ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மன்னித்தல் மருவிநிற்றல்

மருவுதல் என்பது, ஒன்றுபடுதல் இணைதல் என்ற பொருள்களில் அறியப்படுகிறது. தழுவுதல் என்பது இதற்கு இன்னொரு சொல்லால் தரப்படும் விளக்கம். "சங்கம் மருவிய இலக்கியம் " என்னும் வாக்கியத்தில் அவ்விலக்கியம் சங்ககாலத்துக்கு அடுத்த கால நிலைக்குரியது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்னலாம்.

 இதன் தொடர்பில் நாம் இந்த அடிச்சொற்களைக் கவனிக்கவேண்டும். மல் - ( ஒருவரை இன்னொருவர் மிக்க அருகில்சென்று கட்டிப்பிடித்து வீழ்த்தும் ஒரு விளையாட்டு அல்லது பிடியிடு போர். மற்போர். 

 மல் > மன்: இது லகர 0னகரப் போலி.இது நிலைபெறுதல் என்ற பொருளில் வரும் சொல். நிற்றல் இயலாத ஒருவன் அடுத்தவனை அணுகிப் பிடித்தோ, அல்லது ஒரு பொருளைப் பற்றிக்கொண்டோ நிற்பான். தரையில் காலை வைத்து நிற்பதிலும் நிலத்தின் துணை தேவைப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே மன்னுதல் என்பதிலும் ஒருசார் மருவற்கருத்து கரந்து நிற்பதை அறியலாம். நிலை நிற்பதெல்லாம் இவ்வாறு சார்ந்தே அமைகிறது. சார்பில் மிகுதியும் குறைவும் கூறுதல் கூடும்.  

மன் > மன்னித்தல். இது நிலைபெறுவித்தல் என்ற பிறவினைப் பொருளில் அமைந்த தமிழ்ச் சொல். மன்னித்தல்: இதுபோல், உன்னுதல் என்பதினின்று உன்னித்தல் என்பதும் அமையும். மன் > மன்று , மன்றம். பலர் கூடுமிடம். இவ்விடங்களில் பலர் அடுத்திருத்தல் காண்க. 

மன்றல் - திருமணம், இருபாலார் அடுத்திருக்கும் வாழ்க்கை. 

மல் > மரு. மருவுதல் என்பதில் மரு என்பது தவிர மற்றவை விகுதிகள். வினையாக்க விகுதி மற்றும் தொழிற்பெயர் விகுதி. 

ஒ.நோ: புல் > புரு. நல்> நறு என்பதும் காண்க. 

மன்னித்தல் என்ற சொல் மன் என்றதிலிருந்து அமைதல் காட்டும் விளக்கம் ஒன்று: இது முன்பு பழைய இடுகையில் விளக்கப்பட்டுள்ளது. https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_12.html 

பலரும் அறிந்த ஒரு திரிபு  -  ஒருவேளை மறந்தும் இருக்கலாம் -   அது:

கரு > கன் என்பது.   கருநடம் >  கன்னடம் என்பது.

நடமென்பது  நாடகம் என்றும் திரியும்:  கருநடம் > கருநாடகம் > கர்நாடகம்.

இவ்வலைப்பூவில் பொருளடக்க அகரவரிசையில் "மன்னித்தல்" காண்க. Glossary on Etymology (Pages) .

மருவி நிற்றல் என்பது இன்னொரு வகையிலும் அமையும். மரு(வி) நிற்றல் --- மருநிற்றல் > மன்னித்தல் என்றும் அமைதல் கூடும். 

புல்லுதல் - பொருந்துதல் . இச்சொல் புல் > புரு என்று திரியும். எனவே புரு > புருசு > புருசன் ( வாழ்க்கையிற் பொருந்தியவன் ) என்பது. 

புரு > புருவம் : கண்ணுடன் பொருந்தி அமைந்தவிடம். இதிலிருந்தும் கண்ணுக்குப் பொருந்தியவன் என்றும் விளக்கலாம். எல்லாம் அதே கருத்துதான். 

 புரு > புருடு > புருடன் என்றும் அமையும் 

பல வழிகளிலும் தமிழ். 

