சனி, 22 ஜூலை, 2017

Avathaaram அவதாரம்

அவதாரம்

இந்தச் சொல்லை இப்பொழுது பார்ப்போம்.

அவமென்பது அவி+அம்  என்று பிரியும்அவித்தல் என்பது
அழித்தல்; அவிதல் தானே அழிதல்அவிஅழி. இது அம்  
விகுதி பெற்றால்அவம் ஆகும். அழிதல் என்பது  
கெட்டுவிடுதல். எனவே அவமானம் என்ற
சொல்லில்:

அவம் = கேடுமானம்பெருமை. பிறரால் மதிக்கப்படுவது.
ஆதலின் மானக்கேடு என்று இதனை வேறுவிதமாகச்  
சொல்லலாம். மானம் --பழந்தமிழர் இதனைப் பீடு என்றனர்.  
பீடுடைய மன்னன் என்ற சொல்,பீடுமன் > பீஷ்மன்  
என்றானது முன்னர் எழுதியுள்ளோம்.

இனித் தாரம் என்பது காண்போம். தரு+அம் = தாரம்
தாரமாவது தருதல்தாரம் என்ற பலபொருளுடையது
பிள்ளைகளைப் பெற்றுக்குடும்பத்துக்களிப்பவள் தாரம்  
எனபபட்டாள். தாரம் என்பது வருதல்    மீளவும்
வருதல்  என்றும் பொருள்தரும்

தரு> தார் > தாரம்வாழைத்தார்என்பது பழம்
மீளவும் வருதலால் அப்பெயர் பெற்றதுஅவதாரம்
என்ற கூட்டுச்சொல்லில் அழிந்தது மீளவும் வருதல்   
என்பதுபொருளாகிறது.  

வாழை மீண்டும் மீண்டும் பழங்களைத் தந்து
உண்ண வழிசெய்தல் போலவே அவதாரமும் அழிந்து 
அழிந்து தோன்றுதல்  என்று பொருளாகிறது.


எனவே இதை மீண்டும் அறிந்து மகிழுங்கள்

>

வியாழன், 20 ஜூலை, 2017

தலைலாமாவும் இந்தியாவும் சீனித்திருநாடும்.

இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் சிக்கிம் பூட்டான் முதலியவற்றில் உள்ள நிலப்பகுதிகளை முன்னிட்டு ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை உலக அரசியல் முன்னணியினர் எழுத்தாளர்கள் கூறியவற்றைக் கொண்டு வாசித்து அறிந்தோம். இந்த‌
நிலைக்கு யாது பரிகாரம்  என்பதையும் சிலர் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதில் தொடர்புடைய நாடுகள் நடந்துகொள்ளும் விதம்,  குடும்‍பங்களில்
ஏற்படும் தகராறு போலவே உள்ளது எனில் மிகையன்று.

சீனாவை விட்டு தலைலாமா இந்தியாவுக்கு ஓடிவந்து உயிர்பிழைத்தார்.
இவரைப் பிடித்துத்  திரும்பச் சீனாவிடம் ஒப்படைக்க இந்தியா மறுத்துவிட்டதனால்தான் தகராறு தொடங்கியது என்று சிலர் கூறியுள்ளது
சரியாகவே தோன்றுகிறது.  இன்று வரை இது ஒரு தொடர்கதை .

ஒருவன் மனைவி புருடன் அடிப்பான் என்று பயந்து அடுத்தவீட்டுக்கு
ஓடிவிட, அவளை அடுத்த  வீட்டுக்காரன் உணவும் உடையும் இடமும்
கொடுத்துக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் அவளை மீண்டும் அடிக்கும்
கணவனிடம் அனுப்ப  மறுத்தால் எப்படி? அதுபோன்றதே இது.

ஆனால் தலைலாமாவுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு மனைவிக்கும்  அவளைப் புடைக்க விரட்டும் கணவனுக்கும் உள்ள‌
தொடர்பை விடக் குறைவானதே. திபேத் என்ற தலைலாமாவின் நாடு
ஒரு தனிநாடு.  சீனாவில்  மன்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில்
திபேத்தைச் சீனா ஆண்டதாம். அந்தப் பழைய ஆட்சியை வைத்துச் சீனா
உரிமை கோரிற்று. இந்தியத் தலைவர்கள் அதை அப்போது ஏற்றுக்கொண்டனர். இல்லாவிட்டால் சீனா தொல்லை தரும் என்ற‌
அச்சத்தினால்.

பேச்சுகளின் மூலம் இது தீர்வுற வேண்டுமென்பதே நம் ஆசையாகும்.

