சனி, 22 செப்டம்பர், 2018

பணபரமா அல்லது பணஃபரமா? கிரேக்க ஒலிப்பு முறை

இப்போது பணபரம் என்ற சொல்லைப் பார்ப்போம். இதை வேறு சிலர் பண பரம் என்று இருசொற்களின் புனைவாகக் கொண்டுள்ளனர்.

 பணம் என்பது பண்ட மாற்றுக்கு இடைநிகராக நிற்கும் செலாவணியாகும். பண்டம் என்ற சொல்லும் பணம் என்ற சொல்லும் பண் என்ற தமிழ்ச்சொல்லினடிப் பிறந்த சொற்களே. பண்டம் என்பது செய்பொருள் அல்லது பண்ணப்பட்ட பொருள். பண்+து+அம். = பண்டம் ஆகும். ண் + து என்பது புணர்ச்சியில் டு ஆகும் என்பது புணரியல் சொல்லும் இலக்கணம். பண் து > பண்ணியது. பண் என்பதனுடன் அம் விகுதி புணர்க்க, பணம் ஆகிறது. இதில் து என்ற இடைநிலை விடப்பட்டுள்ளது காணலாம். பண் து அம் : பண்டம்; பண் அம் : பணம். து என்பது இல்லை.

 பரம் என்பது பர அம் என்ற பகுதி விகுதி இணைப்பு. பர என்பது பரவு என்பதன் அடிச்சொல்லாகும். பணம் பரவிய நிலையே பரம் எனப்படுகிறது. இது பரம்பொருள் என்ற தமிழ்ச்சொல்லில் வரும் பரம் என்ற சொல்லின் கருத்தே ஆகும். பரவியது எனவே பணபரம் என்பது பணம்பரவிய கால நிலையைச் சோதிடத்தில் குறிக்கிறது.

 பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ( சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் முனைவர் மு வரதராசனார் முனைவர் ராசமாணிக்கனார் ஆகியோரின் மேலதிகாரப் பணியாளரும் ஆகியவர் )  

இவற்றை எல்லாம் கவனிக்காமல் கிரேக்க மொழி அகராதியில் இச்சொல் இருப்பதைக் கொண்டே அது கிரேக்கத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தது என்று முடிவுகட்டிவிட்டார். இந்தியா அல்லது குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து கிரேக்கத்துக்குச் சென்றிருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதனை நாம் இதன் மூலம் நன்` கறிந்து கொள்ளலாம்.

செலா வணி என்பது : செல்லும் அணி வகை என்பதாம். செல்: செலா; நில் - நிலா. வில் - விலா; என்பவை போல தொழிற்பெயர். செல்லுவது அல்லது ஏற்கப்படும் மதிப்புடையது என்பது பொருள், அணி என்பது வகை எனல் ஆகும்.

பணபர இராசிகள் எனில் பணவரவு செலவு குறிக்கும் இராசிகள் அல்லது இராசியிடங்கள் என்பதாம்.

இவை:   2-5-8-11   ஆம் வீடுகள்.  பிறப்பு அல்லது சென்ம இராசிகளிலிருந்து எண்ணவேண்டும்

கிரேக்க மொழியில் இது பணஃபர என்று திரித்து ஒலிக்கப்பெறுவதால் பேராசிரியர் தடுமாற்றம் அடைந்தார் என்பது தெளிவு ஆகிறது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

சோதிடச் சொற்கள்: பணபரம், ஆபோக்லீபம்

இவைபோன்ற சில சொற்கள் நம் சோதிடமென்னும் கணியத்தில் கலந்துள்ளன.

இவை கிரேக்கச் சொற்கள் என்பது  எஸ்,வையாபுரிப் பிள்ளையாரின் கருத்து.

இது உண்மையாய் இருக்கலாம்.

அலக்சாந்தரின் படைவீரர்கள் பலர் பஞ்சாப் முதலிய இடங்களில் படையெடுப்பின் பின் தங்கிவிட்டனர்.  அங்கிருந்த பெண்களுடன் கலந்து கருவலும் வெளுப்பும் கலந்த நிறமுடையோராய் மக்கள் அமைந்தனர்.  படையெடுப்பில் இவைபோலும் கலப்புகளை எதிர்பார்க்கவேண்டும். கருக்கலைப்புகள்  அப்போது எளிதில் கிட்டுவதில்லை. இன்னும் பலரின் படையெடுப்புகளும் நடைபெற்றிருக்கலாம்.  மொழியில் புதுச்சொற்கள் புதுச் சொல்வடிவங்கள் நுழைதல் இயல்பு.

பணபரம் ஆபோக்லீபம் முதலியவை கிரேக்கச் சொற்கள் என்றார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.  சென்னைப் பேரகராதிப் பதிப்பாசிரியர்; பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர்.

தொடர்வது:  http://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_22.html

அடுத்த இடுகை.

தாது என்றால் என்ன

தாது என்ற சொல், தருதல் என்ற வினையடியாகப் பிறந்ததே.  இதன் பொருள் ஒன்றிலிருந்து பெறப்பட்டது என்றாலும் அத்தகு பொருள்கள் ஒருவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

தாது :

மண்ணால் தரப்பட்ட  பொன் இரும்பு புட்பராகம் முதலியன.

