புதன், 8 மே, 2024

கோவிந்தன் கோயிந்தன் சொல்

 தெய்வப்பெயராகிய கோவிந்தன் என்பதையும்  கோயிந்தன் என்பதையும் இன்று ஆய்ந்தறிந்து கொள்வோம். 

பல்வேறு இந்திய மொழிகளில் இது சில திரிபுகளை அடைந்து வழங்கும். கோவின்ட, கோபின்ட, கோபின்ட். கோவின்ட் என்பன சில திரிபுகள். பகரத்துக்கு வகரம் வருவது பல மொழிகளிலும் காணப்படும் திரிபுவகை. இந்தத் திரிபுகள் சொல்லில் எந்தக் கருதத்தக்க  பொருள் மாற்றத்தையும் உணடாக்கிவிடவில்லை.

கோவிந்தன் என்றால் மாடுகள் மேய்ப்பவன் என்ற பொருள் தரப்படுகிறது.  கண்ணன் அல்லது கிருஷ்ணன் இளமையில் மாடுமேய்க்கும் வேலையைப் பார்த்ததனால் இப்பெயர் பெற்றான் என்பர். ஆனால் கண்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்கள் அவன் நீல அல்லது கருப்பு நிறத்தினன் என்பதனால் ஏற்பட்டது என்பர். மாடுகள் மேய்ப்பவன் என்ற  பொருள் தமிழுக்கும் ஏற்புடையதே.

கோ + இன் + து  + அன்

கோ = மாடு(கள்)

இன் - உடைமை காட்டும் இடைச்சொல். உருபாகவும் வருவது.

து -  இடைநிலை.

ஆண்பால் விகுதி.

ஆகவே மாடுகளை உடையோன் என்பது பொருளாகிறது.

இவ்வாறு பிரிக்காமல் வேறு விதாமாகப் பிரித்து இன்னும் சிறந்த பொருள் கிட்டுகிறதா என்று பார்க்கலாம்.  ஏனென்றால் நெடுங்காலமாகப் பலவாறு பிரித்த சொல்தான் இது. தன் என்ற தமிழ்ச்சொல்லே இறுதியில் நிற்பதாகக் கருதி,  தன் கோக்களே (  மாடுகளே) தான் மேய்த்தவை என்ற பொருள் விளங்குபடியாகத் தன் என்ற சொல்லே இறுதி என்று முடிக்கலாம்,  எல்லாச் சொற்களுமே ஒரு விகுதியில்தான் முடிதல் வேண்டும் என்று எந்த இலக்கணமும் விதிக்கவில்லை. எனவே தன் என்பது தன்னைக் குறிப்பதாக, அதாவது பரமாத்மாவைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இதன் பொருள் என்னவென்றால் பரமாத்மா தன் பற்றர்களுக்குத் தானே வழிகாட்டி ஆகிறான் என்பதுதான். மாடுகள் என்பவை பற்றுடன் தன்னில் வந்து சேர்ந்தோர் ஆவர். இவ்வாறு அணியியற் பொருளிருக்கின்ற படியால் தன் என்று விடுதலும் சிறப்பே ஆகும். பற்றர்களைப் பின்னர் பெண்காளாக்கியது ஏனென்றால் பற்றின் ஆழத்தை வெளிக்கொணர்வதற்காகத் தான்.  ஆகவே மாடு பெண்கள் என்பவை எல்லாம் பற்றின் திறமும் இறைவனின் ஏற்பினையும் காட்டுவதே நோக்கமாகும்.

கோயிந்தன் என்றும் கோவிந்தன் என்றும் யகரம் வகரம் ஆகிய இரு உடம்படுமெய்களும் வரும், இவற்றுள் பிறமொழிகள் வகரத்தையே தேர்ந்தெடுத்துக்கொண்டு உள்ளன.

இன் என்பதற்கு இனிமை என்ற பொருளை எடுத்தால்  கோக்களுக்கு இனியவன் கண்ணன்;  கண்ணனுக்கு இனியவை கோக்கள் என்று இன் என்பது ஒரு நடுநாயகமாய் ஆய்விடும் சொல்லாகிவிடும்.  இது தமிழால் மட்டுமே வரும் பொருள் . இது வெகுமானிக்கத் தக்கதாகும்.

இடையனும் மாடுகளும் என்னும் பொருள்மரபு பிற மதங்களிலும் பரவி நலம் விளைத்துள்ள கருத்தியல் ஆகும்.  இதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம்

கருநிறத்தோனாகிய கடவுள் கண்ணன், வடநாட்டில் கொண்டாடப் பட்டாலும் ஒரு காலத்தில் தமிழர் நாவலந்தீவு முழுமையும் பரவியிருந்தனர் என்பதைக் காட்டும் அடையாளமாகக் கருதுவதற்குக் காரணமுள்ளதென்பதை அறிக .

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





தச்சுப் பொருட்கள் காத்து உலகுகாப்பீர்.







எழுசீர் விருத்தம் 


அச்சுப் புரைய அழகைச் தெளித்தார் அருகினில்  வைத்தார்  நமக்குநல்ல

தச்சுப் பொருட்கள் சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே

வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை,

எச்சம் இவற்றை  அழகாய் உருப்படுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.


துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் அழகுத்  திரவமிட்டார்

அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார்.

பணிந்தே இவைதமை எம்மிடம் சேர்த்தார் படத்தினில் காண்பிரோ எம்முடனே

இணைந்தே செயல்பட வாரீர் மரந்தமைக் காப்பீர் திருந்தும்  எழுமுலகே.


