செவ்வாய், 25 அக்டோபர், 2016

பதி பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனை............

பதி என்பது பலபொருளொரு சொல்.

இது அழுந்துதல், ஒடுங்குதல், கீழ்ப்படிதல். பணிதல்,பள்ளமாதல், ஊன்றுதல்,  ஆழ்தல், தங்குதல், நிலையாதல், எழுதல். ‍ என்று பல‌
பொருளுடைத்து.

பதி என்பது, உண்மையில் பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனைக்
குறிக்கிறது. அவனே கணவன்.( கண்போன்றவன்).  புருடன் ( புருவம் போன்று கண்ணாகிய பெண்ணைக் காப்பவன்.)

கண்  புருவம் என்பவை உடலிற்  பதிந்து பயன் தரும் உறுப்புகள்.

பழங்காலத்தில் பெண்களே தலைமை தாங்கினர். பெண்வழிக் குடும்பங்களே
நடைபெற்றன.  matrilineal.   இன்றும் உலகில் சில மக்கள் கூட்டத்தினர், பெண்மைத் தலைமையே போற்றுகின்றனர்.

பெண் வீட்டிற் சென்று ஆண் பதிந்து (புகுந்து) நின்ற படியால் அவன்
பதியானான். சொத்துரிமை உடையவர்களும் பெண்களே யாவர்.

பதிதல் என்பதன் பொருளைப்  பாருங்கள். அப்போது இது நன்கு தெளிவுறும்.

ஆணின் பெயர் அல்லது ஆணின் குடும்பப் பெயரைப் பிள்ளைகள்
தாங்கியதன் காரணம், பதிந்து நின்றவனை அடையாளம் தெரிவிக்கவே
ஆகும். பெண் நிலையாக வீடு நடாத்தியதால் அவள் பெயர் இடுதல்
வேண்டாமை உணரப்படும்.

கடவுள்  சீனிவாசனும் ஸ்ரீ  என்னும்  பெண்ணில் வசித்தவனே ஆவான் .

மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே  என்ற பட்டுக்கோட்டையின்  பாட்டும்  பொருள் பொதிந்தது ஆகும்.

பெண் அடிமை  பிற்கால நிகழ்வு.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே!

இனிதான தீபஓளிப் பண்டிகையே
இன்புதரும் பலகாரம் பலவகையே!
கனிவாகப் பெரியோர்முன் பிள்ளைகளும்
களிப்புடனே ஓடியாடி விளையாடும்.

தனியாக இருப்போர்க்கும் பெருமகிழ்வே
தமிழாலே தெய்வத்தை வாழ்த்திடுவீர்
பனியோடும் பகலோனைக் கண்டுவிடில்
பாரினிலே அதுபோலப் பயன்பெறுவீர்.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே
அகிலமெலாம் தீவினையின்  நீங்கிடுக!
மனையாளும் மக்களுடன் மகிழ்நனுடன்
மனம்போலே வாழ்வுபெறும் மங்கலமே

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மரணமும் உடல் விறைப்பும்

ஒரு மனிதனோ அன்றி விலங்கோ இறந்து இயல்பான இயற்கைச் சூழ் நிலைகளில் ஏறத்தாழ நான்கு மணி நேரத்துக்குள் உடல் விறைப்பு ஏற்படுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனை ரிகோர் மார்ட்டிஸ்
 என்று  கூறுவர். பின்பு நேரம் செல்லச் செல்ல, அவ் வுடல் தளர்ந்து, பின்
அழுகிவிடத் தொடங்குகிறது.

இந்த இலத்தீன் தொடர்,மருத்துவத் துறையில் இறப்பு ஆய்வில் பயன்படுகிறது.

ரிக்கோர் மார்ட்டிஸ்:      

இறுகு  >  இறுகு ஊர் >  றுகூர்  >  rigor.


மரி தீர்  >   mortis

மரித்தல்  தீர்ந்ததும்  இறுகுதல்  ஊர்ந்தது .


ரகர  றகர  முதலாய சொற்கள் தம் இகர உகர  முதலெழுத்தை இழப்பவை .

இங்ஙனம் தமிழ்  இலத்தீனுக்குச் சொற்கொடை வழங்கியுள்ளது.

மரித்தல்  மடிதல்  என்பதன் திரிபு . இது முன் தந்த விளக்கம்.

மரணமும்  உடல்  விறைப்பும்