திங்கள், 4 ஏப்ரல், 2016

தந்தியும் தந்திரங்களும்

இப்போதெல்லாம் தந்தி பற்றிக் கேளிவிப்படுவதில்லை.  மின்னஞ்சல் என்ற இ‍மெயில் மற்றும் பல புதியன புகுந்தபின், தந்திக்கு வேலை வெகுவாகக் குறைந்துவிட்டது. குறுஞ்செய்தி அனுப்பலாமே, உங்கள் கைபேசியிலிருந்து!  அப்புறம் தந்தி எதற்கு?

த ‍  :  தனக்கு வருவதாகிய செய்தி.
தி   :  நீங்கள்  திருப்பி அனுப்புவதாகிய செய்தி.

ஆக, த + தி >  தந்தி.  தத்தி என்றால் தத்தித்தத்தி என்ற சொல்லுடன் இடிபாடுறுவதால், மெலித்துத் தந்தி எனப்பட்டது.  மேலும் இருபக்கமும் செய்தி தந்திடுதல் என்னும் குறிப்பையும் அகப்படுத்துவதாய்ச் சொல் அமைவுற்றது.

மேலும் தந்தி என்பது கம்பி  நரம்பு என்றும் பொருள்படுவதால் வெகுபொருத்தமாகிவிடுகிறது.

பல பொருத்தங்கள் அமைந்த சொல் இதுவாகும்.

திருமணத்துக்குப்  பொருத்தம் பார்ப்பதுபோல் சொல் அமைக்கவும் பொருத்தம் பார்த்து அமைத்தால்  நன்றாக இருக்குமே!  கடின ஒலிகள் வருமேல் மெல்லொலி  புகுத்தவேண்டும். நீட்டம் ஆகுமேல் சுருக்க வேண்டும். இப்படிப் பல தந்திரங்களைக் கையாளுங்கள்.






ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சிவஞான போதத்தின் 8ம் சூத்திரm

இப்போது சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரத்தையும்   சூத்திரத்தின் பொருளையும்  நோக்குவோம். பின்னர்  சற்று விரிவாக உணர்ந்து கொள்வோம்.

நூற்பா இது:

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

ஐம்புல வேடரின்  -   மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்  ஐந்து புலன்களாகிய வேட்டையாடுநரின் ;

அயர்ந்தனை வளர்ந்து என    -    ஒருங்கு இணைந்த  தொடர் இயக்கத்தினால்   சொந்த வடிவத்தையும் அதன்கண் உள்ள ஆன்மாவினையும் உணராமல் மயங்கி,      என்றபடியாக ;

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த   -   தமது முன் நிற்கும் ஆசிரியனாய்த்  தவநிலையில் நின்று தனக்குச்  சிறப்பு  அறிவு புகட்டவே;


 விட்டு  -  அவ் அறியாமையைக் களைந்து;

அன்னியம் இன்மையின்  ---சிவம் தன்னின் வேறானது அன்றென்னும்  ஞானம்  அடைந்ததனால் ;

அரன்கழல் செலுமே.   -     சிவத்துடன் ஒன்றுபடுவதாகும். ( சிவத்தின் திருவடிகளிற்  புகும் இறுதியுறுதி அடையும்  )

சிவத்துட் செல்லும் என்பது கவி நயத்துடன்  அரன்கழல் செலுமே எனப்பட்டது.

அன்னியம் என்பது முன் இவ் வலைப்பூவில் விளக்கப்பட்டுள்ளது.  அங்குக் காண்க,  மற்றும்  https://bishyamala.wordpress.com/2016/04/04/376/  என்ற வலைப்பூவிலும்  காணலாம்.


சனி, 2 ஏப்ரல், 2016

மது: சொல்லின் தோற்றம்

தமிழர்கள் பண்டு நன்கறிந்த முன்மைக் குடிவகை கள் ஆகும்.

சங்கப் பாடல்களில் கள் பலவிடங்களில் குறிக்கப்பெறுகிறது.

கள் உண்ணாமை வள்ளுவனால் பரிந்துரைக்கப் படுகிறது. களித்தல் என்பது இன்று மகிழ்தல் என்னும் பொதுப்பொருளில் வழங்கினும் பண்டையருக்கு அது கள்ளுண்டு மகிழ்தல் என்ற சிறப்புப் பொருளில் நின்று தெம்பு தந்தது.  கள்> களி > களித்தல்.  கள் என்ற சொல்லுடன் ஓர் இகரம் இணைந்து வினைச்சொல் ஆகிற்று. இப்படி இகர இறுதிபெற்று வினையாக்கம் அடைந்த இன்னொரு சொல் உதித்தல்.
உது > உதி > உதித்தல்.  அது,இது உது என்பவற்றில் உது :  முன்னிருப்பது. உதித்தல்  :  முன் தோன்றுதல். உது + ஐ + அம் =உதையம் ‍>  உதயம் (  ஐ >  அ:  ஐகாரக் குறுக்கம் ).

பண்டைத் தமிழர் அறிந்த வேறு குடிவகைகள் யாவை? இது ஆய்வுக்குரியது ஆகும்.  ஆனால் கள் உள்ளிட்ட ஏனைக் குடிவகைகளையும் சுட்டும் ஒரு பொதுச்சொல் தேவைப்பட்டது.
அதற்காக மது என்னும் சொல் படைக்கப்பட்டது.

இது பேச்சு வழக்கில் தோன்றியது.  மயக்குவது என்னும் சொல்லில்
இடையில் நின்ற எழுத்துக்களை  எறிந்துவிட்டு  ம து என்று அதைக்
குறித்தனர். இது பின் சங்கதத்திலும் தமிழிலும் வழக்குப் பெற்றது.

மது என்பதில் மத் என்பதைப் பகுதியாகவும் உ என்பதை இறுதி நிலையாகவும் கண்டு இதை எளிதில் மறைத்துவிடலாம். இதில் ஏதும் தொல்லைகள் இல்லை.

இது  1.1.14ல் இங்கு வெளியிடப்பட்டது.  ஆனால் இந்த ஆய்வைப் பிடிக்காதவர்களால்  அழிக்கப்பட்டது. வேண்டுமானால் இதை உங்கள் கணிணியில் பதிவு செய்து வைத்துக்கொள்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை..  இதை மீண்டும் எழுதியுள்ளேன்.
Opponents do mischief by attaching add-ons to our browsers.