சனி, 1 மார்ச், 2014

விபத்து

விபத்து  என்னும் சொல்லைச் சற்று கவனிக்கலாமே!

ஆபத்து,  ஆதரவு என்னும் பதங்களை  முன்பு முன்கொணர்ந்து உரையாடியுள்ளோம்,

மலையாளத்தில் "என்ன ஆயிற்று?"  அல்லது "என்ன நடந்தது"  (என்ன ஆயிற்று உனக்கு ? ) என்பதை  "எந்து பற்றி?"  என்று  கேட்பர். இப்படித் தமிழர்  உரையாடுவதில்லை.  தமிழில் இதை முறையாகச் சொல்வதானால் -"உன்னை எதுவும் பற்றிக்கொண்டுவிட்டதா?"  என்றால் அதில் அர்த்தமுண்டு.
அதற்குப் பதிலாக, என்னை என்ன பேய் பிசாசு பற்றிக்கொண்டுவிட்டதென்றா கேட்கிறாய்? என்று திருப்பிக் கேட்கலாம். இயல்பாக நாம் இப்படிக் கேட்கமாட்டோம்.   பற்றி என்ற சொல்லினை நன்கு கவனித்தால் தமிழ் நாட்டிலும் இத்தகைய சொற்பயன்பாடு இருந்திருக்கக்கூடும்.

எங்கேயும் விழுந்து புண்பட்டுவிட்டல் அதை "விழு பற்றி "  எனலாம். விழு பற்று (தல் ),  விழுதலாகிய நிகழ்வு (என்னைப்) பற்றியது, பற்றிக்கொண்டது  என்பதாம்.

பற்று என்பது பேச்சில் பத்து எனவரும்.

விழுபற்று -  விழுபத்து  -  விபத்து.  றகர ஒலிகள் தகர ஒலிகளாய் ஆயின என்பது மட்டுமின்றி ழுகரமும் மறைந்த இடைக்குறைச்சொல்.

ஒரு காலத்தில் why grapple with such a messy word composition and corruption. Not quite neat isn't it?  Tamiz should not be so messy என்று இந்தச் சொல்லை வீசிஇருப்பார் நம் தமிழாசிரியர்.    இத்தகைய திரிபுச் சொற்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு இது நாள் வரையிலும் காத்து வைத்திருக்கும் சமஸ்கிருதத்துக்கு நாம் நன்றி சொல்வோம்.

ஓடு  ஓடுதல்  தாவு தாவுதல்  என்று வினையிலிருந்து தொழிலுக்குப் பெயர் வந்தது  என்பது கற்பிக்க எளிதல்லவா !

ஒப்பிடுக:

பற்று >  பற்றி >  பத்தி  >  bhakti.   இறைப்பற்று.




விபத்து என்ற சொல்லின்  அமைப்புப் பொருள்  விழுதல் தான் என்பதை சமஸ்கிருதமே தெளிவாக்குகிறது.  vipadpadyate: (விபத்துப்பட.....) to fall or burst asunder என்பதைக் கண்டு தெளியலாம்.

விழுதல் என்ற "கரு"விலிருந்து இத்தகைய பெருந்தொகையான சொற்கருத்துகள் உருப்பெற்றுள்ளமை  மகிழ்ந்து இன்புறத்தக்கது.

குறிப்புகள்

தமிழில்:

பற்று  (பத்து). grasp, grip, seizure; 2. acceptance; 3. adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, of two kinds, viz., aka-p-par6r6u, pur6a-p-par6r6u ; 4. connection, affinity, bond; 5. piece put on or nailed on for strength; 6. solder; 7. paste, glue; 8. particles of boiled rice adhering to the cooking pot; 9. pot containing particles of food adhering to it, as impure; 10. place under one's possession; 11. resting place; 12. portion of a country consisting of many villages; 13. receipt; things received; 14. support; 15. pillar; 16. love, devotion; 17. friendship; 18. path to salvation; 19. riches, treasure; 20. family life; 21. paddy field; 22. bundle; ass of betel leaves; 23. purpose, intention, principle; 24. plaster; poultice; medical application; 25. disease of the skin, ring-worm, psoriasis; 26. cement; 27. a kind of song; 28. village, parish

விபத்து = விபத்தி.  (விழுபற்றி >  விழுபத்தி >விபத்தி )
விபத்தி . misfortune;  poverty;  agony; danger;  death;  destruction
விபத்தி   change;  case; suffix of declension

பேச்சில் யாரும் பற்றி  என்னாது ; பத்தி என்றே சொல்வது  காண்க :  அதைப் பத்தி இதைப் பத்தி .........!