அச்சுப் புரைய --   அச்சுப்  போன்ற;  அழகைத் தெளித்தார் -  காட்சிக்கினிமையை உண்டாக்கினார்;  அருகினில்  வைத்தார் -  எம்மெதிரில் எடுத்து வைத்துக் காட்டினார்;   நமக்குநல்லதச்சுப் பொருட்கள் - இவை நமக்கு நல்ல மரவேலைப் பொருட்கள் ஆயின;    சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே -  சளி நோய் காரணமாக கவனிக்க முடியாமல் கெட்டுவிட்ட பிற்காலத்து; வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை--- பயன்பட முடியாமல் போய் அப்புறப்படுத்த வேண்டிய நிலை வந்துற்ற காலத்தில் ; எச்சம் இவற்றை  அழகாய் உருபபடுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.-  எடுத்தெறிந்தவை போக இவற்றை அழகுபடுத்தி எமக்களிப்பேம் என்று துணிவு கொண்டார்.

துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் ---- அழகு படுத்தத் துணிந்த அவரும் சில நாட்களில் அவற்றை அழகு படுத்தினார்; அழகுத்  திரவமிட்டார் -- அழகிய திரவப் பூச்சு செய்தார்; அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார். -  ஒரு பொட்டு அணிந்த பெண்ணைப் பார்த்த அழகைப் போல இவற்றை கவினாக்கினார்; பணிந்தே இவைதமைஎம்மிடம் சேர்த்தார் -  மிக்கப் பணிவுடன் இவற்றை எம்மிடம் முன்னிலைப் படுத்தினார்;  படத்தினில் காண்பிரோ ---  படத்தில் பாருங்கள் ; எம்முடனே இணைந்தே செயல்பட வாரீர் -  நீங்களும் எம்முடன் சேர்ந்து கொள்ளுங்கள்;  மரந்தமைக் காப்பீர் -  இயற்கையில் வளரும் மரங்களைக் காப்பாற்றவேண்டும்;   திருந்தும்  எழுமுலகே.- அப்போது உலகம் திருந்தும்.

எச்சம் -  எறிந்தன போக மிஞ்சியவை. வச்சு - வைத்து, பேச்சுவழக்குச் சொல். காண்பீரோ என்பது காண்பிரோ என்று குறுகிற்று.

புதிய புதிய மரச்சாமான்கள் வாங்கிவைத்தால் அவற்றைச் செய்ய பல மரங்கள் தேவைப்பட்டு, காடுகள் அழியும். காடுகளைக் காக்க முனையவேண்டும். அதுவே கவிதையின் செய்தி.







அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சாமான் கள் என்று கள்ளைத் தனியாகத்
தான் எழுதமுடிகிறது. உடனே திருத்தினால்
அது சாமாங்கள் என்று தானே திருந்திக்கொள்கிறது.
(தன்திருத்தம்), ஒருநாள் கழித்து இவற்றை ஒன்று சேர்த்தல்:
அப்போது இந்தத் தொல்லை வரவில்லை.

திருத்தங்கள் உடன் நடைபெறா என்று உணர்க.

திங்கள், 6 மே, 2024

அட்சரமும் சரசுவதியும்

 இந்நாட்களில் சரம் என்ற சொல் பெரிதும் பேசுவோரால் அருகழைக்கப்படுவதில்லை.  ஒருகாலத்து அது கவர்ச்சிச்சொல்லாய்ப் பேசுவோரிடை இருந்தது,  அட்சரம் என்ற சொல்லில் அது இருக்கிறது. இவற்றைச் சரமாக எழுதி அழகுபார்ப்பதற்குத் துணைப்பொருட்கள் சிலவே இருந்தன.  சரம் ஒரு தேவியினால் சாத்தியமாயிற்று என்று நினைத்தனர்.  அந்தச் சரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியே அவளையும் அழைத்து அறிந்துகொண்டனர் அவள் சொந்தமாகவே அங்கு வந்துவிட்டவள். சரத்தில் தானே தோன்றியவள் என்ற பொருட்பட அவளுக்குப் பெயரும் இட்டனர். பிறவிப்பயன் என்பதென்ன?  இதை அறியானாயின் அவன் மடையன்.   ஆனால் இவர்கள் மிக்க அறிவாளிகள். மகிழ்வுக்கோ குறைவில்லை.

பல சிறு கட்டிகளை வரிசையாக அடுக்கிக் கோத்து  ஒரு மாலை செய்தனர். வரியடுக்கில் வைத்த மாலை. அடுக்கமுறு மாலை.  ஒரு கடின ஒலியை விலக்கி ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டனர்.  அந்தச் சொல் அக்கமாலை. அக்கமாலை உண்டான மகிழ்வில் எழுத்து ஒன்றை இணைத்துக்கொண்டு, அதைப் புகலுறு புனைகுமாலை என்றனர்.  அழகே அழகு. தண்டியாசிரியன் சொன்ன சித்திரகவிகள் போலப் புனைந்துகொண்டனர்.

அறுக்க அருகில் வருவதுதான்  அறுக்கரம்.   அறுக்க அறுக்க அருகி வந்து வேறு பொருள் பயக்கும்.  அறுக்க அருகில் ----   அக்கரம். அழகுறு சொல்லமைப்பு.  வர வர வர அது வருவது.  அண் அன் அனமாகும்.

புரிய நேரமாகக் கூடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.