செவ்வாய், 24 நவம்பர், 2015

போட்ட குப்பையிலே.....

நீங்கள் போட்ட குப்பையிலே
நெளிகிற பூச்சி  புழுக்களையே
நீங்கள் வெறுத்த போதிலுமே
உங்களை வந்தே சேர்ந்திடுமே.

மழையின்  நீரும் ஓடாமல்
வெள்ளப் பெருக்கால் கேடாமே!
உளையும் சகதியும் மிதமிஞ்சி
ஊர்க்குள் உயிர்கள் வதமாமே

ஏரியுள் கழிவுகள்  சேராவேல்
என்றும்,குடிக்க  நீராமே
மாரியும் உம்மைக் காப்பாளே
மாய்க்கும் நோய்களைத் தீர்ப்பாளே!

ஏரியுள் கூளம் எறிந்தாலோ
எடுத்திடச் செலவு  தெரிந்தாலோ.
காரியம் நல்லது கைக்கொள்வீர்
கடமை இதுவென மெய்சொல்வீர்.:

சிவனும் சிவப்பாலமும்

இந்த சிவப்பாலம் என்பது  சிங்கப்பூரில் கம்போங் ஜாவா சாலையில்  (road)  இருந்த ஒரு பாலம்.   சிவ எனும்  அடைமொழி பெற்றிருந்ததால் அங்கு சிவன் இருப்பார் என்றோ சிவன் கோயில் இருக்குமென்றோ  நினைக்காதீர் .  அது ஒரு சிவப்புச்  பூசிய பாலமாக இருந்ததுதான் காரணம்.  மலாய் மக்கள் அதை  Jambatan Merah என்று  கூறினதால், அதை மொழி பெயர்த்து  சிவப்புப் பாலம் என்றனர் தமிழர் .   அப்புறம்  அது  சிவப்பாலம்  என்று  குறுகி  அமைந்தது.  (மரூஉ )  jambatan  பாலம்    merah  சிவப்பு.

மலாய்க் கம்பங்கள்  அல்லது சிற்றூர்கள்  அருகிலிருந்தன.  இப்போது  இவைகள் அங்கில்லை.   பாலத்துக்கு வேறு  சாயம்  பூசியவுடன்  அங்கிருந்த merah puteh gang ( a secret society)  செங்கருமைக்  குண்டர்  கோட்டியினர்  எங்கு போயினர்  என்பதை யாரும் அறிந்திலர்.  குண்டர்கள்  தங்கள்  மண்டர் தகுதியை இழந்தனர் போலும். ( மண்டர்  {தமிழ் }-  champions.     திவாகர நிகண்டு காண்க.)

ஏன் வேறு சாயம் பூசினார்கள்?   ஒன்றுமில்லை;    இருந்த சாயங்களைப் பூசி
இனிமை  காண்பதற்கே.  கட்டுக் கிடையாய்க் கிடக்கும் சாயங்கள் கெட்டுப் போகும். பூசி மகிழ்க .

பாலம்  இருக்கிறது;  (மேம்படுத்தப் பட்டு).
பாடை  மறைகிறது.  பார்வை  மாறுகிறது.

இலுப்பை மற்றும் இனிமை


==========================

இலுப்பைக்கும் இனிமைக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்வோம்.

இலுப்பைக் காய் பழுத்தவுடன் சர்க்கரை போலும் ஓர் இனிமை இதில் உள்ளது. யாம் சுவைத்துப் பார்த்தவை வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாட்டில் விளைந்தவை. இதை மலாய் மொழியில் "சிக்கு"   chiku என்பார்கள்.  chiku  not siku. Do not mispronounce.  Now written as ciku. 

இலுப்பை என்ற சொல்லின் அடி, இல் என்பது. அது சிதைவு அடையாமல் சொல்லில் இன்னும் வாழ்கின்றது.

இனிமை என்ற சொல்லின் அடி இன் என்பது. இது, இன்> இனி> இனிமை என்று அமைந்தது. இன்மை (இல்லாமை) என்பதில் வரும் இன் - சந்தியில் தோன்றியதாகையால் அது வேறு என்க.


இல் என்பது இன் என்று மாறும். இவ்விரண்டில் இல் என்பதே மூலம். இல் என்பது பல்பொருள் கொண்ட ஓர் மூலச்சொல். இதன் எல்லாப் பரிமாணங்களின் உள்ளும் இங்கு யாம் புக முற்படவில்லை, பரிமாணம் ஆவது பரிந்து சிறப்பது. அதாவது தோன்றிப் போல இருப்பவற்றினின்று அழகுற்று வேறுபடுவது,, தோன்றிப் போன்மையின் வேறுபடல். மாணுதல் = சிறத்தல். மாண்> மாணு > மாணம். எனவே பரிமாணம். பரிதல் - வெளிப்படுதல். பரி > பரிதி. முன் வெளிப்பட்டதாகிய சூரியன். அதிலிருந்து வெளிப்பட்டன ஏனைக் கோள்கள். காற்றுப் பரிதல் ( வெளிப்படல்) என்னும் பேச்சு வழக்கை நோக்குக.. இத் தடப் பெயர்வு நிற்க



இல் = இன். l and n interchangeable  and not language-specific,
இல் >இலுப்பை
இன் > இனிப்பு.

இல்> இலுப்பு> இலுப்பை.
இன் > இனுப்பு > இனிப்பு.
இலுப்பு> இனுப்பு > இனிப்பு.

இனிப்பு என்பதைப் பேச்சில் இனுப்பு என்று பலுக்குவோர் பலர் உளர். அது இனிப்புக்கு முந்திய வடிவம்.

தமிழில் இனுப்பு என்பதை இனுப்பு என்றே பேசினோரும் அதை இனிப்பு என்று பேசினோரும் என இருசாரார் இருக்க, இனிப்பு என்பதே எழுத்தில் முதலில் வந்து நிலைத்துவிட்டது;

மொழி ஆய்வு வேறு. மொழியை தற்கால நிலைப்படி மரபு காத்தல் என்பது வேறு. பேச்சுக்குப் பிந்தியது எழுத்து. விரி வரிக்க - விவரிக்கத் தேவை இல்லை.


Shall meet and greet again.  Pl stay tuned.

Learn more:   பின் து  > பிந்து   முன் து >  முந்து;  மன் + திறம்  மந்திரம்   திறம் >  திரம் Said long ago a few times ........Enjoy.