சனி, 26 ஜூலை, 2014

சிதல்

மண்ணின்  ஈரத்தில் தன்  திண்மை  இழந்து  மெதுவாகிவிட்ட மரக் கட்டைகள்
கரையானுக்கு மிகவும் பிடித்தவை.   நாம் குளம்பிக்கு (காபிக்கு) முறுக்கைக் கடித்துக்கொள்வதுபோல் தின்னத்  தொடங்கி  விடுகின்றன.

கரையான் மரத்தை அரிக்காவிட்டாலும் நாளடைவில் அந்த மரக் கட்டைகள் சிதைந்துதான்   போகும்.  கரையான் அந்தச் சிதைவை விரைவுப் படுத்துகிறது என்கிறார்கள்.

கரையானுக்குச்  சிதல்  என்றும் சொல்வர் . 

இப்போது சிதை(தல் ) என்ற சொல்லுக்கும் சிதல்  என்பதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வோம்.

(சித்)  >  (சிது ) > சிதை .         : (சிது ) + ஐ . 
(சித் )  > (சிது )  > சிதல்          : (சிது ) +  அல் .

சிதை என்பதன் "ஐ"  வினைச்சொல் ஆக்க விகுதி.

சிதல்   என்பதன்  "அல் "  தொழிற்பெயர் (  வினை பெயராவதற்குப்) பயன்படும் விகுதி.

மனிதன் குகைகளில் வாழ்ந்து திரிந்த ஆக்க அல்லது ஆதி காலத்தில் அடிச்சொல் "சித் " என்று இருந்திருக்கும். இது ஆய்வில் மீட்டுருவாக்கம்.. 

வெள்ளி, 25 ஜூலை, 2014

கீதா சாரம்

எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது;
எது  நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது,
எது  நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்

உனக்கு என்னாயிற்று?
எதன்பொருட்டு  நீ அழுகிறாய்?
நீ   என்ன  கொண்டு வந்தாய்?---
அதை நீ இழப்பதற்கு!

நீ எதைப் படைத்தாய்?---
அது வீணாவதற்கு !

நீ எதை எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது !
நீ  எதைக் கொடுத்தாயோ
அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது!

எது  எனதாக உள்ளதோ அது நேற்று
வேறொருவனுடையதாக இருந்தது!
மறு நாள் அது வேறொருவனுடையதாகும் !
இந்த மாற்றமே உலக நியதி !

பகவத் கீதை 

வியாழன், 24 ஜூலை, 2014

திறை பெற்றுத் திரும்பிவிடு

முன்  இடுகையின் தொடர்ச்சி

http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_24.html

மெய் பனி கூரா  அணங்கு எனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம்   போல
திறைகொண்டு  பெயர்தி!  வாழ்க நின் ஊழி !
உரவரும் மடவரும்  அறிவுதெரிந்   தெண்ணி 
அறிந்தனை !  அருளாய்   ஆயின்
யார் இவண் நெடுந்தகை ?  வழுமோரே!
.................. ...................................
பொங்கு பிசிர்  நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினம்கெழு குரிசில் ! நின் உடற்றிசினோர்க்கே !  -
===================================================================
மெய் பனி கூரா  -   உடம்பில் பனி படாத;
அணங்கு  - தேவதை;        பராவலின்   கும்பிடுதலின்  போது நடப்பதுபோல   
பலி கொண்டு -  இடப்படும் பலியைப் பெற்றுக்கொண்டு; 
பெயரும்  -   திரும்பும் 
பாசம் போல - இயல்பு போல  (மனப் பிணைப்பைப் போல)   
பலி பூசை செய்வோனுக்கும் தேவதைக்கும்  இடையில்  ஒரு பாசம் ஏற்பட்டுவிடும் என்கிறார் புலவர்.
தேவதைக்குப்  பனி  படாத  உடல்,  பூசை போடுகிறவனுடன் பாசப் பிணைப்பு.... (இது மந்திரவாதிகளைக் கேட்டறிய வேண்டியது.);
திறை கொண்டு  - கப்பத்தை ஏற்றுக்கொண்டு 
பெயர்தி -  திரும்பி வந்துவிடு.
வாழ்க நின் ஊழி  - உன் ஆட்சியும் உன் பின்னோர் ஆட்சியும் வாழ்க  
உரவர் -  திறனுடையோர்'
மடவரும் -   பெண்டிரும் அல்லது திறனிலாரும்;
அறிவுதெரிந்   தெண்ணி    -  நன்கு வேறுபாடு கண்டு  சிந்தித்து 

அறிந்தனை -  இனம் புரிந்துகொண்டாய் .

அருளாய் ஆயின் -  நீ அருள் செய்யவில்லை   என்றால்;

யார் இவண் நெடுந்தகை  -   பெருந்தன்மை உடையோன்   இங்கு /யார்?;

வழுமோரே  -     நாம்  யாவரும்   வாழ்வோரே ஆவோம்

பொங்கு பிசிர்  =  மிக்க மழை 
நுடக்கிய -  பெய்து  (முடக்கிய பின் )

 செஞ்சுடர் நிகழ்வின்  -   கதிரவன்  ;வருங்கால்  

மடங்கல் தீயின் அனையை  -  யுகத் தீயினைப் போன்றவன் நீ

இரும்பொறையின் வெற்றியுடன், ஓர்  ஊழி  முடிந்து இன்னொன்று  தொடங்குகிறது என்கிறார் புலவர்.   யாவும் முடக்கிய  பெரு மழை. கதிரவன் தோன்றியகாலை பெருந்தீ முதலிய இது குறித்தது என்க   .

சினம் கெழு குரிசில் --- ‍ வீறு கொண்ட தலைவனே  நீ !

உடற்றிசினினோர்க்கே ‍--  உனக்கு இந்த சீண்டுதலைத் தந்தவர்களுக்குத்தாம்.

அரிசில் கிழார் மாந்திரீகம் கற்றவர்போலும்.

http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_24.html

Edited. Will review.