ஞாயிறு, 29 மே, 2016

சொம் - சொத்து - அதன் திரிபுகள்

சொம் சொத்து சொதந்திறம்.


பண்டை நாட்களில் முடியரசு இருந்தது. இப்போது குடியரசு நிலவுகின்றது. முன் மன்னராட்சி. இப்போது பல நாடுகளில் மக்களாட்சி. இப்போது மன்னர்கள் வீற்றிருக்கும் நாடுகளிலும் கூட, அவர்கள் ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகன்று வெறும் அடையாளமாகவே
உள்ளனர். ஓர்  அமைச்சரவை பரிந்துரை செய்வனவற்றை ஆமோத்தித்து (ஆம் ஆம் என்று ஓதிக்கொண்டு ) கையெழுத்திடுவோராக உள்ளனர். தேர்ந்தெடுக்கப் பட்டோரே முடிவுகளைச் செய்ய வல்லார் என்று அரசியல் அமைப்புச் சட்டங்கள் சொல்கின்றன.

மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னனே சொத்துக்களுக்கெல்லாம் அதிபதியாய் இருந்தான். எல்லா அதிகாரங்களையும் தன்னுள்ளே அவன் பதிந்து வைத்துக்கொண்டிருந்ததால் அதி - அதிகாரங்களைப் பதி - பதிந்துவைத்துக் கொண்டவன். அதிபதி. சொத்துக்களை அவன் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொன்டான். அவனுக்கு மனைவிகள் பலர் இருந்தனர்.
முறைப்படிப்  பட்டம் சூடியவள் அரசி. மற்ற அவன் காதலுக்குரிய பெண்கள் மனைவிகளே ஆயினும், அரசியர் அல்லர். அவன் அந்தரங்கம் எல்லாம் அறிவீரோ? அந்த + அரங்கம் ! மன்னனின் மனையாட்டியர் அரங்கம் !. அதுதான் அரங்கம் .--- அந்தரங்கம் . அவர்கள் வாழ்ந்த இடம் - அந்தப் புறம். அரசியல் நடவடிக்கைகளுக்குப் புறமான இடம். அந்தப்புரம் ஆயிற்று அந்த : இது இடக்கர் அடக்கல் பிறகு . அங்குமின்றி இங்குமின்றி இருந்தவர்கள் அந்தரத்தில் இருந்தனர். அந்த அரிய இடம். அந்த+ அரு+ அம். அந்தரம். இதுபின் மேல் நோக்கியும் சென்று வெட்ட வெளியில் உள்ள அந்தர இடத்தையும் குறித்தது. அந்தரம் என்பதற்கு வேறு விளக்கமும் அமையும். புனைவுச் சொற்கள் வேறு பொருள்களிலும் சிலேடையாகவும் போதரும்.

அரசனுக்குப் பிறந்தோர் அவன் பிள்ளைகள். இளவரசுப் பட்டம் . அவன் பட்டத்து இளவரசன்.மற்ற அரசனின் பிள்ளைகள் இளவரசர்கள். இளவரசர் ஆகாதோர் வேறு பல பட்டங்கள், நிலங்கள், பொருள்கள் கொடுக்கப்பட்டனர். அவர்கள் பிள்ளைகள் என வழங்கப் பட்டனர். பிள்ளை என்பது ஒரு பட்டம் ஆயிற்று.

அரசன் கொடுப்பதே சொத்து, சொம்+ தம் = சொந்தம். சொம் + து = சொத்து.
அவர்கள் தம் சொம்முடன் (சொத்துக்களுடன் ) சொம்+ தம்+ திறமா க ( சொதந்திரமாக, இன்றைய வடிவம் சுதந்திரமாக ) -- அதாவது அரசனிடம் இருந்து கிட்டிய சொத்துக்களைத் தம் திறத்திற்கேற்ப
(திறம் காட்டி) நிறுவாகம் செய்து பிழைப்பார் ஆயினர்.

அரசர்கள் இருந்ததும் அவர்களுக்கு பல மனைவியர் இருந்ததும் சொத்துக்கள் இருந்ததும் சொத்துக்கள் பெற்றோர் சொம்+தம்+திறமாகச் செயல் பட்டதும் ஒன்றும் பெரியன  அன்று. இதில் சில சொற்களை விளக்கியுள்ளேன்.
அதைப் புரிந்து கொள்வீர்..பின்னர் வேண்டின் திருத்தப்படும்,.

சொம் சொத்து சொதந்திறம்.

வெள்ளி, 27 மே, 2016

ஆசாரம். ஆஸ்தி ஆதி

ஆசு  என்ற  அடிச்  சொல்  பல சொற்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.  அவற்றுள் சில இங்கு கவனிப்போம்.

ஆசு என்பதன் அமைப்பு முன் விளக்கப்பட்டுள்ளது.  அதை இப்போது சுருக்கமாக நினைவு கொள்ளுதல் நலம் பயக்கும்.

ஆ   >  ஆதல்.
ஆ  >  ஆதி    (ஆக்க  நாள்   தொடக்க நாள். )
ஆ  >  ஆசு,     எதையும் ஆக்குதற்கு  உதவுவது.    அது :
   ஆதரவு,  பற்றுக்கோடு.


( பற்றுக்கோடு  -   பற்றிக்கொள்ளுதல். பற்றத் தரும் பொருள்.  