சீனிதந்த  நன்னாடு சீனா அதுமீண்டும்
சீனியாம் நல்லமைதி   தந்தாலே ‍‍=== சீனியாம்
ஞாலத் தமைதியே பொன்னாகும் போயினது
கூலம் ஓழிக்கும் வழி.


திங்கள், 17 ஜூலை, 2017

மர் - அடிச்சொல்.

ஒரு சொல்லுக்கு என்னபொருள் என்பது தெரிந்தாலே
 நாம் அதைப் பயன்படுத்த முடிகிறது. பயன்படுத்துதலாவது: 
நாம் அச்சொல்லைப் பயன்படுத்துவதும் பிறர் பயன்படுத்தியதைப் புரிந்துகொள்வதும் என இருவகை ஆம். பொருள்
 தெரியாதபோது எழுப்பப்பட்ட ஒலி ஒரு வெற்று ஒலியே 
அன்றி வேறில்லை. நமக்குப் புரியாத மொழியிற் பிறன் பேசினால்
எழுந்த ஒலிகள் எந்தத் தாக்கத்தையும் நம்மில் 
ஏற்படுத்துவதில்லை. அவன் என்ன சொல்கிறான் 
என்று தெரிந்தவனிடம் கேட்டு அறிந்துகொள்ளும் 
ஒரு நடவடிக்கையை  மட்டுமே 
மேற்கொள்ள முடியும்,   ---  அதுவும்  தேவையானால்.

நம் மொழியிலே நாம் பயன்படுத்தும் சொல்லுக்கே 
என்ன அதன் உரிய பொருள் என்று நமக்கு சிலவேளைகளில் புலப்படுவதில்லை. ஒவ்வொரு சொல்லும் ஏன் 
அதன் பொருளைப் பெற்றது என்பது சில வேளைகளில் 
தெரிந்தாலும் சிலவேளைகளில் தெரிவதில்லை. 


மரம் என்ற சொல்லை  நாம் பயன்படுத்த அறிந்திருந்தாலும் 
அதற்கு ஏன் அந்தப் பெயர் என்று அறியோம். எனவேதான் 
"மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் 
தொல்காப்பியனார். 

பண்டைத் தமிழர் உணர்ச்சி அற்றனவாகக் கருதியவற்றை
 மரம் என்றனர். குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்
என்ற ஒளவையார் கூறுவதால் இதுவே சரியான
காரணமாம்.கால் மரத்துப்போய்விட்டது என்ற
 வழக்கை நோக்குக.மரத்தல் என்பது வினைச்சொல்.
 ஆனால் இன்றைய அறிவியல் மரங்களுக்கும்
உணர்ச்சி உண்டென்று கூறுகிறது.
இருந்தாலும் பெயர்க்காரணங்களில் நாம் மாற்றமுரைத்தல்
இயலவில்லை.

காரணம் அறிந்த பெயர் காரணப்பெயர் என்றனர். 
 காரணம் அறியாப் பெயர் இடுகுறிப்பெயர். நாற்காலி 
என்பது காரணப்பெயர் என்றாலும் நாலு கால் உடைய
எல்லாம் நாற்காலி அல்ல‌. நாய்க்கும் நாலு கால் இருந்தாலும்
அது நாற்காலி ஆகாது. இத்தகைய சொற்களை
காரண இடுகுறி என்றனர்.



மர் என்பது அடிச்சொல்.
மர் + அம் = மரம். 2
மர > மரத்தல்.
மர் + அணை = மரணை > ஸ்மரணை.
உணர்ச்சியற்ற நிலையால் அணைத்துக்கொள்ளப்படுதல். 1
அணைத்தலாவது அண்மிச்செல்லுதல்.
மர் > மரித்தல்.
மர் + அணம் =மரணம்.
மர் _> மரி + அணம் = மரணம் எனினுமாம்.
மரி + அகம் = மாரகம் (மரணம்).  முதனிலை திரிந்த (நீண்ட) தொ.பெயர்


1.   ஒ.நோ:  தீண்டு > தீட்டு   :.தீண்டின் ஏற்படும் நிலை.
          தீண்டு > தீட்டம் ( மலையாளம்)  தீண்டவொண்ணாதது.  
உணர்ச்சியுண்மையும் அஃது இன்மையும் ஒரே அளத்தலின்  இருகோடிகள்>
ஆகையால் மரி என்ற சொல்லினின்று  ( ஸ்மரணை.)  புனைந்துள்ளனர்.

2 உடல் கட்டை என்று சொல்லப்படும்.

If this post does not appear good on your screen, we are sorry. Edit features are not available now. Will make good later.