சனி, 7 பிப்ரவரி, 2009

போர்வேண்டாம்!

போர்வேண்டாம் போரினையே நிறுத்தி விட்டு
புத்துரிமை தருந்தீர்வு காணல் நன்று;

மார்தன்னைத் தட்டுவதில் மாட்சி இல்லை
மக்களுக்கே துன்பமத னாலே கண்டீர்;

யார்வந்து தடுத்தாலும் யாம்போர் செய்வோம்
யார்மீதும் குண்டுமழை என்ப தெல்லாம்

சீர்கெட்ட சிந்தனையால் விளைந்த கூச்சல்
செம்மையான அரசியலே இல்லாப் பேச்சு.

கருத்துகள் இல்லை: