வெள்ளி, 19 நவம்பர், 2021

கோவிட் ஆனாலும் குற்றவாளிகள் ஓய்வுகொள்ளவில்லை(வன்புணர்வு)

 கோவிட் சுழலில் நாடு சிக்கியிருக்கலாம்,  குற்றம்செய்வோர் தங்கள் நடபடிக்கைகளில் குன்றிவிடவில்லை.  இங்கு குறிக்கப்படும் குற்றவாளிக்கு நீதிமன்றம் சரியான தண்டனை வழங்கியுள்ளது. செய்தியைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

https://theindependent.sg/man-force-feeds-alcohol-to-13yo-and-brutally-rapes-her-repeatedly-for-2-hours-at-kallang-riverside-park-appeals-for-lighter-sentence/ 

“The victim suffered serious harm as he had used significant violence against her in the course of the assaults... in addition, the appellant exhibited significant opportunism, took deliberate steps to conceal his offences.



பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

வியாழன், 18 நவம்பர், 2021

பாதிரி என்னும் தமிழ்ச் சொல்

 கிறித்துவ மதப் பூசாரிகட்குப் பெரும்பாலும் "பாதிரியார் " என்று சொல்வதுண்டு.  இது கிறித்துவ மதம் பின்பற்றப்படும் நாடுகளில் பூசாரிகட்கு வழங்கும் பெயர். கத்தோலிக்கர் வாழும் இத்தாலி, ஃச்பெய்ன் முதலியன எடுத்துக்காடுகள்.  இந்நாடுகளில் பூசாரியைப் "பாட்ரி" என்பதால், தமிழரும் அதைப் பின்பற்றி  "பாதிரி" என்றனர். இந்த அயற்சொல் தமிழில் சற்று மென்மையாக ஒலிக்கப்பட்டு வழங்கிவருகின்றது. இது எழுத்துப்பெயர்ப்புச் சொல் ஆகும்.

பாதிரி என்று ஒரு தமிழ்ச்சொல்லும் உள்ளது. இது ஒரு பொன்னிறமான மலரையும்  செந்நீலமான இன்னொரு மலரையும் குறிக்கும்.  நம் ஒளவை மூதாட்டி,  இப்பாதிரி மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்பதை ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். சொல்லியும்  அல்லது ஏவினாலும் செய்யாதவனுக்கு இது உதாரணமாகும்.  பூக்காமல் காய்ப்பது பலாமரம்.  பூத்துக் காய்ப்பது மாமரம்.  பூத்தாலும் காய்க்காது பாதிரி என்பது.

பாதிரி ஒரு பூவைக் குறிக்குமானால் அது தமிழ்ச்சொல்.  பாதிரி என்பது கிறித்துவ ஐயரைக் குறிக்குமானால் அது அயற்சொல்லின் எழுத்து அல்லது ஒலிபெயர்ப்பு.  (Padri).  கிறித்துவக் குருக்கள் என்று சொல்வதுண்டா  என்பதை நேயர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வரும் இடுகைகளில் ஒன்றில், மேற்றிராணி, அதிமேற்றிராணி என்று வரும் சொற்களின் அமைப்பை ஆராய்வோம்.  இதை நீங்கள் அறிந்திருந்தாலும் பின்னூட்டம் இட்டுத் தெரிவிக்கவும்.

ஆனால் "பா" என்ற ஐரோப்பியச் சொல்,  அப்பா என்பதன் தலையிழப்புச் சொல் ஆகும். [ (அப்)பா.]

எங்கள் நன்றி.

மெய்ப்பு பின்.



செவ்வாய், 16 நவம்பர், 2021

சிங்கப்பூர்க் குடியுரிமை மெலிவுறும் அறிகுறியா?

 குடியுரிமை சிங்கையிலே பெறுவதற்கே

கூடிடுவர் அண்டையினர்   என்பதெலாம்

நெடிகுறைந்த காயமுறை  கலயமென்றால்

நீள்வருநாட் பின்புலத்தின் காட்சியென்றே

படியறையும் தாளிகைகள் கூறுவதாய்ப்

பாரிலினி நடைபெறுமோ பகர்ந்திடுவீர்

நொடியினிலும் நீங்கிவிடாக் குடிமையொளி

நொங்கிவிடும் என்னுமொரு தெரிதிறமோ?


செல்வ முடையோரும் சேரோம் எனநீங்கின்

சொல்வதற் கன்னதும் சோர்வுதரும் --- நெல்லதிலே

நீங்கின் உமிநன்று; நேர்நீங்கும் தீயோரே;

யாங்கும் விழைவோம் நலம்


குடியுரிமை -  சிங்கப்பூர்க் குடியுரிமை

அண்டையினர் -  அருகிலுள்ள நாட்டினர்

நெடிகுறைந்த -  வாசம் நீங்கிக்கொண்டிருப்பதான

காயம் -  பெருங்காயம்

உறை -  உள்ளிருக்கும்

கலயம் -  சிறுபாத்திரம்

நீள்வருநாள் -  நீண்ட பிற்காலம் இனிவருவது

பின்புலத்தின் காட்சி - பின் திரையில் தெரியும் உண்மை

படியறையும் -  செய்தியைக் கேட்டறிந்தவாறே சொல்லும்

தாளிகைகள் - பத்திரிகைகள்

பகர்ந்திடுவீர் -  சொல்லிடுவீர்

நொடி -  செழிப்பும் வருமானமும் இல்லாத காலம்

குடிமையொளி - குடிகளுக்கு உள்ள பீடும் புகழும்

நொங்கிவிடும்  -   ஊட்டம் குறைந்துவிடும், மெலிந்துவிடும்

தெரிதிறமோ -  அறிகுறியோ


சேரோம் -  " நாங்கள் குடிகளாகச் சேரமாட்டோம் ( என்று)"

அன்னதும் - அத்தகையதும்

நெல்லின் உமி நீங்கினால் அது நல்லது; அதுபோல் தீயோர்

நீங்கினாலும் நல்லதே என்பது இப்பாடல்.


இது ஒரு செய்தியின் அடிபடையிலெழுந்த கவிதை.

அறுசீர் விருத்தம்.  இதற்கான இதழ்ச் செய்தியை

இங்கு சொடுக்கி வாசிக்கவும்:

https://theindependent.sg/gong-li-to-renounce-singapore-citizenship/