புதன், 13 செப்டம்பர், 2017

சமஸ்கிருதத்துக்கு முந்திய சந்தாசா மொழி.



சம்ஸ்கிருதம் என்ற சொல்லை மேனாட்டறிஞர் ஆய்ந்துள்ளனர்.  அதன்படி  “ நன்றாகச் செய்யப்பட்டது “ என்பது அதன் பொருள் என்று  கூறினர். இந்தப்பெயரை யார் எப்போது எந்தக் காரணத்தினால் வைத்தார் அல்லது வைத்தனர் என்பதற்கான ஆதாரம் ஒன்றும் யாருக்கும் அகப்படவில்லை. எனவே முன்னரே ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் இனி யாராவது ஆய்வு செய்வதற்குத் தடைகள்  எவையும் இல்லை.


தமிழ் என்ற சொல்லும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்றது. தொல்காப்பியப் பாயிரத்திலும் இப்பெயர் வருகின்றது.  தமிழ்வழங்குமிடத்தைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பிய நூல் குறிக்கின்றது. இவ்விடத்தை “ நாடு”  என்னாமல் “  உலகம் “ என்று குறித்தபடியால் இது சிலபல நாடுகளை உள்ளடக்கிய நிலப்பகுதி என்று பொருள்கொள்ளலாம். ( உலகம், நாடு என்பன ஒருபொருளனவாய்த் தோன்றுமிடங்களும் உளவெனினும். ).  

 தமிழ் என்ற சொல் எங்கனம் யாரால் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பதும் யார் புனைந்தது என்பதும் தெரியவில்லை. தமிழ் என்னும் சொல்லமைப்புக்குப் பலர் பல பொருள் கூறியிருப்பினும், இது  அமிழ் என்ற சொல்லினின்றும் திரிந்தது என்று அறிஞர் சிலர்  கூறுவர்.   அமிழ் > தமிழ்.  அகர வருக்கச் சொற்கள் தகர வருக்கமாகவும் திரியும் என்பது சொன்னூல் முடிபு ஆகும்.  அமிழ்தல்  என்பது தமிழ் நிலப்பகுதி கடலில் அமிழ்ந்து  போனதைக்  குறிக்கும் என்பர். சமஸ்கிருத நூல்களும் தமிழ் நிலப்பகுதி கடலிற் சென்றதைக் குறிக்கின்றன. கடல்கோள்கள் பல நிகழ்ந்துள்ளன.  அண்மைய சுனாமிகள்  இவற்றுக்குச் சான்று பகரும். 

சமஸ்கிருதம் என்ற பெயர் முதன்முதலில் இராமாயணத்தில்தான் கிடைக்கின்றது.  ஆகவே சமஸ்கிருதம் என்ற பெயர் பிற்காலப் பெயராகும். முன்னர் இம்மொழிக்குச் சந்தாசா என்று பெயரிருந்தது.  சந்த மொழியாகச் சமஸ்கிருத மிருந்ததால், இப்பெயர் பொருத்தமானது ஆகும். இது “சந்த  அசை” என்ற தமிழ்ச் சொற்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

சந்த அசை > சந்தசை > சந்தாசா

சிலவகைச் சந்தங்கள் பலரும் அறிந்தனவாய் உள்ளன. தம்-தம், தாம்-தாம், தன-தன- தனதாம்,  தாம்-தன எனப் பல உள.   தம்-தம் என்ற சந்தங்கள் திரிந்து  சந்தம் ஆயின.   த என்ற முதலுக்கு  ச என்பது ஈடாக நிற்குமிடங்களைப் பல இடுகைகளில் உரைத்துள்ளோம். தம்தம் என்பதே சந்தம் ஆம் என்றுணர்க. ஒரு திரிபைக் கண்டவுடனே மூளை குழம்பி அது வேறே   என்பார்  மொழியின் பல்வேறு திரிபுகளை அறியாதார்.  தசை = சதை:.  மறவாதீர்.

இங்ஙனம் சந்த அசை என்பது சந்தாச ஆகி அகில இந்தியச்  சேவை புரிந்ததும் நம் பாக்கியமே ஆகும்.



திங்கள், 11 செப்டம்பர், 2017

ஒடு ஓடு ஒட்டு ஒட்டுதல் : சொற்பொருள்.



Oo

இப்போது  ஒடு  என்ற சொல்லைப் பற்றி நமது சிந்தனையைச் செலுத்துவோம்..  ஒடு என்றால் உடன்செல்லுதலைக் குறிக்கிறது.  இது தனிச் சொல்லாக வாக்கியத்தில் பயன்படுவதில்லை. ஓடு என்று நீண்டும் ஒலிக்கும் இச்சொல்,  “காற்றொடு மழைத்துளி “  என்பதுபோலும் தொடரில் பிற சொற்களுடன் இணைந்து நின்று பொருள்தருகிறது. இத்தகைய சொற்களை “உருபுகள்”  எங்கிறார்கள், பொருளை வேறுபடுத்திக் காட்டுவதால், ( அதாவது அர்த்தத்தை வேறாக்கிக் காட்டுவதால் ) வேற்றுமை உருபு என்பர் இலக்கணத்தில்.

