வெள்ளி, 14 செப்டம்பர், 2018

அகம் பிரமஸ்மி

இவ்வுலகில் எத்தனையே உடல்கள் உயிருடன் உலவுகின்றன. இவற்றின் உயிர்கள் இறைவனை ஒப்பிடுங்கால் மிக்கச் சிற்றளவிலானவை. எல்லையற்றோன் இறைவன்  --  என்று எல்லா வேதங்களும் ஓதுகின்றன.

உடல் நமக்கு உள்ளது;  அதனுள் ஆன்மாவும் உள்ளது.  நாம் ஒவ்வொருவரும் நான் என்று தன்னைக் குறித்துக்கொள்ளும்போது  அந்த "நான் " எது?  உயிரா அல்லது உடலா?

நான் என்பது இவ்வுடலில்லை.  நான் வெளியேறிய பின் இவ்வுடல் அசைவற்று இயக்கமற்று விறகுபோல் கிடக்கும்.  அப்போது  அது எல்லா உணர்ச்சிகளையும் இழந்து கிடக்கும். உயிர் போய் விட்டதென்பார்கள். " நேரமாகிவிட்டது;  சீக்கிரம் தூக்குங்கள்" என்று பேசிக்கொள்வார்கள்.

குடம்பை தனித்தொழியப் புள் பறந்துவிட்டது என்று வள்ளுவனார் கூறியது இந்நிலைக்கு முற்றப் பொருந்துமொரு வாக்கியமாகும்.  அப்போது சிலர் துயர்தாங்காது அழுதுகொண்டிருப்பர். பட்டினத்தடிகள் சொன்னதுபோல இன்று செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணங்கள் அழுதுகொண்டிருக்கின்றன என்பதே முற்றுமுண்மை ஆகும்.

இக்குடம்பை தனித்தொழியப் பறந்துவிட்டதே அதுதான் ஆன்மாவாகும்.  நான் என்று நாமெல்லாம் குறித்துக்கொள்வது இவ்வுடலன்று; இவ் ஆன்மாவே யாகும்.

இவ்வுடல்பால் உள்ள பற்றினை முற்றும் அறுக்கவேண்டுமென்பதே பெரியோர் நமக்குரைப்பது ஆகும்.   தாயுமானவர் கூறியதற்கொப்ப  எல்லா மலங்களும் ஊறித் ததும்பும் மெய்யுடன் உங்கட்கு உள்ள தொடர்புதான் என்ன?
உங்கள் உடல்கள் நீங்கள் அல்ல.

ஒவ்வொருவரும் நான் இவ்வுடல் அன்று என்று உணர்வேண்டும். அகத்திருப்போன் உங்கள் பெருமான் ஆவான். அவன் ஆன்மாவுடன் ஒற்றுமை முற்றுடையோன்.  ஒரு பெருங்காந்தத்திலிருந்து தெறித்து விழுந்த துண்டு கவர்ந்துகொள்ளுமாற்றலும் உடையது.  அதுபோலவே.

நான் வேறு. இவ்வுடல் வேறு.  " அகம் பிரமஸ்மி".

நான் இவ்வுடல் என்பதோ அகங்கார மெனப்படும். இஃது பூதவுடல்.

பூத்தல் - தோன்றுதல்.  பூ+ து + அம் =  பூதம்.  (தோன்றியது).   தோன்றிய உடல் இறப்பது.  தோன்றாமை ஆன்மாவின் அழிவிலா உண்மை.

பூ -  பூத்தல் : தோன்றுதல்.  பூ+ம் + இ = பூமி:  தோன்றியது.  மகர ஒற்று ஓர் இணைப்பொலியாகும்.

யானே பிரம்மன். இவ்வுடல் வேறு.

வடகிழக்கு அசாமிலிருந்து கும்பகோணச் செலவு.

வடகிழக்கி      னின்று  தொடர்வண்டிப் பயணம்
விடமுடிந்த  தில்லை விழுநீட்சி  உடைத்தாம்
கடகடவென்  றோசை செவிகட்கே இனித்தாம்
கடவுளுந்தம் அன்பில் கனிபோலும் அளித்தார்.




  
திரு மோகன் ஐயப்ப குருசாமி அவர்கள் வடகிழக்கு மேகாலயா
அசாம்  ஷில்லோங்கிலிருந்து தென் திசைக் கும்பகோணம் பயணமானார்.
இப்பயணம் இயற்கை அழகை விரித்துணர்த்தியது.  பல கோவில்களைக்
காணச் செய்து இறும்பூது எய்துவித்தது. தம் இனிய பயணத்தை முடித்துக் கொண்டவர்களாய் அவரும் குழுவினரும் தென்னாடு மேவினர்.
இப்படத்தில் அவர்கள் பயணம் செய்துகொண்டிருப்பதைக் காணலாம்.






