வியாழன், 19 ஜூன், 2014

தை மாதம்.



 இம்மாதத்துக்கு ஏன் இப்பெயர் வந்ததென்று இங்கு ஆய்வோம். மார்கழியும் தையும் முன்பனிக்காலம். தைத்தல் ‍ இணைப்பு என்று பொருள்படும சொல் என்பது முன் பதிந்த இடுகைகளிற் கூறப்பட்டது. முன்பனிக் காலத்தில் மார்கழி தையுடன் இணைந்து வரும் மாதமாகையால்,  இணை  வரும் மாதம் என்னும் பொருளில் தையென்றனர்.

"முன்பனியாகிய மார்கழியும் தையும் தொடர்ந்தாற்போல..." என்பது நச்சினார்கினியர் உரை.  (தொல். அகத்திணையியல் )

"பின்பனிதானும் உரித்தென மொழிப" (தொல்,40. அகத்தினையியல்.)


இனி பூக்கள் பூத்துக்குலுங்கி  மனத்தினில் ஓர் இணைப்பினை ஏற்படுத்தும் மாதம் எனினும் ஆம்.

முருகனுக்கு உகந்த மாதமாய்   பற்றாளனோடு இறைவன் ஓர் இணைப்புக் கொண்டு அருள்புரியும் மாதமெனினும் ஆம். பொங்கல் பண்டிகை குதூகலம் தரும் நாட்கள் கொண்ட மாதமெனினும் ஆம்.

இவற்றுள் ஒவ்வொன்றுக்காகவும் ஒருசேர அனைத்துக்காகவும் இணைப்பினைத் தரும் நன்மாதம்  என்றும் கூறுதலும் பொருத்தமே.

மொத்தத்தில் தை எனின்  இணைப்பு ஆகும். அதுவே சொல்லாக்கத்து அடிப்படைக் கருத்து.

தொடர்புடைய இடுகைகள்:

thairiyam

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

thairiyachAli


 thaivaruthal

பக்கணம் பட்சணம்

பட்சணம் என்பது  காண்போம்.  இலையில் சோறு, குழம்பு முதலானவற்றுக்குப் பக்கத்தில் வைக்கப்படுவது பக்கணம் >  பட்சணம்.

பகு+ அம் = பக்கம்.
பகு+ அணம் = பக்கணம்.

பின் பக்கணம் > பச்சணம் > பட்சணம் ஆயிற்று.

அணம் என்பது ஒரு விகுதி.  கட்டு+ அணம் ‍  =  கட்டணம் போல அணம் என்னும் விகுதி பெற்றது பக்கணம்.

அணம் என்னும் விகுதி அண் என்னும் அடியிற்றோன்றியது.

அண் >  அண்மு(தல்.)
அண் >  அண்மை.
அண் >  அணிமை.
அண்  >  அண்டுதல்,  அண்டை.
அண்  > அணு
அண்  >  அணுகு(தல்)
அண் > அண்டி (பழத்தை அடுத்திருப்பதாகிய முந்திரிக் கொட்டை)

எனப்பல


அண்டா:    ‍ ஆக்கியவற்றை  கொட்டிவைக்க  அடுப்புக்கு அண்டையில் வைக்கப்படும் பெரிய பாத்திரம்.  பின்  அண்டாவும் ஆக்கப் பயன்பட்டது,

விகுதிகள் ஆதியிற் பொருளுடன் நின்றவை எனினும் பின்  தம் பொருளிழந்து வெறும் சொல்லாக்கத்துக்குப்  பயன்பட்டுள்ளன, அதனால் சொற்கள் பல்கிட வழியேற்படலாயிற்று.

பச்சை  என்பது இங்கு காய்கறிகளைக்  குறிக்கும் என்றும்  "அணம்" பின்னொட்டுப் பெற்று பச்சணம் ஆகி, பின் பட்சணம் ஆயிற்று  என்பாரும் உளர்.

இப்போது  பச்சணம்  (பட்சணம்)  பலவகை உணவுகளையும் குறிப்பதாக விரிந்துள்ளது.  எ-டு :  கேரளீய பட்சணம்  .Here   they meant Kerala Cuisine or kinds of kerala food.

புதன், 18 ஜூன், 2014

பச்சடி



இந்தச் சொல் பேச்சு வழக்கில் மக்கள் புனைந்த சொல்.  சொல்லை அணுகும் போதே  இது புலவர் புனைவன்று எனத் தெரிகின்றது.

பச்சை + இடி என்ற இரு சொற்களால் ஆனது இது.  சை என்பதில் உள்ள ஐகாரம் குறுகி. (கெட்டு )   ச் என நிற்கவே, பச்(ச்+ஐ)  > பச்ச்  என்றாகி, இடி சேர்ந்து பச்(ச்+இ)டி என்று இணைந்து, பச்சிடி ஆனது. பிறகு வாயொலிக்க  வசதியாக, பச்சிடி இறுதியில் பச்சடி  ஆயிற்று. ஐகாரத்தின் இடத்தை மாத்திரை (ஒலியளவு ) குறைந்த இகரம் மேற்கொண்டது.

புலவர் நோக்கில், பச்சை + இடி = பச்சையிடி > பச்சயிடி >  பச்சடி  எனவாகி, ஐகாரம் குறுக. யகர உடம்படு மெய ஏறிய இகரம் ஒழிந்தது என்று கூறுதல் ஒரு கலையே ஆகும்.

சொல்லாக்கதில் பயன்பட்ட சொல், அடி என்பதினும் இடி என்பதே உண்மை நிலையைக் காட்டுவது, ஏனென்றால்,  இது முன்பு இடித்துச் செய்யப்பட்டவற்றையே குறித்துள்ளது.கெட்டுவிடாமல் இருப்பதற்காகப்  பின் சூடு காட்டப்பெற்று,  நாளடைவில் வேகவைத்துச் செய்யப்பெறுவ   தாயிற்று.

தமிழில் ஐகாரம் குறுகுதல் தொல்காப்பியர் முதலான நம் இலக்கணப் பெரியோர் கண்டு ஓதிய ஒன்றே ஆம்.