வியாழன், 23 ஆகஸ்ட், 2018

விடைதெரியாத சொற்கள்.

சில சொற்கள் குழூஉக்குறிகளாகத் தொடங்கி  அதன்பின் மொழியில் பலரால் பேச்சில் பயன் கொள்ளுவன ஆகிவிட்டால் அப்புறம் அவற்றைக் குழூஉ க்குறிகள் என்ற நிலையில் அழுத்தி வைத்திருப்பதி   லொரு பொருளில்லை.  அவைபோல்வனவும் மக்கள் சொற்றொகுதியில்  (vocabulary, that is "community vocabulary") இடம்பிடித்துக் கொள்ளுமாறு  விட்டுவிடவேண்டும்.

உலகம் ஒருமுறை அழியும்.  அப்புறம் எல்லா உயிர்களும் அழியும். பின்னர் அழிந்தோரும் உயிர் பெற்று எழுவர்.  இப்போது அழிந்தோரும்  இதற்குமுன் அழிந்து கல்லறை வாசஞ்செய்வோரும் ஒன்றித்து எழுவர்.  அப்புறம்  கடவுள் நீதியை வழங்குவார்.

உலகம் அழியும். அழிந்தபின் அப்படியே போய்விடாது,  மீண்டும் மறு உருவாக்கம் பெற்று உயிர்கள் மீண்டும் உறபத்தி ஆகும்.

உலகம் அழிந்து மீண்டும் எழுமோ இல்லையோ நீதி விசாரணை வருவது நல்லதுதான்.  என்னிடம் கடன் வாங்கிக் கொண்டு இல்லையென்று சொன்னவர்களுக்கு இறைவன் நல்ல தண்டனை கொடுப்பார். என் காசு எனக்குத் திருப்பிக் கிடைத்துவிடும்.  அட பைத்தியமே

செகுத்தல் என்றால் அழித்தல்.  இதனுடன் உலகம் என்ற சொல்லின் இறுதியை இணைத்தால் செகு+ கம் என்று வந்து,  இதில் வந்துள்ள வினையாக்க விகுதியாகிய கு வெட்டுப்பட்டு,   செ+கம் = செகம் ஆகிவிடும்.    ஏன் கு என்பதை வெட்டவேண்டும் என்று கொஞ்சம் ஆர்ப்பட்டம் செய்யமாட்டீரோ?  ஏனென்றால் கு என்பது ஒரு வினையாக்க விகுதி. ஒரு சொல்லைப் புனையும்போது விகுதிகளை வீசிவிட்டு  அப்புறம் புதிய விகுதிகளைப் போட்டுக்கொள்ளலாம்;  விகுதி இல்லாமலே சொல் நன்றாக அமைந்துவிட்டால் அப்புறம் விகுதி எதற்கு?

விகுதி சேர்ப்பதே ஒரு  புதிய பொருண்மையை உண்டாக்குவதற்குத்தான். அதை  வேறு வழியில் புகுத்தற்கு வசதி ஏற்படும்போது பழைய விகுதி தேவை இல்லை. பழைய விகுதியால் கருத்தோட்டம் தடைபடலாம். ஒலி நயம் கெடலாம்.

மிகுதி >  விகுதி .  ஓ.நோ: மிஞ்சு > விஞ்சு .

அமைப்புச் சொல்:

செகு+ கம் =  செ + கம் =  செகம்=  ஜெகம்.

அழிந்து அழிந்து தோன்றுவது இந்த உலகம்.  அழியும் தோன்றும் அழியும் தோன்றும்  அப்பப்பா!

சாதல் என்பது அழிதல்.  இது செத்துப்போதல் என்றும் சொல்லப்படும்.  சா செ சீ ஸி.    இந்தக் கடைச் சொல் சீன மொழியில் இறந்துவிடுதலைக் குறிக்கும். இதிலோர் ஒற்றுமை பாருங்கள்.

இந்த ஜெகம் செகம் என்ற சொல் ஒரு போர்ட்மென்டோ ( portmanteau) ஆகும்.  பகவொட்டுச் சொல். இப்போது தமிழ்த் தட்டச்சு செய்துகொண்டிருப்பதால் ஆங்கில எழுத்துக்களில் முன் குறித்த சொல்லைக் காட்ட இயல்வில்லை. பின்பு குறிப்பேம் யாம். (done).

