வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஓரம் என்ற சொல்

ஓரமென்பது  ஒரு பக்கத்தின் முடிவு அல்லது எல்லை.    இதை ஓர் என்ற சொல்லுடன் தொடர்புறுத்தவேண்டும்.  ஓர்  என்பது ஒரு பெயர்ச்சொல்  அல்லது எண்ணுப்பெயர் ,  ஓர்தல் என்ற வினைச்சொல் உண்டென்றாலும்  அது ஒருபக்க இறுதிக்குச் செல்வதைக் குறிக்கவில்லை.  இதிலிருந்து நாம் அறிவது யாதெனின்  ஒரு பெயரிலிருந்து விகுதி இணைந்து இன்னொரு பெயர் தோன்றுமென்பதுதான்,  விகுதி வினைச்சொல்லில்தான் இணையவேண்டுமென்பதில்லை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்,

ஓர் ​+ அம் >  ஓரம்   ஆகும்.
ஓர் + அல்  =  ஓரல்   (பொருள்:  ஒடுக்கம்).

ஒரு பக்கமாகப் போ என்றும் பேச்சில் உள்ளது.  ஓரம் கடந்தால் வீழ்ச்சி  ஏற்படலாம் ஆகையால்  வீழ்ச்சி ஏற்படுமுன் உள்ள இடமே பக்கத்தின் எல்லை  ஆகும்.

விகுதி பெறும் சொல்  உண்மையில்  நீண்டு விடுகின்றது ,   நீள்வது  மிகுதி . மிகுதி என்பது விகுதி என்று திரிந்து வழங்குகிறது.   ம -  வ  திரிபு  இது.

மிஞ்சுதல் -   விஞ்சுதல் .
மழித்தல்  -  வழி த்தல்
மிரட்டுதல் -  விரட்டுதல்
         விரட்டுதல் என்பதற்கு  அச்சுறுத்தல் என்றும் பொருளுண்டு.
மிருகம் :  இது விருகம் என்றும் வரும்.
மீதம் -   வீதம் ( விடப்பட்டது,  மிகுந்தது  என்ற பொருளில் )
(  மிகுதம் > மீதம் ,     பகுதி > பாதி எனல் போல.
பகு  பா,   மிகு > மீ.

இது  மிகுதி > விகுதி என்பதை உறுதி செய்கிறது,

விகற்பித்தல் என்பதும் மிகற்பித்தல்  (மிகல்+ பு+ இ+ தல் ) என்பதன் திரிபே.. மிகுதி என்பதும்  வேறுபடுதலே.  குறைதல் இன்னொரு வேறுபாடு.\\

சொற்கள் சிறப்புப் பொருளில் வழங்கிப்   பின் பொதுப்பொருள் அடைகை  இயல்பாம்.

இதன்மூலம்  ஓரம் என்பது விளக்கப்பட்டதுடன், தொடர்புடைய சிலவும் அறிந்து இன்புற்றோம்.


   






புதன், 10 பிப்ரவரி, 2016

சி-போதம் ஐந்தாம் பாடற் பொருளை......

முன்  இடுகை:http://sivamaalaa.blogspot.sg/2016/01/5.html


சிவஞான  போதம் ஐந்தாம் பாடற் பொருளை இப்போது அறிந்து மகிழ்வோம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளம்பிய  உள்ளத்து -  முன் சொன்ன  உடற்கண் உள்ளதாகிய உயிரால்;

உள்ள அத்து  = உள்ள அது = உள்ள (உயிர்)  காரணமாக;  அது என்பது  உயிரைச்  சுட்டியது.

இங்கு அது என்பது அத்து என்று  இரட்டித்து நின்றது.

