புதன், 14 மே, 2014

உருவம்

உருவம் என்பது ரூபம் என்று மாறி.   இறுதியில் ரூப என்றானது.

அ, இ,உ என்று முச்சுட்டுக்களில், என்பது முன் தோன்றுதலையும் குறிக்கும். பிற அர்த்தங்களும் உளவெனினும் அவை இப்போது கிடக்கட்டும்.

உருத்தல் ‍ : ‍  முன்  தோன்றுதல்.


"ஊழ்வினை உருத்து வந்தூட்டும்"
( சிலப்பதிகாரம் ).

உரு + அம் = உருவம். வகர உடம்படு மெய் பெற்றது.

வழக்கம்போல், வ > ப என்று திரிந்து, தலை "உ" தொலைந்து, ருகரம் ரூகாரம் ஆகி,  ரூப , ரூபா என்ற சொற்கள் அமைந்தன. இது மகிழ்வு தரும் விளைவுதான்.

பேச்சு வழக்கில் உருவம் என்பது ரூப என்று திரிவதில்லை. வேறு சொற்களில் தலை போவது கண்ட பண்டிதன்மார், இது புனைந்தனரென்றே சொல்லத்தகும்.

இந்தோ ஐரோப்பியத்தில் ரூப உள்ளதா என்று நீங்கள் தேடிப்பார்த்துச் சொல்லலாமே!

செவ்வாய், 13 மே, 2014

மாரீசன்

மாரீசன் மான் ரூபம் எடுக்கிறான்.  அதாவது மானுருக் கொள்கிறான். மான் மரை என்பன உங்களுக்குத் தெரியும்.

மரை + ஈசன் =  மாரீசன்.

மரைப்பெயர் கொண்டோன்.

இறைவன்  >  இ ஷ் வர்  > ஷ்வர்.  றையை எடுத்துவிட்டு, ஷ் போட்டுவிட்டால், வேறுலகத்தில் போய்விட்டதுபோன்ற‌ உணர்வு,

ஈஷ்வர் > ஈஸ்வர் >  ஈசர் > ஈசன்.

மரை+  ஈசன் =  மரையீசன் என்று வரவேண்டும் என்பார்  தமிழ்வாத்தியார்.
இந்த வாத்தியாரை வேலைக்கு வைத்தால்  புதுமொழியையும் புதுச்சொல்லையும் எப்படி அமைப்பது?

ஆக வான்மீகியாரே  சொந்தமாகப் படைத்துக்கொண்டார் வேண்டிய சொற்களை.

மகிழ்ச்சிக்குரிய செய்தி ........

கைகேசி

கைகேசி என்ற இராமாயணத்தில் வரும் பெயரைப் பார்க்கலாம்.


கேசம் என்ற சொல்லை முதலில் நோக்கினால்,  அது முடி (மயிர்) குறிப்பது என்பது புரியும்.

கை  கேசி எனின், கையின் நீட்டத்திற்கு முடி தொங்க விட்டிருப்பவள் என்று பொருள்.  வாயில் <> வாசல் என்பது  போல,  கேசி <> கேயி என்று ஒன்றுக்கொன்று மாறுபடும். இன்னொன்று  ஆகாயம் <> ஆகாசம்.  மற்றும் வாயித்தல் > வாசித்தல்.  மலையாள‌த்தில் வாயிச்சு என்றுதான் சொல்வர்.

வான்மீகி ஒரு  தமிழறிந்த புலவர் என்பதற்கு அகச்சான்றுகள் பல.  கை என்ற சொல் பயன்படுத்தியதும் ஒன்றாம்.