இகபரம் இரண்டிலும் எங்கும் நிறைவான ஜோதியே
இணையில்லா இன்ப ரசமான சேதியே
செம்பொன்னணி நவமணியே
செல்வமெனும் திருவுருவே
சேம நலம் யாவும் உந்தன் செயலாலே.

இது உடுமலை நாராயணக் கவியின் பாடற் பகுதி.

இகபரம்.  இகம் என்பது   இந்த உலகம்,    இ=  இந்த;   கம்=  உலகம்.  இவற்றை இணைக்க இகம் என்ற சொல் கிடைக்கிறது. இது ஒரு பகவொட்டு.  போர்ட்மென்டோ ஆகும்.

காலையில் பிரக்ஃபஸ்ட் breakfast எடுத்து அப்புறம் ஒரு மணிக்கு லஞ்ச் lunch எடுத்தால் காசு நட்டம், ஒரு பிரஞ்ச்  brunch  எடுங்கள்.  காசு மிச்சம்.  ஆங்கிலத்தில் பிரஞ்ச் என்பது ஒரு போர்ட்மென்டோ.  பகவொட்டு.    

கடையில் போய்  துப்பரு கப்பரு உப்பரு மூன்றையும் வாங்கி வைத்துவிடுங்கள், ஞாயிற்றுக்கிழமை தோசை போட்டுச் சாம்பார் சட்டினி எல்லாம் போட்டுப் பசியாறலாம் ( பசி ஆரலாம்).  நீரினும் ஆரளவில்லா காதற் கணவனிடம் மனைவி இப்படிச் சொல்கிறாள்.

அடு+இன் +இ =  அட்டினி > சட்டினி > சட்னி !! அடுதற் கருத்து மாறியுள்ளது. இப்போது அட்டுச் செய்யாத சட்டினியும் உண்டு . 


துப்பரு கப்பரு உப்பரு மூன்றையும் கண்டுபிடியுங்கள்.  நிலத்துக்கு வாய்தா அப்புறம் கட்டலாம்.

விடை தெரிந்தால் பின்னூட்டம் செய்யவும். வணக்கம்.

புதன், 22 ஆகஸ்ட், 2018

ஆதிசங்கரர் கெடார்நாத்

 ஆதி சங்கரரைப் பற்றி நான்`கு ஆண்டுகட்கு முன்  யாம் எழுதிய கவிதை. கையெழுத்துப் படி (பிரதி)யிலிருந்து  சில வரிகளே கிடைத்தன:

ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார்நாத   நகர்;
ஓதி எங்கணும் பர ந்த ஒளிச்சிவம்
விடார்மூத  றிஞர்;
யாது வந்துமந்  தாகினி கரைப்புனல்
அடாக்கீழ்த  லினால்
மோதிச் சாயவும் முனைவர் அரன் தனைத்
தொழார்அமைந்   திலரே.

இன்னும் 8 அடிகள் கணினியிலிருந்து அழிந்தன.
உங்களிடம் இருந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்கள்.. 

சீடன் என்ற சொல் வந்த விதம்.

ஒரு குருவென்னும் மனிதன், தன் சீடனின் மூளையைத் தீட்டித் தான் அகன்றபின்பு  சீடனும்  ஒரு குருவாகும் தகுதியை உண்டாக்குகிறான். எந்தக் குருவும் மேலுலகிலிருந்து நேராக வருவதில்லை.  அவன் பெற்ற அறிவைச் சீடனுக்கு வழங்கிப் படிப்பிக்கின்றான் என்பதே உண்மை.

சீண்டுதல் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை முதலில் அறிவோம்.

சீண்டுதல் என்பது தீண்டுதல் என்பதன் திரிபு.   சகரத்தில் தொடங்கும் சில சொற்கள் தகரத் தொடக்கமாய் இருந்தவை.   தீண்டுதல் > சீண்டுதல். இனி சகரம் தொடக்கம் எனினும் இழுக்கில்லை.  ச>< த ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.  ஒன்றுக்கு இன்னொன்று மோனை.

தூங்காதே தம்பி தூங்காதே  நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.

பட்டுக்கோட்டை பாட்டு.  தூ > சோ மோனையானது.
இக்கவி மிக்க எதுகை மோனை கூர்அறிவுடையவர்.

எல்லாப் பாடல்களிலும் இவை போலும் மோனைப் புனைவு காணலாம்.

சீ  <>  தீ  :  இதுபோல் திரிந்த சொற்களை ஒப்பு நோக்குவோம்.

தம்தம் (  மதங்க ஒலி)  -   சம்தம் >  சந்தம்.

