வியாழன், 18 ஜூன், 2015

savam utsavam

உத்சவ என்ற சொல்லை இதுகாலை கவனிப்போம்.

இது  ஒரு  சமத்கிருதச் சொல்.

இதன் பொருளை நோக்கினால்:


1 சவ :  செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு.  ஊற்றுதல்:   நிலா . ;தேன் .
தொடங்குவோன்   பின்பற்றுவோன்  தூண்டுவோன்  தலைவன்; இன்ன பிற.  கட்டளை;  திருமுழுக்காட்டு முதலிய தொடக்கச் செயல்பாடுகள்; பலியிடுதல்  ஒரு வருடம்;  வழித்தோன்றல்கள் 


தமிழில் பிணம் என்று பொருள்தரும் சவம் என்ற சொல்லுக்கும் மேற்கண்டவற்றுக்கும் தொடர்பில்லை.

சவம் என்பது சாவு என்ற சொல்லினின்றும் பிறக்கிறது.

சாவு+ அம் = (சாவம்)  > சவம்.  இங்கு முதலெழுத்து குறுகிற்று.
சா >ச.   இதுபோன்ற குறுக்கங்கள் முன்பு ஈண்டு விளக்கப்பெற்றுள்ளன. (பழைய இடுகைகளைக் காணவும்).

உற்சவத்தில் உள்ள சவம், அல்லது ஸவம், சவத்துடன்  (பிணத்துடன்) தொடர்பில்லாதது.

சவை - சுவை;  சவைத்தல்- சுவைத்தல். 

சவை + அம்  =  சவம் (  ஐகாரம் கெட்டது )

ஓரிடத்தில் மக்கள் கூடி ஒரு நிகழ்வினைக் காணுதலைக் குறிக்கும் சொல்  இதனின்றும் தோன்றியிருத்தல் கூடுமென்பது ஆயத்தக்கது.

செவ்வாய், 16 ஜூன், 2015

பழமும் தோலும

வாழைப்பழத்தை உண்டுவிட்டுத்
தோலை ஆட்டுக்குக் கொடுத்தேன்;
ஆடு அதனைச் சுவைத்து உண்டது;

பழம் கொடுக்காமல் ஆட்டை ஏமாற்றிவிட்டேனே

என்று வருந்தி

இன்னொரு பழம் உரித்துப்
பழத்தை மட்டுமே கொடுத்தேன்;

பழத்தை விரும்பாமல் தரையில் போட்டது.
தோலைப் பார்த்தது

தோலை உண்டு மகிழ்ந்தது.

பழம் தரையில் கிடந்தது.     ஆட்டுக்கோ அதில் ஆர்வமில்லை.

பண்பறிந்து செயலாற்று என்ற வள்ளுவனின் குறள் நினைவுக்கு வந்தது






\\\



திங்கள், 15 ஜூன், 2015

சீரகம் என்றே சொல்லவும்

உடம்பினைச்  சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும் விதைக்குச் சீரகம் என்று பெயரிடப்பெற்றது. பின் இது சோம்பு என்ற சற்றுப் பெரிய விதையுடன் ஒப்பிடப்பட்டு  நச்சீரகமென்று பெயர்பெற்றது.

ந என்ற ,முன்னொட்டுப் பெற்ற து நல்லது என்றும் சிறியது என்றும் பொருள்படும்.  இது சில புலவர் பெயர்களிலும் வரும். நப்பின்னையார் நச்செள்ளையார் முதலியன  காண்க.

இன்று சீரகம் என்பது ஜீரகம் என்று  மாறிவிட்டது;  சீனி என்பது ஜீனி என்று மாறிவிட்டது போன்றதே இது.

இதைச் சீரகம் என்றே சொல்லவும் எழுதவும் வேண்டும்,