பூவினால் தரப்படுவது:  பூந்தாது.

நரம்பினால் தரப்படும் துடிப்பு.  அதனின்று நோயறியும் நிலை.

காலத்தினால் தரப்படும் ஆண்டுக்கணக்கு.

மாற்றித் தரப்படும் பொருள்.

மலர்மொட்டு வாயவிழ்தல்

எரிப்பில் தரப்படுவது.   சாம்பல்.

இயற்கையினால் தரப்படும்  நிலம், வளி, நீர், விசும்பு, தீ முதலியன.

உடலினால் தரப்படுவது:  பிணிகள் முதலியவை.

இவ்வாறு தாது என்பது தரப்பெறும் பல பொருள்களைக் குறித்தன,


பேச்சு வழக்கில் சிலவே உள்ளன. பிற இலக்கிய வழக்கு உடையவை.   தா என்ற ஏவல் வினையிலிருந்து இதனை அமைத்துக்கொண்டுள்ளனர்.  பிற காரணங்கள்  மற்றும் மூலங்கள் கூறிக் குழப்பத் தேவையில்லாத சொல் இது.

து என்னும் தொழிற்பெயர் பிற பெயர்கள் வேறு சொற்களிலும் வந்துள்ளன:

கைது --  கையிற் பிடிபட்டது.  கையும் களவுமாய்ப் பிடிபட்டான் என்பது ஒருவகைக் கைது.

விழுது

பழுது.

மாது    (  அம்மா>  மா > மாது )

கோது.

சூது   ( சூழ்து என்பதில் ழகர ஒற்று கெட்டது) விளையாடும் போது சூழ்ந்து ஆடுதற் குரியது; இன்னும் விளையாடுவோர் வட்டமாக இருந்து ஆடுவது ஒரு காரணமாகும்.

தூது  (  தூய்து என்பதில் யகர ஒற்று கெட்டது,  தூதன் அனுப்பிய அரசனுக்குத் தீது எண்ணாத நேரியனாய் இருக்கவேண்டும் ).

சேது  ( சே:  செம்மை,  சிவம் ).

ஏது  ( ஏ என்னும் வினா)

வேது  ( வேது பிடித்தல்:  போர்வைகளால் போர்த்தி வியர்க்கச் செய்தல்)

இது  ( பொருட் சுட்டு)  

அது

கேது   இடுகையில் முன் விளக்கப்பட்டது.

வாக்கியம்}

ஒரு சித்தவைத்தியர் கூறியது:  முட்டையின் சிவப்புப் தாதை எடுத்து அதில்
இந்தச் சாதிலிங்கத்தை உரைத்துக் கலக்கி முழங்காலில் தடவவேண்டும், இப்படி 48 நாள் செய்யுங்கள்.


தா என்பது ஏவல் வினை.  எடுத்துக்காட்டு:

சங்கத் தமிழ்மூன்றும் தா.

செம்மாதுளை பிளந்து தா.

இனித் தாகம் என்ற சொல்:

தாகம்:  நீர் தருவதற்கு உள்ள நிலை. உடலுக்கு நீர் தருவதற்கு நேரம் வந்துவிட்டதைக் குறிப்பது.

தா:   தருதல் குறிக்கும்.

கு:    வந்து சேர்தல் அதாவது சேர்விடக் குறிப்பு.

அம்:  விகுதி (< மிகுதி).

தா+கு+ அம் =  தாகம்.

தவித்தல் என்ற சொல்:

தா+இ.   > தாவி > தவி.  (  இது முதனிலைக் குறுக்கம் ).

இங்கு வந்த இகரம் ஒரு  வினையாக்க விகுதி.  ஒரு வினையினின்று இன்னொரு வினை தோன்றல்.

நீர் தருக என்பது  தா+இ = தவி ஆனது.

தா என்ற ஏவல் வினை,  தரு, தந்து, தந்தான்/ள், தரமாட்டான் ,  ---- இவ்வாறு பல சொற்களில் குறுகுதல் இயல்பு.  தா>த.

இந்தா என்ற சொல்லில் குறுகவில்லை.

தா என்று கேட்குமுன் இந்தா என்று கொடுத்துவிடு (வாக்கியம்).

தா > தா இ > தவி >  தவி+ அம் = தாவம்   =  தாகம்

இவை தோற்றுவாய் ஒன்றான சொற்கள்.

வகரம் பகரமாகும்.  எ-டு:  வசந்தம் > பசந்த்.   இது  பல மொழிகட்கும் உரிய
திரிபு.

தாவம்> தாபம்.  ( நீர் விடாய்;  பொதுவாக விடாய் ).

தவித்த நாவுக்குத் தண்ணீர் கொடு.  (வாக்கியம்).  நீர் கொடு - நீர் தா இரண்டும் ஒன்றுதான்.


தாது மற்றும் தாவில் பிறந்த பிறவற்றின் உறவு விளக்கப்பட்டது.

இன்னும் பல பழைய இடுகைகளில் உள.