இப்படி மதங்க ஒலி குறித்த சொல் பின் அதுபோன்ற பிற இசையொலிகளையும் குறிக்க விரிந்தது.

தம் பந்தி >  சம்பந்தி.

பல் > பல் து > பற்று.   பல் து > பந்து.   பல்து > பந்து > பந்தம்;.
தம்பந்தம் > சம்பந்தம்.

தனி > சனி (  இதன் பொருள் தனிச்சிறப்பு உடைய கோள் என்பது ).

கோள்களில் சனிக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டம் என்பர். இறைவன்> இறைவர்> ஈஶ்வர்> ஈஸ்வர்> ஈஸ்வரன்.

இவற்றில் சில நம் இடுகைகளில் விளக்கப்பட்டுள.

இப்படித் திரிந்ததுதான் தீண்டுதல் > சீண்டுதல்.

இன்னும் பல திரிபுகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே அடியாக உள்வாங்கிக் கொள்ளுதல் கடினமே. ஆகவே இவை போதுமானவை.

இரண்டு தன் சேர்ந்தால் ஒரு தம் ஆகிறது.  இப்படித் தொடங்கியதே இப்பன்மை வடிவம்.

தன் உறவினர்  -  தம் உறவினர் (பன்மை)   தன் > தம் பின்னர் சம்.

ஆகத்  தீண்டுதல் என்பதற்கும் சீண்டுதல் என்பதற்கும் உள்ள திரிபுத் தொடர்பையும் பொருண்மை அணுக்கத்தையும் உணர்ந்தோம்.

என்னைச் சீண்டாதே என்றால் அடிக்கடி தொட்டுத்தொட்டுத் தொந்தரவு கொடுக்காதே என்பதுதான் அர்த்தம்.

இனி, ஒரு குருவானவர் ஒரு சீடனுக்கு நெற்றியைத் தீண்டிச் "சீடனாக்கி"க் கொள்கிறார்.    ஆகவே இந்தத்  தீட்சை பெறுபவன் சீடனாகிறான்.

தீண்டு > சீண்டு > சீடு  ( இது இடைக்குறை).

சீடு+ அன் = சீடன்.   குருவினால் தீண்டப் பெற்ற பாக்கியவான் சீடன்.

பகு> பகு+ இயம் = பாக்கியம்.  (  உலகில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு; இவற்றுள்  நற்பாகத்தைப் பெற்றவன் பாக்கியவான்.)  பாக்கிய + ஆன் = பாக்கியவான், வகர உடம்படு மெய்.  வான் என்பது ஒரு தனி விகுதியன்று.
பாக்கியவான் : நற் பகுதியைப் பெற்றவன்.

சீ > சீத்தல்.   தேய்த்தல், கூராக்குதல்.  ( தொடுதல் கருத்து.  தொடுதல் பலவகை. ஒரு முறை தொடுதல்; பல முறை தொடுதல்;   தொட்டுத் தொடர்தல், இதை விளக்கவேண்டாம்.  தெரிந்துகொள்க.)

சீ > சீடு ( டு ஒரு விகுதி ) > சீடன்.  (  குருவினால் புத்தி கூராக்கப்படுபவன்).
குரு சீடனின் நெற்றியைத் தேய்த்து விடுகிறார். எலாம் பொருத்தமே.

டு இறுதி வரும் சொற்கள் சில 

பா ( பொருள்: பாடல் )  :  பாடு.  (பாடுதல்)
மூ ( அடிச்சொல்)  ( பொருள்:  மேல் உள்ள திறப்பினை பரக்க அடைத்தல்)
 மூ >  மூடு.
டு விகுதி வினை பெயர் என இரண்டிலும் வரும்.

மற்றவை:

சீடு > சீண்டு ( இடைமிகை).

சீண்டு ><  தீண்டு.   இரண்டும் இருவழித் தொடர்புள்ள சொற்கள்.

சீடு > சீடு+இய > சீடிய > சிஷ்ய.

சீடு > சீசு > சீசப்பிள்ளை ( சிற்றூர் வழக்கு).

தீண்டு என்பதன் வேர்ச்சொல் தீள் என்பது.

தீள் > தீள்+து >  தீண்டு.
தீள் >  தீள்+து > தீட்டு.
தீள் + சை =  தீட்சை.   (. > தீக்ஷை )  குரு சீடனைத் தீண்டிப் பற்றுறுத்தல்).