காற்றொடு என்று  ஒடு என்ற உருவிலும்  காற்றோடு என்று ஓடு என்ற நீள் உருவிலும் இது வரும். இங்கனம் ஒடு- ஓடு உருபுகளாக மட்டும் நிகழ,  அது வினையாக வேண்டுமானால் ஒட்டு (ஓட்டுதல்) என்று வரவேண்டும்.  ஒட்டுதல் என்பதன் பொருள் நீங்கள் அறிந்ததே.  ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்துப் பசை கொண்டோ அஃது இல்லாமலோ வைத்தல்.  கடிதத்தைக் கூட்டில் வைத்து ஒட்டித் தபாலில் போடு என்பதுபோலும் வாக்கியங்களைக் கேட்டிருக்கலாம்.

ஒட்டு என்பது “எல்லாம்” என்றும் பொருள்தரும்.  இது மலையாளத்தில் இன்னும் வழக்கில் உள்ளது.  “கேரளம் ஒட்டுக்கும் கிட்டுஇல்லா”  என்ற மலையாளவாக்கியத்தில் கேரளம் எல்லா இடங்களிலும் என்று பொருள்தரும்.

துணி எங்காவது கொஞ்சம் கிழிந்துவிட்டால் எறிந்துவிடாமல் ஒட்டுப்போடும் பழக்கம் ஒருகாலத்தில் இருந்தது.  தையல் எந்திரத்தால் திறமையாக ஒட்டுப்போடுகிறவர்கள் இருந்தனர். இரண்டு மலேசிய வெள்ளிக்கு  ஓர் அழகான ஒட்டுப்போடும் ஒரு சீனரை மலேசியாவின் சிலிம்ரிவர் பட்டணத்தில் சந்திக்க நேர்ந்தது.  அவருடைய பிள்ளைகள் எல்லாம் படித்துப் பெரிய பதவிகளில் அமர்ந்தபின், இந்தவேலையை விட்டுவிடும்படி வற்புறுத்தியதாகவும், தாம் இறந்தபின் யார் இவ்வேலையைத் தொடரப்போகிறார்கள் என்றும் என்னிடம் சொல்லிக் கவலைபட்டார். இது தொண்ணூறுகளில் நடந்த நிகழ்ச்சியாதலின், அப்போதே எழுபதுக்கு மேலாகிய அவர் இப்போது போயிருப்பார்.  சில ஆண்டுகளின்முன் அங்கு சென்றகாலை அவர் கடை அங்கு காணப்படவில்லை. ஓட்டுப்போடும் கலை ஒழிந்துவிட்ட்து.

ஒட்டுக்கடைகளும் இப்போது குறைந்துவருகின்றன. அவற்றுக்குப் பதிலாக ஒட்டாக இல்லாமல் தனிக்கூரைகளுடன் கூடிய நிலைக்கடைகள் பல இடங்களில் இயங்குகின்றன. சிறுதொழில் செய்து பிழைப்போருக்கு ஒரு வழி வேண்டுமே!

உடலும் தோலும் ஒட்டிக்காணப்படும் விலங்கு ஒட்டகம் எனப்படுகிறது.  ஒட்டு என்ற சொல்லுக்கு இதுவும் வலிமைசேர்க்கும் அமைப்பே ஆகும். குதித்துக் குதித்தோடுவது குதிரை ஆனதுபோல உடல் ஒட்டிய விலங்கு ஒட்டகம்,  இது தமிழன்றிப் பிறிதில்லை என்பதறிக.  “கேமல்” என்பது அதற்கான ஆங்கிலம் ஆகும்.

(எழுத்துப் பிழை திருத்தம் - கவனிக்கப்படும்).


 குறிப்பு:


தபால் -   தன்பால் கொணரப்படுவதால் த-பால் ஆனது. காரண இடுகுறியாதலால் பிறர்பால் செல்வதும் அதுவே. பிறனும் ஒரு “தான்- தன் “  என்பதில் அடக்கம்.  செய்தியைத் தந்திடுவது தந்தி.   இது தந்து என்ற எச்ச வினையினின்று புனைவுற்ற சொல்.

cha ka vice versa derivations



ககர வருக்கம் சகர வருக்கமாகத் திரிவது தமிழிலும் பிற மொழிகளிலும் காணக்கிடைப்பதாகும்.
சேரல் -  சேரன்.  ஓர் மன்னர்குலப் பெயர்.
சேரல் என்பதே முந்து வடிவமாகும்.
சேரல் > சேரலம் > கேரளம்  என்ற திரிபில் சே என்பது கே என்று திரிந்தது.
புள் > பள் > பள்+சி = பட்சி.   இது பக்கி என்றும் திரியும்,  சி -  கி  திரிபு.
பள் > பற >  பறவை.
இத்திரிபுகளைக் குறிக்கும் எம் இடுகைகள்,  தேடின்
கிடைக்கும்.
பிற பின்.


தொடர்புடையது:  ப்ர, பார் என்பது.  இதை இங்கு விளக்கவில்லை..