திங்கள், 8 நவம்பர், 2021

திரவநிலை

 நில் என்பது ஒரு வினைச்சொல்.  கால் இருக்கும் இடத்திலிருந்து நகராமல் அவ்வாறே (உட்காராமல் கிடக்காமல் ) இருபதைத்தான் நில் என்ற வினைச்சொல் குறிக்கிறது. நில் என்ற சொல்லைப் பல பொருட்சாயல்களில் பயன்படுத்தலாம்.  இதை  எழுத்துமொழியில் அவ்வளவு விரிவாகப் பல சாயல்களில் பயன்படுத்துவதில்லை.  " அவர்களின் வீட்டில் ஏழு பசு(க்கள்)  நிற்கின்றன"  என்பர்.  இவ்வாறு சொன்னால், " நின்றுகொண்டேதாம் இருக்கின்றனவோ., படுப்பது தூங்குவது எல்லாம் இல்லையோ?"  என்று சொல்வாருண்டு. (இதை ஒரு கேள்வி என்று கொள்வதற்கில்லை ). பசுக்கள்  நிற்கின்றன என்றால்,  அங்கு அவை வளர்க்கப்படுகின்றன என்று பொருள்.  எனவே, பேச்சுத்தமிழ் நில் என்ற சொல்லை குறுகிய பொருளில் எடுத்துக்கொள்ளவில்லை என்று இதன்மூலம்  அறியலாகும். பல்பொருளும் பல்பொருட் சாயல்களும் உள்ள ஒரு சொல்லை, குறுக்கிப் பொருள்கொள்வது தவறாகும்.  நிற்க என்று கடிதத்தில் எழுதினால் எழுந்து நிற்க வேண்டு மென்பது பொருளன்று.

எழுத்தில் உள்ளவையெல்லாம் சரியானவை என்றோ பேச்சில் உள்ளவை எல்லாம் தவறானவை என்றோ கொள்வதற்கில்லை.  ஒவ்வொன்றையும் ஆய்ந்துதான் முடிவுசெய்யவேண்டும்.

நிலை என்ற சொல்  நில் + ஐ என்று விகுதி பெற்று அமைந்த சொல்.  உலகிற்  பொருள்கள் காற்றுப்போலும் நிலையிலோ ( வாயு),  கட்டி போலும் நிலையிலோ ( திடப்பொருள் ) , திரவநிலையிலோ ( நீர்போலும் )  இருக்கும். இவற்றுள் 

திரவநிலை என்பதைப்  பார்ப்போம்.

இம்மூன்று வகைப்  பொருள்களில்  நீர்தான் திரண்டுவந்து அலையாகிக் கரையில் மோதுவதை மனிதன் முதன்முதல் அறிந்துகொண்டான்.  பின்பு காற்றும் இவ்வாறு திரண்டு புயலாவது கண்டுகொண்டான். தமிழில் அமைந்து கிடக்கும் திரட்சிக் கருத்துச் சொற்கள் பெரும்பாலும் நீர் பற்றியவையே ஆகும். இவற்றில் பலவும் நீரியன்மை தழுவிய சொற்கள்

திரள்,  திரள்தல்,  ( வினைச்சொற்கள் ).

திர என்பது அடிச்சொல்.  திர் எனினுமாம்.

திர + அள் =  திரள்.

திர + ஐ  =  திரை  (  அலைத்திரட்சி )

திர +  வ் + அம் = திரவம்  ( வகரமெய் --உடம்படு மெய்).

திர + ஆ + அகம்=  திராவகம். ( சில மருந்துச் சரக்குகள் திரட்சியாகிக் கரைந்து  உள்ளிருக்கும் நீர் ),  ஆ என்பது ஆகுதல் வினை.  வகர மெய்  -- உடம்படுமெய் ).

திரள்வு + அகம் > திரவகம் (  ள் கெட்டது) >  திராவகம் ( திரிபு)  என்றும் விளக்குவதுண்டு. எவ்வாறாயினும் ஒன்றுதான்.

திர -  திரு.  ( திரட்சி).  மதிப்புத் திரட்சியும் ஒப்புமையுடைய கருத்தே.

திர -  திரி  ( மாறுபட்டுத் திரளுதல் )

இன்னும் உளவெனினும் அடுத்துக் கிட்டும்  வாய்ப்புகளில் உரையாடுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.








 

ஞாயிறு, 7 நவம்பர், 2021

07112021 கோவிட் நிலைமை

 [Sent by Gov.sg – 7 Nov]


As of 6 Nov 2021: 

- 1,666 cases in hospital

- 299 require O2 supplementation 

- 65 under close monitoring in ICU 

- 74 critically ill in ICU

- Overall ICU utilisation rate: 72.8%  


3,871 cases discharged; 550 are seniors aged 60 years and above.


