By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
மன்னித்தல் மருவிநிற்றல்
வெள்ளி, 22 ஜனவரி, 2021
சிரோமணி
இன்று சிரோமணி என்ற அழகிய சொல்லின் வேர்களை அறிந்துகொள்வோம்;
இதைச் சுருக்கமாகவே அறிவோம்.
சிற - வினைச்சொல். சிறத்தல். முன்னிருந்ததைவிட இன்னும் நலமுடையதாய் ஆவதே சிறத்தல். சீர் பெறுதல்.
ஓ - ஓங்குதல். மிகுதல்.
மணி - இதுவும் தமிழ்ச்சொல். மண்ணுதல் - தூய்மை அடைதல். ( நீரினால் கழுவப்பட்டிருத்தல்). உயர்ந்த (பொன்னும்) மணி(யும்) அதன் கலப்புகளுடன் தான் மண்ணிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது. அது மனிதனால் தூய்மை பெற்றே உயர்வை அடைகிறது. " மணியாகிறது". மணியை ஒளிபெறச் செய்வது ஒரு தொழிலாளி.
மண்ணுதல்.
மண்ணு + இ > மண்ணி > மணி
ண் தொலைந்தது இடைக்குறை.
மண்ணுமங்கலம் என்ற பழந்தொடர் கருதுக.
சிற + ஓ + மணி
ஓமணி = ஓங்கும் மணி. அப்பொருள் பெற்ற புத்தொளியைக் குறிக்கிறது. இவ்விடத்து இத்தொடர் வினைத்தொகை.
சிற+ ஓ + மணி = சிறோமணி - சிரோமணி. ஓரெழுத்து மாற்றமுற்ற சொல்.
புலவர்மணி, கவிமணி, கலைமணி முதலிய புகழ்த்தொடர்களை உன்னுக.
மூலத் தமிழ்ப்பதங்களை ஈண்டு காட்டினோம்.
அறிக.
மகிழ்க.
வியாழன், 21 ஜனவரி, 2021
கதம்பவனக் குயில் அம்மன்.
அம்மன் - நாம் வணங்கும் இறைவி - இல்லாத இடமே இல்லை ---- வானத்திலும் பூமியிலும் எவ்விடத்திலும் இருப்பவள் அவள். சிலர் அம்மன் என்ன சாதி என்று உசாவுகின்றனர். எல்லாமும் அவளுள்ளே அடக்கமாதலால் எல்லாச் சாதிகளும் அவளுக்குள் அடக்கம். அவள் அறியாத சாதி எதுவும் உலகில் இல்லை. யாவும் ஒன்றாய் அவள் ஆட்சியுள் மாட்சியாய் இலங்குகின்றது.
சுடுகாட்டில் இருக்கிறாளா என்ற கேள்விக்கு, சுடுகாடு சுடாத காடு என்ற பேதமின்றி எங்கும் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஓரிடத்து ஒருமையாகவும் பலவிடத்தும் விரிந்து பரந்து சிறந்தும் பன்மையாகவும் நிற்பவள் அவள். அவளால் முடியாதது ஒன்றுமில்லை.
அவள் கதம்பவனக் குயில். வண்ணப்பூக்களின் வாசக்குயில். பூவனம் சென்று பொறுமையாகப் போற்றுங்கள்.
ஜகதம்ப மதம்ப கதம்பவனப் பிரிய வாசினி.
அவள் மலைமகளும் ஆவாள். சிகரத்தில் தங்குவதால் "சிகரி" என்றும் குறிக்கப்படுபவள்.
சிகரி சிரோமணி துங்க இமாலய
ஸ்ருங்க நிஜாலய மத்யகம்
மேவி நிற்பவள்.