 உங்கள்  வடகிழக்கு இந்தியப் பயணம் எப்போது?

பயணமும் மகிழ்ச்சி தரும்.....

அடிக்குறிப்புகள்

தொடர்வண்டி -  கோத்திழுவை வண்டி  ( ட்ரெய்ன்)
இனித்தாம் -  இது முன்னும் பின்னும் வரும் அடிகளில் இறுதிச் சீர்களின் இயைபு கருதி "வலிக்கும்வழி வலித்தல்" என்னும் உத்தி பின்பற்றி வல்லெழுத்து மிகுக்கப்பட்டது. இவ்வுத்தி தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டது காண்க.
=  இனிதாம்.
உடைத்தாம் = உடையதாம்.




நரகா சூரன் ( நரகாசுரன், நரக அசுரன் )

நரகாசூரன் பற்றிய கதைகள் அல்லது தொன்மப் பதிவுகள் தீபாவளிப் பண்டிகையின் போதுதான் வெளிவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும்.

நரகா சூரன் என்பவன் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மகன் என்றும் பரமாத்மாவே  அவனைக் கொன்றுவிட்டார் என்றும் கூறுவதுண்டு. வேறு வகையில் சொல்லப்பட்ட கதைகளும் பல.

விட்ணு அல்லது விஷ்ணு நீரின் அமைப்பினர் (  அம்சம் _).  இதற்குக் காரணம் கடலும் விண்ணும் நீல நிறம்.  இரண்டுமே மழை தருவன..  கடலின் நீரிலிருந்து எழுந்தது என்ற கருத்தை " நீரகம்"  எனற சொல் குறிக்கிறது.  இதுபின் நரக என்று மாறிற்று.  சூறாவளி என்ற சொல்லில் உள்ள சூர் என்பது
சூரன் ஆயிற்று.  நீரக சூர என்பதே பெயர்.  இதுபின் நரகாசூரன் என்று மாறியமைந்தது.

இன்றும் மொழியில் பல சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வழங்குகின்றன.
றகரம் என்பது இரு ரகரங்களை இணைத்த எழுத்து.  இதை( றகரத்தை) உற்று ஆய்ந்து உணரலாம்.  றகரம் ஏற்பட்ட பின்  புதிய விதிகள் தோன்றிப் பின்னர் மரபுகளாயின.. வேறுபாடின்றி வழங்கும் சொற்களை இலக்கண நூல்களில் காணலாம்.

சூறாவளி, சூராவளி,  சூர,   அசுர என்பவற்றில் வரும் ரகரங்களை வைத்து வாதிடலாகாது.

சூர் சூரை சூறை என்பன ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த சொற்களாகலாம்.

நாராயணன் என்ற பெயருக்கு  நீராயினன் என்பதே மூலச்சொல்.  இது விண், கடல் மேகம் எல்லாவற்றையும் உட்படுத்தும்.

இச் "சமய"க் கருத்துகள் இயற்கை வணக்கத்திலிருந்து எழுந்தவை.  மாரி என்ற அம்மன் பெயரும் இன்றும் மழையைக் குறிக்கிறது.  மேகங்கள் கறுத்து மழை பொழிகிறது.  காளி என்பது இக்கருத்தை வலியுறுத்துவதே. இயற்கை அழகைப் பராவியதே முருகவணக்கம்.  நாற் கணங்களின் ஆட்சியனே கணபதி.செம்மை ஒளியே சிவமாகும். சூரிய சந்திரர் தேவர்கள் என்பர்.  கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார் என்பதே இந்துக் கொள்கை ஆகும்.

எல்லாம் இயக்கமுடையவை ஆதலின் அவற்றில் கடவுள் இல்லை என்று கூறுதல் இயலாது.

விண்ணு அல்லது விஷ்ணுவில் தோன்/றியதே சூறாவளி. அது  விண்ணனின் பிள்ளை என்பதில் எந்த முரணும் இல்லை.

நீரில் விழுந்திறத்தலே நீரக - நரகச் சாவு. நரகம் என்று ஒன்றில்லை என்று வாதிட்டால் அவரைக் கடலில் களைந்து அதை மெய்ப்பிக்கலாம். இன்று நீரகக் குண்டு என்ற ஹைட்ரோஜன் குண்டு வேறு உள்ளது. அதுவும் நரகமே. அது நீரின் அமைப்பாக உள்ளது.

திருத்தம் பின்