ஒரு மரக் கொம்பு  பற்றி ஏறத் துணசெய்கிறது.  அதாவது பற்றக்கொடுக்கிறது.   அது பற்றுக்கோடு எனப்படும்.  கொடு > கோடு,  மற்றும்  கொள்+ து  = கோடு. இப்படி இருவகையிலும் வரும்.  )

ஆசு + தி  > ஆஸ்தி   (  ஆஸ்தி. இதில் தி என்பது தொழிற்பெயர் விகுதி.)
ஆசுதி > ஆஸ்தி.  ( ஆக்கப்பட்டு ஒருவனுக்கு உரிமையான பொருள்களின் தொகுதி.

ஆசுதி என்பது ஆஸ்தி என்று மாறி அமைந்ததால்,  ஆசுதி என்ற முதல் அமைப்புச் சொல் வழக்கில் இல்லையாயிற்று.   கடு> கட்டம் > கஷ்டம் என்ற திரிபில்,  கஷ்டம் வந்தபின் கட்டம் என்பது அப்பொருளில் உலவுதல் ஒழிந்தது.  அதுபோலவே.

ஆசு +  அருத்தல்  >  ஆசருத்தல்.

அருந்து > அருத்து:  ஊட்டுதல்.

ஆசருத்தல் > ஆசரித்தல்:     உ> இ  திரிபு.

ஆசரித்தல் >  கடைப்பிடித்தல்.  பற்றி  நடத்தல். (பற்று ஊட்டுதல் )

ஆசரித்தல் >ஆசாரம்.  (பற்றி நடக்கும் முறையமைப்பு).

மற்ற தொடர்புடைய சொற்களைப் பின் கவனிப்போம்.



ஆ+ சாரம் = ஆசாரம் :  சாரம் ஆவது;  சார்ந்து  நடக்கத் தக்கது.  வினைத்தொகையுமாகும்.

வாடகை வரும்படியும் முகவர்களும்

மலேசியாவில் வீடுகள் வாங்கிப் பலர்  வாடகைக்கு விடுகிறார்கள். இதைப் பற்றிக் கொஞ்சம் உரையாடுவோம்,

இப்போது புதிய மற்றும் பழைய வீடுகள் மிகப்பல வாங்குவதற்குக் கிடைக்கின்றன .  முழுமையான வீட்டின் விலைக்கான தொகையையும் கட்டி வீட்டை வாங்கலாம்,   ஆனால் ஒரு பெருந்தொகை  அதில் போய் அகப்பட்டுக் கொள்ளும்,  அதை விற்று மீண்டும் முதலாக்கும் வரை இந்த நிலை தொடரும்,  இப்படிச் செயல்பட இயலுமா என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து நீங்கள் செய்யத் தக்கது  வீட்டைத் தவணை முறையில் வாங்கலாம், அப்படி வாங்கினால் மாதாமாதம் தவணையைச் செலுத்தவேண்டும்.  உங்கள் மாத வருமானத்திலிருந்து  இதைச் செலுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும்   இதில் கொஞ்சம்  இடிக்கிறது  என்றால் அல்லது வேறு காரணங்கள் இருந்தால்  வாங்கின வீட்டை வாடகைக்கு  விட்டுவிடலாம்.

இங்குதான் பிரச்சினை தோன்றுகிறது.  பிற -  மற்ற,  சினை = உறுப்பு  அல்லது  காரணங்கள்.  பிற என்பது பின் பிர  என்று  மாறிவிட்டது. 

வீட்டில் குடியிருக்கும் கூட்டம் வீட்டைச் சின்னாபின்ன மாக்கிவிடுகிறது.   வீட்டுக் கம்பிகளைப் பேர்த்து எடுத்து விற்றுவிடுகிறார்கள்.  தரை ஓடுகளை உடைத்துவிடுகிறார்கள் ,  மின் கம்பிகளைச் சுவருக்குள் இருந்து வெளியில் இழுத்துத்  தொங்க விடுகிறார்கள்.  பின் வேலிகளை அகற்றிவிடுகிறார்கள்.   நீங்கள் நினைக்காதவை எல்லாம் செய்து விடுவார்கள்.  ஆக மொத்தத்தில்  வீட்டை வாங்கியதற்குத் தண்டனை கிடைத்தது போலத்தான்,  வந்த வாடகை  பத்தாயிரம் என்றால் இப்போது வீட்டைப் புதுப்பிக்க  ஓர் இலட்சம் செலவு செய்ய வேண்டும். புதிய வீடு ஓட்டை வீடாகி விடுகிறது . கதவுகளில் ஒரு  புட்டுக் கூட உடைபடாமல் இருக்காது.  சாவியை எங்கேயோ விட்டுவிட்டேனே  கதவை உடை.கண்ணாடியை  நொறுக்கி உள்ளே போ என்றபடி செயல் படுவர்/

மூன்று மாதமோ நான்கு மாதமோ வாடகைப் பாக்கி வைத்துவிட்டு ஓடிவிடுவார்கள்.  வீட்டின் சாவி உங்களிடம் இருந்தால் மீண்டும் உள்ளே புக அது பயன்படலாம்.  அவர்களை மேற்பார்ப்பது உங்கள் 24 மணி நேர வேலையாய் இருந்தால்  ஒருவேளை தப்பிக்கலாம்.  ஒரே தேதியில் வாடகை  வந்து சேராது.  இடையில் ஓரிரு மாதங்கள் இடைவெளியை ஏற்படுத்துவார்கள். 

மகிழுந்துகள் வைத்திருப்பார்கள். புதிதாக வாங்கி ஓட்டிவிட்டு  அதற்கும் காசு கட்டாமல் அந்த வண்டி நிறுவனம் வந்து இழுத்துக் கொண்டுபோய்விட்டால் இன்னொன்று  வாங்குவர் . அப்புறம் அதற்கும் அதே கதிதான்.

அப்புறம் முகவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.