புதன், 2 செப்டம்பர், 2009

In the life of poet Longfellow

மனையாளும் பற்றிஎரிந் திட்டபோது
தனையோடித் தந்திட்டான் தீயணைக்க;

நினைவற்று வீழ்ந்திட்டாள் அவள், அவற்கோ
நெஞ்சு முகம் பிறஎங்கும் தீக்காயங்கள்;

உணர்வுற்ற பெருங்கவிஞன் "நெடுமான்" வாழ்வில்
உள்கவிந்த சோகத்தை என்னசொல்வேன்;

கணமேனும் கண்ணீரை நிறுத்திக் கொள்ள
கருதிடினும் கூடுவதோ உருகும் நெஞ்சர்?

"நெடுமான்" - Longfellow, American poet.

கருத்துகள் இல்லை: