வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்கல் வாழ்த்துக்கள்.

ஏறு தழுவலைக் காணினும் இல்லெனினும்
கூறு தமிழால் குலமொன்றாய்ச் === சீரிய‌
பொங்கல் விழவெடுத்துப் பூரித்த உள்ளமுடன்
தங்கும் மகிழ்வெய்து வீர்.

முக்கனிச் சாற்றுடன் சர்க்கரையும் சேர்த்தட்டுத்
தக்கஅரி பெய்தாக்கும் இன்பொங்கல் ‍=== உட்கொண் (டு )
அனைய‌ வளங்களும் பெற்றுய்வீர் ஆண்டில்
நினைதொறும் இன்பம் வர.

எல்லோருக்கும் எம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.





வியாழன், 12 ஜனவரி, 2017

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்


சங்க காலத்துக்குப் பிற்பாடும் தமிழ் பல்வேறுவகைகளில் வளர்ச்சி யடைந்து வந்துள்ளது. இருபது, இருபத்தொன்றாவது நூற்றாண்டுகளில் எப்படி தமிழ் நம்மிடை நிலவுகிறதென்பதை நாம் ஓரளவு அறிந்திருந்தாலும்  இவற்றுக்கு முன் ஒரு நூற்றாண்டு பின் சென்றால் என்ன நடந்தது என்பதை நாம் உடனே அறியமுடியவில்லை. இதற்குக் காரணம், இணையத்தில் எல்லாமும் கனிந்துவிடவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டை அறிந்துகொள்ள  மயிலை சீனி வேங்கடசாமியின் ஆய்வு நூல் ஓரளவுக்கு நமக்கு உதவி செய்கிறது.
இவ்வறிஞர் இந்நூலை எழுதியிராவிட்டால், இப்போது நாம் அந்நூற்றாண்டை அறிந்துகொள்ள இடர்பல உறவேண்டியிருக்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலவர்களில் இராசநல்லூர் இராமச்சந்திரக் கவிராயரும் ஒருவர். இவர் சென்னைக் கல்விச் சங்கத்தின் உறுப்பினர்.
தமிழ் அறிஞர் எல்லிஸ் துரை என்பாரின் நண்பர். இவர் 1824‍ல் வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியை இன்னொரு புலவருடன் இணைந்து 1860ல் பதிப்பித்தார்..

இவரெழுதிய நூல்களில் சகுந்தலை விலாசம் என்பதுமொன்று. இது
பிரஞ்சு மொழியிலும் ஜி. டெவ்ரீஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்படும்
சிறப்புடைத்தாகியது.

கவிராயர் சதுரகராதிக்கு ஒரு முகவுரை எழுதினார், அது கவிதை
வடிவில் அமைந்தது. அது தொடங்கிய விதம் இவர் ஆழ்புலமையை
வெளிப்படுத்துவதாய் உள்ளது.

தோலா விறலுள கோலா    னரசுசெய்
மேலான் இசைதிகழ் நாலாம் ஜார்ஜ் நாளில்
நன்றா  மனுமுறை குன்றா வகை இவண்
மன்றோ வதிபதி நின்றா ளுகையில்...........
......................

இவ்வகராதிப் பதிப்பில் இக்கவிதையை முழுமையாகப் படித்து
இன்புறுங்கள்.

-------------------------------------

அரும்பொருள் :

தோலா  - தோல்வி இல்லாத
விறல் -  வீரம், வலிமை.
கோலான்   -   செங்கோலினால் 
இசை - புகழ்
நாளில் -  பிறந்த நாளில்
நன்றா -  நன்றாக
மனுமுறை  -  மன்னு முறை  (இடைக்குறை )   :  நிலை நிற்கத் தக்க அறமுறைகளுடன் .
குன்றா -  குறையாத
மன்றோ  -  அவையினர் வியக்கும் . (ஓ - வியப்புக்குறிப்பு .)
நின்று - நிலையாக.
ஆளுகை - ஆட்சி  புரிதல் .


Jallikkattui ஜல்லிக்கட்டு

முன் ஜல்லிக்கட்டு பற்றி எழுதியவை:‍=

http://sivamaalaa.blogspot.com/2015/01/maneka-says-jallikattu-western-concept.html

ஆனால் இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.  இந்திய உச்ச  நீதிமன்றத் தடை நீடிப்பதாகத் தெரிகிறது.

என் முன்னையக்  கவிதை இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_0.html

http://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_0.html

பழமை  விளையாட்டுக்குப்  புதுமைச்  சட்டங்கள்  குறுக்கே நிற்கின்றன .

தடை விலகுமா ?