சனி, 8 ஏப்ரல், 2023

நினைவெலாம் துர்க்கை அம்மன்

 

படத்தில்: திருமதி வனஜா  இளந்தலைமுறை மகளிருடன்.


துர்க்கை அம்மனே தூய நினைவெலாம்
துர்க்கை அம்மனே தூங்கும் பொழுதிலும்
துர்க்கை அம்மனைத் தூக்கி வினைசெயும்
துர்க்கை மாமகள் மறைந்த தெங்ஙனே?

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

பாட்டி பிள்ளை பேரப்பிள்ளைகளுடன்

 





யாருடன்  பேசுவ  தெனினும் மகிழ்வுதான்
சீருடன் சொல்வார் தெய்வக் கதைகளை!
ஏரியின் நீருடன்  இசைந்திடும்  குளிர்போல
வாரியே  வழங்குவார்  வண்மை நாவினார்.


(இவர் தெய்வக் கதைகளைப்   பேசி ம்கிழ்வார்.
இக்கதைகள் குளிர்ச்சி தரும் கேட்பார் மனத்துக்குள். என்பது பொருள்)



வெள்ளி, 31 மார்ச், 2023

பேரப்பிள்ளைகள் அருகில் வேண்டும் [updated]

வெண்பா

 யாரேதாம்  நீரென்ற  போதிலுமே  உந்தம்நற்

பேரப்பிள்  ளைகளை  நீங்கியே  ---- ஓரிடத்தும்

நிற்பீரோ  கண்மூடி  நித்திரை  கொள்வீரோ

கற்பீரோ  பாடம்  புதிது.



பொருள்:

எத்தனை அகவை ஆகிவிட்ட யாராக இருந்தாலும்,  உம்  பேரப்பிள்ளைகளை நீங்கி,  இன்னோரிடத்திற் சென்று தங்கி,  உம்மால் நித்திரை அல்லது உறக்கம் கொள்வதும்  கடினமே.  அவர்கள் அருகிலிருக்கவேண்டும்.  அது  உம் உடற்பயிற்சிக்காகத் தங்குவதானாலுமே.  இதுவே இக்கவிதை சொல்வது.

கலித்தாழிசை.

வீட்டுக்குப் போக  விரும்பிய  பாட்டிதனை

நாட்டுக்கு நல்ல மருத்துவர் விட்டிடாமல்

காட்டுக்குப் போவென்றோ கழறினார் பாவமரக்

கூட்டுக்குள் போவென்ற கொள்கை நலமாமே.









paatti maraNam