ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுந்தரி > சுந்தரன்

அரி என்றால் அழகு. இந்தச் சொல்  எப்படி அமைந்தது?

எல்லாம் கண்ணுக்கு அழகாய் இருப்பதில்லை. பல, இயல்பாகவே உள்ளன. ஆனால், பத்தில் ஒன்றிரண்டு மிக்க அழகுடையவாக‌
உள்ளன. இவை அரியவை.  அருமையானவை.

அரு>  அரி.  (அரு+ இ).

அழகில் மனிதனை உந்திவிடும் அழகும் உண்டு. கவர்ந்திழுக்கும்  அழகும் உண்டு. பருகும் பான்மையிலான அழகும் உண்டு  ----  என்று   பலர்
வரணனை செய்வர்.

உந்தும் அழகு:  உந்து + அரி.  இது உந்தரி  என்றாகும்.

உந்தரி >  சுந்தரி.  (   அகர  வருக்கம் சகர  வருக்கமாதல் )
சுந்தரி :  அழகி.
சுந்தரம் : அழகாகிய தன்மை.

சுந்தரி > சுந்தரன். (ஆண்பால்).

சில சொற்களுக்கு ஆண்பால் இல்லை. ஊர்வசி >  ஊர்வசன் என்று
காணமுடியவில்லை. அப்படி ஒருவன் கதைகளில் வரின் காண்க.




உக என்பது சுக > சுகம்

குணக்கி லிருந்துவரு கொண்டலே
தடவினை நீ என்னை,
உடலினில் சுகம் எத்துணை

என்று ஏதாவது ஒரு கவி எழுதலாம் என்று பார்த்தேன்.  என் சாளரத்தில் நின்று நோக்கின் இனிய கிழக்குக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இப்படி
எழுதினால், பலருக்குப் புரியவில்லை. அவர்களுக்காக எளிய சொற்களையே போட்டு எழுதினால் நாம் சொல்வதை எளிதில் அறிந்து
இன்புறுவார்கள்.. ஆனால் புதிய சொற்களைத் தெரிந்தின்புற வழியில்லை.

குணக்கு :  கிழக்கு
கொண்டல் : கிழக்குக் காற்று,

கொண்டல் என்பதே கிழக்குக்காற்று.  ஆக குணக்கிலிருந்து வரு
என்ற சொற்கள் தேவையற்றவை என்று சொல்லலாம்;  கொண்டல்  ~
சொற்பொருள் விளக்கத்திற்காக வேண்டுமானால் அப்படி எழுதலாம்

நான் சொல்ல வந்ததை மறந்துவிட்டு வேறு யாதோ மொழிந்துகொண்டுள்ளேன்.  ஆம்: உகத்தல் எனில் விரும்புதல்..
உக என்பது சுக >  சுகம் ஆகி விரும்பும் நிலையைக் குறிக்கும்.
அடு > அட்டி > சட்டி போல. அடுதலாவது சுடுதல். எனவே சட்டி
சுடவைக்கும் பாத்திரம். அகர முதலான சொல் சகர முதலானது.
அகர முதல் வருக்கமனைத்துக்கும் இது பொருந்துவது.  ஆக,
உகந்த நிலை  குறிக்கும் உக > சுக > சுகம்.        உகந்த >  சுகந்த,
சுகந்த சிருங்கார் என்ற ஒரு பத்தி இருந்ததாகக் கேள்வி.

will edit

சடக்கு சடு: அடிச்சொல். சடு, சட்டு

சடக்கு என்பது பற்றி முன் எழுதியதுண்டு.  அது சென்ற ஆண்டிலே எழுதப்பட்டமையினால், அழிபாடாது தப்பிற்று.

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_67.html

அழித்தலை எப்படிச் சாதித்தனர் எனின்,  ஓர் ஒட்டு மென்பொருளை
அறிமுகம் செய்வித்து, அதை ஏற்கும் படிச்  செய்தனர். பல உலாவிகளிலும் உள்ள கடிதங்களை எல்லாம் ஓரிடத்திலே காணலாம்
என்றனர். யாம் உலாவியைத் தொடங்கியவுடன் அந்த ஒட்டுமெல்லி  (Browser Add-on) அழிக்கும் தன்வேலையைத் தொடங்கி அழித்துக்கொண்டே இருக்கும். யாம் அறியாமல் இது நடைபெற்றது. பல சங்கப் பாடல்களுக்கு யாம் எழுதிய உரையும் அழிந்தன. அவை எம் பழைய கணினிகளில் இருக்கக்
கூடும்.  தேடிப்பார்க்கவேண்டும். அது நிற்க.

சடக்கு என்பதில் சடு என்பதே அடிச்சொல்.  சடு, சட்டு என்பன விரைவுக்குறிப்புகள். இம்மட்டோ?  இந்தச் சடுவும் அடு என்பதன்
திரிபன்றி வேறில்லை.  முன் இடுகையின் தொடர்பாகவே இதைப்
பார்த்தல்வேண்டும்.   https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_67.html. a/m.  இடையீடின்றி அடுத்து அடுத்து நிகழ்வதே
விரைவு ஆகும். அடுத்தல் அடிப்படை வினை. விரைவு என்பது
அவ்வினை நிகழ்வின் வெளிப்பாடன்றி வேறில்லை என்று அறிக/

இங்கிருந்து,  சடக்கு என்பதைச்  சாலை என்ற மலேசியப் பொருளில் உணரலாம்.  பெரும்பாலும் சாலைகள் வீடுகட்கு அடுத்திருக்க அமைக்கப் பட்டிருந்ததாலும், வண்டிகள் விரைவு காரணமாகவும்
சடக்கு என்பது பொருத்தமான, சாலை குறித்த சொல் ஆகும்.

சடுகுடு பற்றிப் பின் பேசலாம்.