வியாழன், 27 ஜனவரி, 2011

சொல்ல நினைத்ததோ

சொல்ல நினைத்ததோ ஒன்றாம் எழுதுங்கால்
வல்ல பிறிதொன்று தோன்றியதே--வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்.

Describing a friend's situation.
Presented as though he speaks.


The friend said: வல்ல என்ற சொல் positive அல்லவா. நினைத்ததை விட வல்லதாக ஒன்று தோன்றினால் தத்தளிக்க வேண்டாமே.


Reply: நீங்கள் சொல்வது சரிதான்.....ஆனால், முயலுக்காக அம்பெய்-
த வேடன்முன், செடிமறைவிலிருந்து புலியொன்று தோன்றி-
னால், சமாளிக்க இயலாத அளவுக்குப் பேரிடர் ஆகித்
தத்தளிக்க மாட்டானோ? ஆகவே வேடனின் திறன் இங்கு
கேள்விக்குறி ஆகிவிடுகின்றதன்றோ....
வல்லனவெல்லாம் நல்லனவென்று .... எப்படி......?

கருத்துகள் இல்லை: