ஞாயிறு, 16 அக்டோபர், 2022

யாப்பியல்: மூன்றசைகளா நான்கா?

 யாப்பியலில்:

கவிதையை எழுதும்போது   அசை, சீர், தளை, தொடை என்பவெல்லாம் பார்த்து எழுதுவது தமிழ்ப்பாவலர்களின் செயல்பாடு ஆகும்.  புதுக்கவிதைகளில் இவை எல்லாம் இல்லை ஆகையால், இத்தகைய கவிதைகளை எழுதுவோர்க்குத் தொல்லைகள் குறைவு.

" எந்த இடத்திலும் தேடுவானே தேடியது

கிட்டும் வரைக்கும்"

என்ற கவிதை வரியில், 

தேடுவானே என்பது  தேடு- வானே என்று சற்றுப் பிரிந்தொலிக்கிறது.  இதைத் தற்கால முறையில்,  தே- டுவா- னே  என்று (நாலசைகளாக இல்லாமல்) மூன்றே அசைகளாகப் பிரித்து அலகிடலாம். அது நன்றாக இல்லை; காரணம்,  டு-வா என்று ஈரசைகளாகக் கொள்வதே ஒலியமைப்புக்கு ஏற்றதாகும்.  இது இயல்பாகும்.  இந்த வரிகளின் ஓட்டத்துக்கு அஃதே பொருத்தமாகிறது.

தேடு-வானே  (  தே-டு வா-னே ) என்று நாலசைகளாயின, வெண்பாவுக்கு ஒக்குமோ வெனின்,  வெண்பாவில் நாசைச்சீர்களும் வரும் என்று பண்டித  வேங்கடசாமி நாட்டார் முதலிய யாப்பியலறிஞர்கள் கூறுகின்றனர்.  அஃது உண்மையுமாகும். 

ஆகவே தேடு-வானே என்று பிரிந்தொலிக்கும் நாலசைச் சீர் என்று முடித்து வெண்பாவில் நாலசைச் சீரும் வரும் என்று கொள்வது சரியென்று முடிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: