சனி, 19 அக்டோபர், 2024

கேவலம் சொல்

 கேவலம் எனும் சொல்லை அறிவோம்.  இதற்குக் கேடு, கேதாரம் என்பனவும் ஒப்பீடு செய்வோம்.

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டவனாய் ஒரு வலிமை பொருந்திய நிலையில்தான் இருக்க (வாழ) விரும்புகிறான், ஏதேனும் தாழ்வான செயல்களில் ஈடுபட்டு அதனால் பேர்கெட்டுப் போனவனும் அது பிறருக்குத் தெரியாதவாறு தன்னை மறைத்துக்கொள்கிறான். தன்னைத் தாழ்வாக நினைப்பவன் இல்லாமற் போய்விட்டாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சியே. தனது முன் கெடுவினைகளை அறியாதவனுடன் பழகும்போது அவனுக்கு மகிழ்ச்சிதான். இதைத்தான் வலிமை பொருந்திய நிலை என்று நாம் கூறுகிறோம். இந்த நிலைக்கு ஒரு கெடுதல் வந்தால் இதுதான்  வலம் கெட்ட நிலை ஆகும்.  இது "கெடு வலம்" மேவிய நிலை ஆகும்,   கெடுவலம் என்பது பின்னர் கேவலம்  என்று திரிந்து ஒருசொன்னீர்மை பெற்றது.  டுகரம்  (டு) வல்லொலி ஆகும்.. சொல்லை மென்மைப்படுத்த  ( மெலித்தல் மேவ)  டுகரம் வீழ்கிறது. கெடுவலம் >  கேவலம்.  இதுபோல் வல்லொலி கெட்ட இன்னொரு சொல்: கேது,  அதாவது 

வானத்தில் பார்த்தால் ஏழு கிரகங்கள் தாம் தெரிகின்றன.  சோதிடத்தைச் சரியாகச் சொல்வதற்கு ஒன்பது கிரகங்கள் வேண்டும்.  இரண்டு தெரியவில்லை,  இவற்றுக்குக் காரணப்பெயர்களைக் கொடுத்தார்கள்.  ஒன்று இராகு.  இன்னொன்று கேது,  பெரும்பாலும்  ( எப்போதும் நிகழ்வதில்லை)  கெடுதல் செய்வது கேது.  கேது கெட்டிருந்தால் மங்களம் இல்லை. திருமணம் தொடர்பானவை நிகழவில்லை என்றால் கேது கெட்டிருக்கிறது என்று சொல்வர். மணவாழ்வு கெட்டிருந்தால் கெட்டிருப்பது கேது,  இதற்குப் பெயரே கேது -  கெடுவது  என்பதிலிருந்து வந்த பெயர். கெடுப்பது எனினுமது,  கெடு என்பது கே என்றே திரிந்தது.  கேடாவது என்பதில் டாவ என்ற எழுத்துகள் மறைந்தன என்றும் கூறுதல் கூடும். இப்போது கேவலம் என்ற சொல்லின் திரிபுடன் ஒப்பீடு செய்து அறிந்துகொள்ளவும்,

கேது மங்களம் தருவோன் எனப்படுவதால்,  கே என்பது கேடிலது என்பதன் சுருக்கமாகவும் கொள்ளலாம்,  சிலசொற்கள் இருநிலையும் குறிக்கும்,  இதற்குக் காரணம் ஓரெழுத்தே முதலில் வந்தமை. இன்னொரு சொல்: கேதாரம் - கேடின்மை தருவது அல்லது கெடுதலை நீக்குவது.  கே - கேடின்மை; தாரம் - தரும் தொழுதலம். இதுபோல் வருவதால் இச்சொற்கள் முற்றிலும் இடுகுறிகளாகி விடுகின்றன.  அதனால் மொழிக்கு ஒரு தொல்லையும் இல்லை,  வேறு மொழிகளில் வெறும் ஒலிக்குறிப்புகள் மட்டுமே சொற்களாகிவிட்டன. தமிழில் இயற்சொற்கள் அல்லாதன விலக்குறுதல் வேண்டுமென்பது  புலவர் வாதம்.  இவ்வாதம் காலத்திற்கு ஏற்றதன்று.  ஒரு சொல் தமிழா அன்றா என்பதற்குக் காரணம் அறியாமை ஒரு பொருட்டன்று. ஏனெனில்  " மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில். எல்லாச் சொற்களும் காரணம் அறியப்பட்டன என்பர் தமிழ்ப்புலவர்.   பலசொற்கள் ஆய்வின்றி அறியப்படாமையின்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 17 அக்டோபர், 2024

திரு சிங்கப்பூர் சிவாஜி அவர்கள் மறைவு இரங்கல்

 






"சிங்கப்பூர் சிவாஜி"யாகச்    சீரி  னோடு

சிங்கைதனில் தங்குபுகழ்ச் சொந்தக் காரர்!

பெண்கள்- ஆ  டவர்பிள்ளை எப்பா லார்க்கும்

பண்களிலே இலயம்தந்தே அமிழ்ப்பா ராவார்

கண்கள்நீர் சொரிந்திடவும் பாடும்  வல்லார்

தண்தமிழால் மகிழ்வந்தும் பாடிச் செல்வார்!