It is to be noted that the media uses the term vipaththu for accident.  pErunthu vipaththu,  rail (thodarvaNdi) vibattu, vimAna vipaththu (air accident or disaster).

சங்கதத்தில் :

vipadpAdayati   (விபத்துப்பாடு )   : to cause to perish , destroy , kill .
vipad   :  going wrongly , misfortune , adversity , calamity , failure , ruin , death
vipadpadyate: (விபத்துப்பட.....) to fall or burst asunder MBh. xi , 95 ; to come between , intervene ,
prevent , hinder ; to go wrongly , fail , miscarry , come to nought , perish die
vipadAkrAnta (விபத்தாகிறான் தா(ன்))  and vipadgata  ( விபத்திற் கிட) fallen into misfortune
vipaduddharaNa. (விபத்துத்தாரண)
vipaduddhAra  (வ்பத்துத் தாரம்) m. extrication from misfortune
vipadgrasta (வி பத்துக்குறுக்கிடு). seized by mñmisfortune , unfortunate ;
vipaddazA  (விபத்தாயது)  a state of mñmisfortune , calamitous position
vipadyukta  (விபத்துத்தம்) attended with mñmisfortune , unfortunate
vipadrahita  (விபத்திறுதல்) free from mñmisfortune , prosperous  இறுதல் -முடிதல்

பிறைக்கோட்டுக்குள் உள்ள தமிழ் ஒலிஒற்றுமை காட்டுவதற்கு .  Do you know that Sanskrit used a Dravidian sound system all the way.....!




வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

இரவிலே வந்தான்.....

மாலை வந்து மயக்கி இரவு வந்து இனிப்பை வழங்குகிறது என்று நம் தமிழ்க் கவிஞர் பாடுவர். இன்றைய உலகில் இரவு வந்ததும் வேலைக்குப் போகும் பெண்மணிகளும் ஆண்மக்களும் உள்ளபடியால் இவ்வமைப்புக்குள் இவர்கள் எங்ஙனம் உள்ளடங்குவர் என்று கேட்கக்கூடாது. அது கவிச்சுவை காணும் போக்கு அன்று. 

இரவிலே வந்தான் 
இன்ப சுகம் தந்து 
மருவியே சென்றான் - அந்த  
மாயக் கள்ளன் யார்?

என்று பெண் கேட்பது போலும் ஒரு பாடல் உண்டு.   எப்படிப் பாடினாலும் தமிழ் இனிமையே தரும்.  யார் என்றது  நீர் அறியீர் என் நெஞ்சுக்குள் உறைபவரை என்று அறிவித்தற்பொருட்டு.  சொன்னால் புரிந்துவிடுமோ உமக்கு? என்றபடி.   சென்றான் = காலையில்  சென்றான் என்று கொண்டுகூட்டுதலில் தப்பில்லை.


காலை வந்துற்றதும் தலைவன் பிரியும் நேரம் அதுவேன்பது இலக்கிய வழக்கு.    இதைக் கூறும் அள்ளூர் நன்முல்லையாரின் இன்னொரு சங்கப் பாடலை இப்போது பாடி மகிழ்ந்திடுவோம்.  "அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் "  என்ற அவர்தம்  பாடலைச்  சின்னாட்களுக்குமுன் படித்து இன்புற்றோம் .  

குக்கூ  என்றது கோழி  அதனெதிர் 
துட்கு என்றன்று என் தூய நெஞ்சம் 
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் 
வாள்போல் வைகல் வந்தன்றால் எனவே.  குறுந்  157.