 ஒருவனை மன்னிக்குங்கால் அவனை மீண்டும் மருவிக்கொள்கிறோம். பழைமை நட்பை நிலைநிறுத்துகிறோம். அறிக மகிழ்க. 

மெய்ப்பு செய்யப்பட்டது. 

Owing to software error in Win7, the edit tool bar in this blog disappeared. Hence saved the post and published first. Now this has been edited from another device.

Will review. 25 01 2021

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனிப்போம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

சிரோமணி

இன்று சிரோமணி என்ற அழகிய சொல்லின் வேர்களை அறிந்துகொள்வோம்;

இதைச் சுருக்கமாகவே அறிவோம்.

சிற  -  வினைச்சொல். சிறத்தல்.   முன்னிருந்ததைவிட இன்னும் நலமுடையதாய் ஆவதே சிறத்தல்.  சீர் பெறுதல்.

ஓ  -  ஓங்குதல்.  மிகுதல்.

மணி -  இதுவும் தமிழ்ச்சொல்.  மண்ணுதல் -  தூய்மை அடைதல். ( நீரினால் கழுவப்பட்டிருத்தல்).  உயர்ந்த (பொன்னும்) மணி(யும்)  அதன் கலப்புகளுடன் தான் மண்ணிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது.  அது மனிதனால் தூய்மை பெற்றே உயர்வை அடைகிறது.  " மணியாகிறது". மணியை ஒளிபெறச் செய்வது ஒரு தொழிலாளி.

மண்ணுதல்.

மண்ணு + இ > மண்ணி > மணி

ண் தொலைந்தது இடைக்குறை.

மண்ணுமங்கலம் என்ற பழந்தொடர் கருதுக.

சிற + ஓ + மணி

ஓமணி =  ஓங்கும் மணி. அப்பொருள் பெற்ற புத்தொளியைக் குறிக்கிறது. இவ்விடத்து இத்தொடர் வினைத்தொகை.

சிற+ ஓ + மணி =  சிறோமணி -  சிரோமணி. ஓரெழுத்து மாற்றமுற்ற சொல்.

புலவர்மணி,   கவிமணி, கலைமணி முதலிய புகழ்த்தொடர்களை உன்னுக.

மூலத் தமிழ்ப்பதங்களை ஈண்டு காட்டினோம்.


அறிக.

மகிழ்க.




வியாழன், 21 ஜனவரி, 2021

கதம்பவனக் குயில் அம்மன்.

 அம்மன் -  நாம் வணங்கும் இறைவி -   இல்லாத இடமே இல்லை ---- வானத்திலும் பூமியிலும் எவ்விடத்திலும் இருப்பவள் அவள். சிலர் அம்மன் என்ன சாதி என்று உசாவுகின்றனர்.  எல்லாமும் அவளுள்ளே அடக்கமாதலால் எல்லாச் சாதிகளும் அவளுக்குள் அடக்கம்.  அவள் அறியாத சாதி எதுவும் உலகில் இல்லை. யாவும் ஒன்றாய் அவள் ஆட்சியுள் மாட்சியாய் இலங்குகின்றது.

சுடுகாட்டில் இருக்கிறாளா என்ற கேள்விக்கு,  சுடுகாடு சுடாத காடு என்ற பேதமின்றி எங்கும் இருக்கிறாள்.  ஒரே சமயத்தில் ஓரிடத்து ஒருமையாகவும் பலவிடத்தும் விரிந்து பரந்து சிறந்தும் பன்மையாகவும் நிற்பவள் அவள். அவளால் முடியாதது ஒன்றுமில்லை.

அவள் கதம்பவனக் குயில். வண்ணப்பூக்களின் வாசக்குயில். பூவனம் சென்று பொறுமையாகப் போற்றுங்கள்.

ஜகதம்ப மதம்ப கதம்பவனப் பிரிய  வாசினி.

அவள் மலைமகளும் ஆவாள்.  சிகரத்தில் தங்குவதால்  "சிகரி" என்றும் குறிக்கப்படுபவள்.

சிகரி சிரோமணி துங்க இமாலய 

ஸ்ருங்க நிஜாலய மத்யகம்

மேவி நிற்பவள்.