வினைஎச்சமும் கூட்டி இச்சொல் புனையப்பட்டுள்ளது.  இப்படிச் சொல்வது எளிய முறையாகும்.  சமஸ்கிருதத்தில் மற்றும் பாலி மொழியில் வினை, இன்னும் எச்சங்களிலிருந்தும் சொற்கள் புனைவுறும்.

இன்னொரு முறையில்:

நில் என்ற சொல்லில்  இரண்டு எழுத்துக்கள். இதில் கடைசி எழுத்துக் குறைந்தால் அதற்கு கடைக்குறை என்று பெயர்.  அடுத்த சொல் கண் என்னும் சொல். கண் என்ற சொன் முதலெழுத்து நீண்டுதான்  காண் என்றாகி வினையானது. சொற்களை நின்று காணுதல் அதாவது ஆராயாமல் செல்லாது  சற்று நின்று மொழிபொருள் காரணம் காணுதல். இதன் பொருள் விரித்தால், சென்றுவிடாமல் நின்று கண்கொள்ளப்படுவது என்றாகிறது.  கண்ணிற் கொள்ளுதலாது கண்டுகொள்ளுதல்.   முடிவில்:  நி + கண்  + து >  நிகண்டு ஆகும்.