கோழி கூவினதும் தலைவிக்கு அச்சம் தோன்றிவிட்டது.  "காலையே  அதற்குள் ஏன் வந்தாய் ? என் செய்வேன்"  என்று அஞ்சுவாளானாள்.
தோள் சேர்தல், தோள் தோய்தல் என்பவை  எல்லாம்  இப்போது  திரையில் நாம் அடிக்கடி கேட்பவை.   இலக்கியத்தில் இது இடக்கரடக்கல்  என்னும் ஒரு முறையாகும்.

காதலியின்  நெஞ்சமோ தூய்மையானது. தவறுதலாக ஏதும் நடந்துவிடவில்லை என்பது குறிப்பு. தோள்தோய் என்பது இனிமேல் மணமுடித்துத் தோள்சேர விருக்கும் (தலைவன்) என்று பொருள்தரும், முக்காலமும் உணர்த்தும் வினைத்தொகை இதுவென்றாலும்,  "தூய" என்றதனால் எதிர்காலத்தையே காட்டுவது.

துட்கு  : அச்சம். இந்தக் காலையோ ஒரு வாளானதே!  தமிழ் மொழியிறைவனாராகிய வள்ளுவனாரும் குறள் 334ல்  வாளென்றே கூறினார்.. வைகல் = காலைப்பொழுது.   வந்தன்று = வந்தது, அல்லது ;   வந்துவிட்டது எனற்பொருட்டு.  ஆல்  என்பது அசை.  வந்து+அன்+து  = வந்தன்று; நாம் பேசும்  "வந்தது" என்பதில் "அன்" இல்லை.  அவ்வளவில் நிறு த் தி அதை எளிதாக உணரலாம். பகுதி விகுதி சந்தி இடை நிலை சாரியை  என்று  மூழ்கினால் படிப்போருக்குக் கடினமாகிவிடும்.   என்றன்று  = என்றது.  

எளிய இனிய பாடல் தந்த புலவர் நன்முல்லையாரைப் போற்றுவோம்.  


குறிப்பு:

துள்+கு = துட்கு   (அச்சம்)
துள் + (அ) +கு =  துளக்கு.  (துயர் ).

வியாழன், 27 பிப்ரவரி, 2014

அட்டகாசம்

அடுதல் = சுடுதல், சூடேற்றுதல்.   "அட்ட" எனின் சுட்ட, சூடேற்றிய என்று பொருள்.  எச்சவினை.  அட்ட பால் என்றால் காய்ச்சிய பால்.  இந்த அடுதல் எனும் சொல்லைப் பற்றி முன்னரே இங்கு கூறியுள்ளேன்.
காய் >  காய்ச்சு > காய்ச்சுதல்.

காய் > காயம் > காசம்.  (வாய் > வாயில் > வாசல்; பயல் > பசங்க ; வயந்தம் > வசந்தம் ;  இயைவு > இசைவு ; அயல் > அசல் (அயல் நாட்டுப் பொருள் அசலானது , தம்  நாட்டுப் பொருள் தரம் தாழ்ந்தவை என்று தமிழர் நம்பினர்).  நேயம்- நேசம்.

கயத்தல் >  கசத்தல்   (கசப்பு )  ய>ச
கயங்குதல் >  கசங்குதல்             "
ஆகாயம் >  ஆகாசம்

இஃது பிற மொழிகளிலும் உண்டு. This rule of interchangeability of ya -sa is not language-specific.  The position of ja is similar.   e.g., Jesus <> Yesu.   Hadyaai <> Hapjaai.   Jacob <>Yacob .   Examples are plentiful.

Once a point has been successfully established, we should not belabor the point.


அதுபோல் காயமென்பதும்  சுட்டபொருளைக் குறிக்கும்.  ,காய்ந்தது , காய்தற்குரியது, எனப் பொருளுக்கேற்ப அர்த்தம்  .வரும் .

அட்டகாசம் என்றால் சுட்டதையே போட்டுக் காய்ச்சுவது ...... அட்டதையே  இட்டுக் காய்ச்சுதல்.

The meaning today is figurative.    புலிகள் அட்டகாசம் !   -  செய்தி.