Over the last 28 days, of the infected individuals: 

- 98.7% have mild/no symptoms

- 0.8% require O2 supplementation

- 0.3% are in ICU

- 0.2% died


As of 5 Nov: 

- 85% of population completed full regimen/received 2 doses of vaccines

- 86% received at least 1 dose

- 17% received boosters


As of 6 Nov, there are 3,035 new cases. The weekly infection growth rate is 0.83.


go.gov.sg/moh061121

சனி, 6 நவம்பர், 2021

சோதிட நம்பிக்கையில் சோர்வில்லை

 பேர்மாற்றம்  செய்தால் நாளும்

கோளுமே  பார்த்துச் செய்க,

நேர்மாற்ற  மாகத் துன்பம்

நேராமை போற்றிக் கொள்க; 

யார்கூற்றுக் கொண்டாய்   என்றே

என்னைநீர்  கேட்பீ ராயின்.

கூர்ஈற்றுக் கோளாய் வோனே

கூறினான்  ஈதென்  பேன்நான்.   


இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்தக்

கலக்கமில் கணியன் தானும்

கழறின யாவும் ஏற்றான்;

துலக்குறப்  பேரைப் பேர்த்தான்

இன்னொரு பேரை வைத்தான்! 

மயக்கறு நம்பிக் கையில்

மகிழ்தலம் ஆர்ந்த  தம்மா.


இதில் பெறப்படும் படிப்பினை யாதென்றால்,  சோதிடத்தை நம்பவில்லை என்றிருப்பவர், நம்பாமல் இருக்கலாம்.  அதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறார்கள்.  நம்பாதே என்று நீர் சொல்லி அதை நாலு பேர் கேட்டுவிட்டால், உலகம் உம் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது என்று இறுமாந்துவிடுதல் அறியாமை ஆகும்.

இந்தச் செய்தியைப் படித்து இதை உணர்ந்து கொள்ளலாமே. (கீழே, அரும்பொருள் யாப்பியல் குறிப்புகள் இவற்றுக்கு அப்பால்  தரப்பட்டுள்ளது.  சொடுக்கி வாசிக்கவும். )

அரும்பொருள்:

நாளும் கோளும் -   சோதிடம்.

இலக்கத்தி னோடேழ் பத்தின்ஆயிரம்  ---  170000

கணியன் -  சோதிடன்

கழறின - சொல்லியவை

யார் கூற்று -  யார் சொன்னதை

கொண்டாய்-  ஏற்றுக்கொண்டாய்

கூர் ஈறு -  கூரான கடைசி.  அதாவது கூர்மதியால் இயன்ற

இறுதிக் கொள்கை.

நேராமை -  நடவாமல்.

துலக்குற -  விளக்கமாக

மயக்கறு  -   குழப்பம் இல்லாத

ஆர்ந்தது  -  நிறைந்தது

மகிழ்தலம் -  பூமி. மண்ணுலகு


யாப்பியல் குறிப்புகள்:

இது அறுசீர் விருத்தம்.  இந்த அடியைப் பாருங்கள்:

"இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்த"

என்று வந்துள்ளது,  இங்கு முதலடியில் இரண்டாவது மடக்கில்  இகரத்தில் தொடங்கியிருந்தால், ஒரு மோனை வந்திருக்கும்.  நான் வைக்கவில்லை. இப்படி மாற்றினால் மோனை வந்துவிடும்:

இலக்கத்தி  னோடேழ் பத்தின்

ஈரைந்து நூற்றைத் தந்தான்

என்று எழுதினால் மோனை வந்துவிடும்.  வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அதிகம் கணக்குப் போட்டு அது என்ன தொகை என்று வாசிப்பவர் கண்டுபிடிக்க வேண்டும்.  கவிதையில் 170,000 என்பதை தெளிவாக வைப்பதே கடினம். அதை மேலும் கடினமாக்கிப் படிப்பவர் திணறக்கூடாது என்பதானால் வைக்கவில்லை.  கருத்தறிதல் மிகுமழுக்கம் அடைதல் ஆகாது என்பதிலும் சற்றுக் கவனமாய் இருக்கவேண்டியுள்ளது.

கவிதையின் முதற்பாடலில் தொடக்காத்தில்:

பேர்மாற்றம்  நாளும் கோளும்

பிழையாது பார்த்துச் செய்க

என்று பாடினால் மோனை வந்துவிடும்.

பார்த்துச் செய்க என்ற  1.பேச்சுவழக்குத் தொடரில்  ஒரு கவனம் வேண்டும், 2. வேறு ஈர்ப்புகளும் கவர்ச்சிகளும் கவிதைக்கு வேண்டும் என்பன " செய்" என்ற வினை இரண்டாம் முறை வருவதால்  உணர்த்தப்படுகிறது என்னும் காரணியால் மோனையின்பால் மோகம் விடுபடுகிறது.  அதனால் மோனையை விழைந்து மாற்றவில்லை.  

இந்தச் சிந்தனைகளை அறிந்தால் கவிதைபால் ஈர்ப்பு மிகும் என்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அறிவீராக. 


HK star Jordan Chan paid fortune-teller S$170,000 to change his name for good luck

https://theindependent.sg/hk-star-jordan-chan-paid-fortune-teller-s170000-to-change-his-name-for-good-luck/

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்