குறிப்பு:  ஆரியர் என்பது வெள்ளைக்காரன் கூறினமாதிரி ஓர் இனப்பெயர் அன்று.  அப்படி ஓர் இனம் இல்லை.  எல்லா ஊர்களிலும் வெளி நாட்டினர் வந்து தங்குவதென்பது இயல்பானதே. பல நாடுகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் கடல் வழியாக வந்தவர்களும் நில வழியாக வந்தவர்களும்  இருந்தனர்.  திருமணம் செய்துகொண்டு கலந்துவிட்டனர். ( சீனப்படைகளுடன் வந்து வழி மாறி இந்தியச் சிற்றூரில் தங்கித் திருமணம் செய்துகொண்டு பிள்ளை குட்டி பெற்று மூப்பும் அடைந்து அண்மையில்தான் ஒரு சீனர் சீனாவிற்குப் போய்ச் சேர்ந்தார்.  இதுபோல் எத்தனையோ.  அலக்சாந்தரின் படைகளுடன் வந்தோர் பலர். திரும்பிச் சென்றுவிட்டனரா?  யாரறிவார்?  ஆப்கானியர் வந்திருப்பர்.)
ஆனால் ஆரியர் யாருமில்லை.
ஆர் என்பது தமிழில் ஒரு பலர்பால் விகுதி.  உயர்திணை குறிப்பது. பணிவு பகர்வது.  ஆர் என்ற வினைச்சொல்லும் உண்டு.  இவற்றைக் கூறும் தனி இடுகைகளைப் படியுங்கள்.
சமஸ்கிருதம் என்பது பெரும்பாலும்  சாமி கும்பிடும்போது  பயன்படுத்திய மொழி.  சாமிகளை மரத்தடியில் வைத்துக் கும்பிட்டனர். பெரும்பாலும் கோயில் கட்டியவர்கள் மன்னர்களே, மரத்தடிப் பூசாரி,  பிறர் கட்டிய கோயிலுக்குள் போனபோது அதே வழிபாட்டு முறையே வழக்கில் தொடர்ந்தது.  வடமொழி என்பது மரத்தடிமொழி என்று திரு வி க கூறியது சரியானதுதான்.  ஆரியர் வரவுமில்லை. சமஸ்கிருதம் அப்படிப்பட்டவர்களால் பேசப்படவும் இல்லை.  சமஸ்கிருதத்தில் முதல் கவி வால்மீகி ஒரு வால்மீகி சாதியான்;  இன்று தாழ்குலம்.  பாணினி வடமொழி இலக்கணம் இயற்றியவன், ஒரு பாணன். பாண்+இன்+இ = பாணினி.   இது வெள்ளைக்காரனுக்குத் தெரியவில்லை.   புலவர்கள் குலப்பெயர்களால் அக்காலத்தில் அறியப்பட்டனர். வேதவியாசன் செம்படவன்.  சமஸ்கிருதம் எப்படி வெளிநாட்டு மொழி ஆனது.?  உரோமாபுரியின் காலத்திலே தமிழரும் பிறரும் அங்கு சென்று இந்தியச் சொற்களைத் தந்து உதவியுள்ளனர். (சென்னைப்பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசியர் ஆய்வு முடிவு ) ஆரியர் வந்தனர் என்ற தெரிவியல் (  தியரி)  நிறுவப்படவில்லை.

சமஸ்கிருதத்தில் உள்ள வெளிநாட்டுச் சொற்கள் பெறப்பட்டவை. ஒரு மொழியில் வெளிநாட்டுச் சொற்கள் இருந்தால் அது அக்காரணத்தினால் வெளிநாட்டினர் மொழி ஆகிவிடாது.  மூன்றில் ஒரு பகுதி திராவிடச் சொற்கள் அதில் உள்ளன; ( டாக்டர் லகோவரி).  சமஸ்கிருதம்  தென்னகத்து ஒலியமைப்பை உடையது ( சுனில் குமார் சட்டர்ஜீ).

நாம் எடுத்து விளக்கிய சொற்கள் சொற்பமே. அறிக. சமஸ்கிருதத்தில் சொற்கள் 170000 க்கு மேல் உள்ளன. நாம் இங்கு விளக்கியுள்ள சொற்கள் மிகவும் குறைவு.   மொத்த எண்ணிக்கையை எட்டமுடியாது. அது ஒருவர் இருவர் செய்து முடிக்கும் வேலையன்று,

பின் செப்பம் பெறும்.