மெய்வாய் கண் மூக்கு செவி  : ( இங்கு கூறிய )  ஐந்து புலன்களும்

அளந்து  -   அளவிட்டு;

அறிந்து  -  தெரிந்து  (கொள்ளுமென்றாலும்)

அறியா  -   உண்மையில் அவை தாமே எதையும் அறியவில்லை;

ஆங்கு அவை  போல  -    அந்த ஐம்புலன்களும் தாமே அறிதல் போலும் தோற்றத்தை உண்டாக்கி ;

தம்  தமி  அருள் -  தம்    தம்மில் ஒன்றாயிருக்கும்  சிவத்தின் அருளினால்;; (அறிதல்  நடைபெறுகின்றது )

தமி =   தமித்து இயங்கும்  சிவம்;  வேறோர்  ஆற்றலின் துணையின்றி இயங்கும் .  இறைவன்;

காந்தம் கண்ட பசாசத்து  =  காந்தத்தை  அணுகிய இரும்பு  போல  ஐம்புலன்களுக்கும்  அவ்வாற்றல்  வந்து  சேர்ந்து  இயக்கத்தையும்  உணர் ஆற்றலையும்  அளிக்கும் தன்மை  அதுவாகும்,

பசாசம் - இரும்பு.    அது,    பசாசம் > பசாசம் அத்து என்று இரட்டித்தது. 
  பசாசம்   அதுவாகும் என்றபடி 

.பசாசம்  -   இச்சொல் பைசாசம் @ என்றும்  வழங்கும்.  பச்சை இரும்பு என்ற வழக்கும்  உள்ளது.    இரும்பு வேலைக்காரனால்   அடித்துச் செய்யப்படாத   இரும்பை   இது  குறிக்கும்.    பசுமை +  அசம்   =  பசாசம் . மை விகுதி கெட்டு  சகரம்  நீண்டது.    அயம் ( இரும்பு ) >  அசம்     யகரம் - சகரமாய்த் திரிந்தது.   நேயம் >  நேசம்  போல.

@   பசாசம் -  பைசாசம்   இது  பசுந்தமிழ் > பைந்தமிழ்  போன்ற திரிபு.   (  பிசாசு - பைசாசம்  என்பது வேறு .    குழம்பலாகாது. ) 

காந்தம்   <   காந்தி  இழுத்தல் .   காந்துதல்  அதன் இழுப்பு  ஆற்றலைக் குறித்தது. தீயினால்  காந்துதலோடு  ஒப்பிட்டு ச்  சொல் அமைந்துள்ளது.
சோற்றுப்பானை  சூடேறிச்   சோறு   காந்தும்போது   உள்  அடியில்  சோறு  ஒட்டிக் கொள்கிறது,   இதையறிந்த தமிழர் ,   இழுக்கும் இரும்பிலும்  உட்சூடு 
இருக்குமென்று  எண்ணி  அதைக் காந்தம்  ( காந்து ​+ அம )  என்றனர்.  இரும்புத் துண்டுகளை  உரசினால்  சூடு ஏறும்;  கூடினால் பொறிகூடப் பறக்கும்.   ஊர்மக்கட்கும்    கருமகற்கும்  இது  போதுமே!

Some changes in the commentary text were noticed and corrected.  Anti-Virus facility warned that some add-ons are making unintended changes. 





Print staff can mess up

சாதிசமம்  அக்கொடுமை தானெண்ணார்  பெண்ணடிமை 
 ஆதிப் புதியவுல  கார்/

-----  பண்டித  வீ  சேகரம் பிள்ளை . of  Colombo,
         circa 1938 in Singapore
Editor of  Puthiya Ulagam a Tamil Monthly Magazine. Singapore.
printed at Star Press/

The Kural veNpaa appeared as signature verse in the front page of the Magazine.

பதிப்பிப்பவர்களுக்குப்  புரியாவிட்டால் அவர்கள் பாட்டைத் திருத்த முற்படுவதுண்டு. பதிப்பின்போது:

"சாதிசம  மக்கொடுமை "  என்று  சேர்த்து எழுதப்பட்டிருந்ததால்  அதை அவர்கள் :சாதிசம  யக்கொடுமை "   என்று  மாற்றினராம்.   ஆசிரியர் பிள்ளை அவர்கள்  பதிப்போரை  மிகவும் கடிந்துகொண்டாராம்.  பின் அது திருத்தம்பெற்று வெளியிடப்பட்டதென்ப .  நவசக்தி ஆசிரியர்  திரு வி  க  அவர்களுக்கும்  நூற்படி  ( copy )    அனுப்பப் பட்டதென்பர்.

நம் காலத்துக்கு முந்திய வரலாற்றில்  ஒரு துணுக்கு.