அதிகாலை எழுந்து,
பகலெல்லாம் உழைத்து,
மாலையில் ஓய்கின்றான்,
ஆண்டுகள் பலப்பல,
அதைச் செய்தான் பிறிதில்லை
அயர்வேதும் உறுதலின்றி !

உழைப்பாளி ஓய்ந்த நாள்
ஒப்பிலாத் துன்பம் ஏய்ந்தநாள்
உழைத்துக்கொண்டே இருந்தால்,
உலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே
ஒப்புயர்வு இலாது உலவுவர்,
அந்த உழைப்புக்குச் சொந்தக்காரன்
எந்த நாளும் இனிது வாழ்க!