ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

ஆச்சாரியன்


ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும். எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது. ஆ(சி)ரியன் எனக்் காண்க.  வாத்தியார் அறிவாளி என்பதை ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி, ஆசிரியறிவாளி என்றாக்கி, அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி, ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் இச்சொல் வந்துவிடுகிறது. வேறன்று அது.

ஆசிரிய ஆரியன்  
ஆச்சாரியன்.

ஆசிரிய என்பதில் ஆசி என்பதை மட்டும் எடுத்துக்கொள்க.  தமிழில்  ஆச் என்பது ஏற்புடைய சொல்லுரு  அன்று.

ஆ(ச் இ) ஆரியன்.  இவற்றுள் இ என்பதை விடுக.
ஆச்  ஆரியன்
ஆச்சாரியன்,  ஆச்சாரிய  என்றும்   வரும்.  பூசைமொழியில் அன் என்ற ஆண்பால் ஒருமை ஒழிக்கப்பட்டது.   இல்லை.

மேற்கண்டவை ஒலிமுறையில் விளக்கப்பட்டன.  தமிழ்ச் சந்தி முறையிலன்று. இலக்கணத்தின்படியுயன்று, இதுபோலும் சொல்லாக்க இலக்கணம் தமிழ்நூல்களில் சொல்லப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.  ஏனென்றால்  தமிழ் இலக்கணம் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவும் இலக்கணம்.  சொல்லாக்கம் சிறிதளவே சொல்லப்பட்டது. சொற்களை ஆக்கிக்கொள்வதற்கு உதவ உங்களுக்குப் போதிக்கப்படும் கலையோ தந்திரமோ அன்று.

தமிழ்ப் புணரியலின்படி,  ஆச்சாரியனாசிரிய  னென்று  வரவேண்டும்.  சொல் மிக நீண்டுவிட்டது. தமிழ் தமிழ் என்று  அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூவுதலின் மூலமாகத் தங்கள்  அக்கறையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  தமிழைப் படிப்பவர்கள் குறைவு. இந்த நிலையில் பத்து எழுத்துக்கள் உள்ள ஒரு சொல், சரியன்று என்று  ஒதுக்கப்படலாம்.   சொற்களைக் குறுக்கிச் சிறு புனைவுகளாக்கினால் எடுத்தாளுவதற்கு எளிமையாக  விருக்கும்.  யாம் எழுதும்போதும் நீண்ட சொற்கள் வந்துவிடுகின்றன.  இத்தகைய நிலைகளைக் கருதித்தான் இடைக்குறை முதலிய வசதிகள் கவிதை எழுதுவோருக்கு உதவ உண்டாக்கப்பட்டன. இவையே கருதித்தான்  பண்டை நாட்களில் சொல்லாக்கத்திலும் இந்நெறி கடைப்பிடிக்கப்பட்டது,  தமிழ்க் கவிதைகளில் இசை முதன்மை வாய்ந்தது ஆதலின் அது முறியாமல் ஒழுக, சொற்கள் சிறியவாக்கப்பட்டன.   எ-டு:  கற்றதனால்  ஆய பயனென்கொல்?  என்ற தொடரில்  ஆகிய என்று எழுதினால் இசை முறிந்து வெண்பா கெடும். பண்டை நாட்களில் நெடுஞ்சொற்கள் வழக்கிலும் அருகியே வந்தன. பூசைமொழி அன் விகுதியையும் கொள்ளவில்லை யாதலின்,  ஆச்சார்யா என்று மேலும் சுருக்குண்டது.

பூசைமொழியிலும் சொற்கள் அவர்களின் முயற்சியையும் கடந்து,  நீண்டுதான் விட்டன.  இதனால் கரட்டியல்வு மிகுதியாகவே,  குரு நானக் முதலியவர்கள் குருமுகி முதலிய மொழிகளைக் கையாண்டனர்.. இதனால் சில மொழிகள் ஆற்றொழுக்குப் போலும் நடையை அடைந்தன. இவையாவும் நலம் கருதியவையே  ஆகும்.

ஆசிரியன் என்ற சொல்லே சகர வருக்க எழுத்துகள் இரட்டித்து ஆச்சாரியன் என்று வந்தது என்பது இன்னொரு கருத்தாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

சனி, 13 ஏப்ரல், 2024

Happiness and Sadness ( by Poet Saran)

 


There are moments of intense sadness, 

Of bawling your eyes out, 

Wet paper below your hands,

Scribbles of hatred and disenchantment, 

Staring into the sky, isolated and ostracised.

Every muscle hurting to move,

Every movement calling out for death,

The quietness all around you but endless voices in your head,

The atmosphere of desperation and despair, 

Of hatefulness and regret,

The singularity of a big xxxk you.


But there are also moments of intense happiness, The sun shining brightly down on you, 

The moon glowing in the darkness, 

The wind grazing by your skin, 

The shadows of movement and progress, 

Platonic loves of gesture and admiration, 

The warmth and contentment behind a laughter, The elation of a kinder mind and blissful quietness.


There will be moments of both, 

Co-existing together, 

Taking turns at times, 

Looping in oppositional forces, 

Of yin and yang, 

Of waves and lulls,

Of stillness and being, 

the totality of you.

வியாழன், 11 ஏப்ரல், 2024

தனுஷ் என்ற சொல்தோன்றுதல்

 இன்று தனுஷ் என்ற சொல் எவ்வாறு தோன்றிற்று என்று அறிந்துகொள்வோம்.

தன்னில்தான் இயங்கும் நிலைதான் தனுஷ் என்று சொல்லப்படுதிறது.  ஒவ்வொரு இராசிக்கும் ஒரு தன்மை,  குண இசைவுகள் முதலியன இருக்கும் என்பது உண்மையாயினும்,  தனுஷுக்கு இது  சற்று நிறைவை ஒட்டி நிற்கிறது என்பர்.உங்கள் இருகைகளாலும் ஒரு பூனையைத் தூக்கி கீழே போட்டுவிட்டாலும்  அது  கண்டபடி போய் விழாமல் ஒரு தந்திரத் தாவல் மன்னன்போல் நாலு காலும் சமநிலைப் படும்படியாக விழுந்து நிற்கும். ஓர் எருமையால் தூக்கி எறியப்பட்ட சிங்கம்  கண்டமாதிரி போய்த் தரையில் விழுகிறது.  அதனிடம் தந்திரத்தாவல் இல்லை. தாக்கும்போது முன்னங் கால்களால் அடித்துக்கொண்டு வாயினால் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. வீழ்ச்சியில் தந்திரம் இல்லை.

தனுஷ் என்ற சொல் "தன் உய்வு"  என்ற இரு தமிழ்ச் சொற்களிலிருந்து வருகிறது. அல்லது அதற்கான தமிழ்ப் பதத்தின் சமகாலப் புனைவாதலும் கூடும். ஆகவே, தன் உய்வு > த(ன்)னுய்வு> தனுசி/(வு)> தனுஷ்  ஆகும்.  இது தனுர் என்றுமாகும். உர் என்பது உரு என்பதன் சுருக்கம்

தனுஷ்கோடி (ஊர்ப்பெயர்) என்பதில் கோடி என்பது மூலை.  கோடு> கோடி, இது வளைவுப் பொருள்.  ஒரு நேர்கோட்டின் முடிவு  அதன் வளைவுதான்.  தனுஷ்கோடி என்பது தானே நிற்கும்  அல்லது தனியாக நிற்கும் ஒரு நிலப்பகுதி,  திட்டு, தீவு.   தீவு என்பது நிலத்தின் தீர்வு அல்லது முடிவு.  தீவகம் என்பதும் தீவுதான்.  தனிநிலம்,  அல்லது பிற நிலப்பகுதிகளைச் சார்ந்து நில்லாத, ஒரு தனிப்பகுதி.  நாவலந்தீவு என்றால் பேச்சில் வலிமை காட்டிய தன்மை இங்கு வாழும் மக்களுடன் முடிந்தது,  மற்றவர்போல் அதிகம் பேசிக் கொள்கைபரப்புச் செய்யாதவர்கள் என்றுபொருள்.  புத்தமதத்தைச் சீனாவுக்குப் போதித்தவர்கள் இந்தியர்கள். சீனா அதைப் பிறருக்கு எடுத்துரைத்தது குறைவு.  இந்தியர்களே முன்னணியில் இருந்தனர்.  நாவற்பழம் கிட்டிய அழகிய இடம் என்றும் பொருள்.  தீவகம் + அல்+ பு + அம் > தீவகற்பம்  ( தீவுக்குறை.).  தீவகம் அல் =  தீவு அல்லாத. ஒருபக்கம் நிலத்தொடர் உடைய,

உய்>( உயி)> உசி.  இது யகர சகரப் போலி.   ஒ.நோ:  பசு > பை.  (பசுந்தமிழ் > பைந்தமிழ் )

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்