அண்மையிலே அவர்நம்மைப் பிரிந்து போக

ஆனதற்கே இரங்குகிறோம் என்றே காண்போம்.


மாரடைப்பு என் கின்ற நோயைப் போல

மனிதர்க்குத் தீங்கிழைத்த நோயும் இல்லை.

ஓரடைப்பும் இல்லாத திறந்த உள்ளத்

துயர்ந்தோரைக் காப்பதற்கும் இல்லா நெஞ்சம்

சீருயர்ந்த கூர் இயற்கை தேர்ந்த தென்றோ?

செயலிழந்து கவலையிலே மனிதர் யாரும்.

பாரிலிச் சி   வாஜிபாடும் வாரி  வீச்சும்

ஓர்நாளே இனிவருமோ என்றோ காண்போம் ?


---- சிவமாலா.


கவிதையில் ஒரு என்று வருமிடத்தில் ஓர் வரலாம்.


காணொளி; திரு. P. முருகையன். 

நன்றி




புதன், 16 அக்டோபர், 2024

குயவர்/குலாலர் - மண்வேலையர்கள்.

 இரும்பு பொன் முதலிய கண்டுபிடிக்கப்படுமுன் மண்வேலை செய்து தரையைக் குத்தித் தாம் பயன்படுத்திக்கொள்ளும் பொருள்களை மக்களுண்டாக்கிக் கொண்டனர்.  இப்போதுபோலவே  நாகரிகம் என்பது கண்டுபிடிப்புகளின் முன் செல்லும்  திறன் எதுவும் கொண்டிருக்கவில்லை. வேலைக்காரர்கள் அல்லது சாதிகள் பெருகுவதற்கு அவ்வப்போது மனிதன் அடைந்த முன்னேற்றமும் ஒரு காரணமாகும். உள்ள சாதிகளை அல்லது தொழிலர்களை ஏற்றுச்செல்லும் நிலையில் சமுதாயம் நின்றுவிட்ட படியால் ,  புதுத் தொழிலர்கள் சில புதிச்சாதிகளாக ஏற்புடைமை கொள்ளவில்லை. பழமை போற்றும் பண்பும் இதற்கு ஒரு காரணமாகும்.

மண்குழைத்துப் பாத்திரங்கள் செய்து புழங்குவது ஒரு மிக்கப் பழமையான தொழிலாகும்.

குசவனாகிய ஏலன் என்பவன் ( குச ஏலா)  இத்தகைய ஒரு தொழிலாளி,  திருநீலகண்டன் என்னும் குயவரும்  இத்தகையவர்.   குச என்பது குய என்று திரிவது  சகர யகரத் திரிபு.   வாசல்> வாயில் என்பதிலும் இதை உணரலாம்.

வேய்தல் என்பது அணிதல் என்றும் பொருள்தரும்,  வேய்> வேயம்> வேசம்> வேஷம் என்பதிலும் சகர யகரத் திரிபைக் காணலாம்.  வேஷம் ( வேயம் வேசம்) என்பது அணிகலன்களால்  அடையாள மாறுபாடு காட்டுவது ஆகும்.

பல் - பய்,   பலன்>< பயன். குல் > குய் என்றும் ஆகும்  குல் ஆலன் > குய் அவன்.

ஆல் என்பது கருவிப்பொருளுடைய ஒரு பண்டை உருபு   கத்தியால் வெட்டினான் என்பதில் ஆல் என்பது கருவி குறித்தது.  குலாலன் என்பதில் இந்த ஆல் உள்ளது. ஆல்+ அன் > ஆலன்.  ஆளன் என்பது கருதத்தக்க வேறுபாடு உடையதன்று,  பொருள் ஒன்றுதான்.

குய என்பது பேச்சுத் திரிபு போல் தோன்றினும் இது ஒரு வெளித்தோற்றமே.  ஆழ்ந்து ஆய்ந்தால் குய - குல் என்பன தொடர்புடையனவாகும்.

குயவர்கள் ஒரு காலத்தின் முக்கியத் தொழிலர்களாக இருந்தாலும் அவர்களின் முதன்மையில் சரிவு ஏற்பட்டது புதிய கண்டுபிடிப்புகளாலேதாம், இரும்பு பொன் என்பன பின் வந்து முன் இடம் கொண்டவை ஆகும், 

குயவர்கள் முன்னர் பூசாரிகளாகவும் இருந்துள்ளனர்.  இப்போதும் சில கோயில்களில் உள்ளனர் என்று தெரிகிறது.

குயவர் குபேரராகவும் வாழ்ந்ததுண்டு. இதை மகாபாரதம் காட்டுகிறது.  குவை என்றால் குவியல்,  செல்வக் குவியல்.  குவை> குபை. இது வகரப் பகரத் திரிபு. குபை+ ஏறு + அன் > குபேரன்.  சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும்,    ஏறிய செல்வக் குவியலை உடையோன்.  ஏறுதல் - மிகுதல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்