- வரி என்னும் சொல் தொன்றுதொட்டுத் தமிழில் வழக்குச் சொல்லாக உள்ளது. வழக்குச்சொல் என்பது புழக்கத்தில் உள்ள சொல்.
- வரவு, வருமானம் என்ற சொற்களும் உள்ளன. இவை பொதுப்பொருளில் வழங்குவன. வரி என்பது வரு+ இ > வரி என்றாகும். வரு என்பதில் இறுதியில் உள்ள உ கெட்டு ( கெட்டு என்றால் நீங்கி) வர் என்றாகும், பின் இகர விகுதி பெற்று வரியாகும், இவ்வாறு உகரம் கெட்ட சொல் இன்னொன்று அறம் என்பது. அறு + அம் > அறம். அறு என்பதிலுள்ள உகரமும் கெட்டு. அற் என்று நிற்க உகரம் சென்று ற் உடன் இணைந்து ற்+ அம் > றம் என்று வந்து அறம் என்ற சொல் ஏற்பட்டது. இவை இவை செய்யவேண்டியவை, இவை இவை விலக்க வேண்டியவை என்று அறுத்துச் சொன்னதால் அறம் ஆயிற்று என்று உணரவேண்டும். வரவு என்ற சொல்லில் வரு என்பதில் உள்ள உகரம் இவ்வாறே கெட்டது. வர் என்ற மிச்சத்தோடு அகரம் இடைநிலையாகி நின்று இறுதியில் வு விகுதி பெற்று வரு+ அ + வு > வரவு ஆயிற்று
- யானைக்கு வாரணம் என்ற பெயருண்டு. இது வரு + அணம் > வாரணம். இது முதனிலை நீண்டு அண் அம் என்று இடைநிலை கலந்த விகுதி பெற்று இச்சொல் அமைந்தது. இதன் அணம் விகுதி என்று சொல்வதுண்டு. கட்டவேண்டிய காசு கட்டணம் எனப்பட்டது போல. ஊர்வலத்தில் வரும் யானையை வாரணம் என்று குறித்தனர். பின்னர் இது விரிந்தது. அவ்வாறு வராமல் நிலையாக ஓரிடத்தில் கட்டிக்கிடக்கும் யானையும் குறிக்கப் பொருள் விரிவதில் வெற்றுவிரிவுதான் காணப்படும். வாரணம் பிற பன்றி முதலியனவும் குறிக்க விரிந்தது. இது பயன்பாட்டு விரிவு என்க.
- இதன்மூலம் வரி என்பதில் இகரம் கெட்டு விகுதி பெறுதல் பிறசொற்கள் ஒப்பீட்டுடன் விளக்கப்பெற்றது.
- அறிக மகிழ்க
- மெய்ப்பு பின்
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 30 ஜனவரி, 2025
வரி என்னும் சொல்.
தோத்திரம் என்னும் வணக்கச்சொல்.
தோத்திரம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்,
பத்தியில் தோய்ந்தபடி சொல்லும் வணக்கமே தோத்திரம் ஆகும்
தோய்> தோய்த்திரம் > ( ய் மெய்யெழுத்துக் குன்றி ) > தோத்திரம்.
இதுபோல் யகர ஒற்றுக் குறைந்த இன்னொரு சொல் வாய்த்தியார் > வாத்தியார் என்பது,
இன்னொரு சொல். உய் > உய்த்தல் > உய்த்தி > உத்தி என்ற சொல்லையும் எடுத்துக்க்காட்டலாம்.
இன்னும் பல உதாகரணங்கள் பழைய இடுகைகளில் காணலாம்.
தொழுதல் வினையில், தொழுத்திறம் என்பது தோய்த்திரம் > தோத்திரம் ஆனதாகவும் கூறலாம்.
இச்சொல் பல்பிறப்பி ஆகும். இதுவும் தமிழ்ச்சொல்லே.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
செவ்வாய், 28 ஜனவரி, 2025
தாராளம் சொற்பொருளோடு பிறப்பு
தாராளம் என்னும் சொல்லின் பிறப்பும் பொருளும் காண்போம் ,
இந்தச் சொல்லின் மூன்று பகவுகள் உள்ளன. தார், அடுத்து ஆள் அம் என்ற விகுதி, ஆள் என்பதை இடைநிலையாகக் கொள்ளினும் இழுக்காது,
.ஆளம் என்ற புணர்ப்பினை ஒரு விகுதியாகவும் கொள்ளலாம், ஏராளம், மலையாளம், கொலையாளி எனப் பல சொற்கள் உளவால், இதையும் சரி என்றே கொள்ளலாம். பொருளறிவதற்கு எது மிக்க வசதிதருவதாய் உள்ளது எனற்பாலதைப் பொறுத்தே இதை அமைவு செய்யவேண்டும். ஆளம்> ஆளி ( மனிதரைக் குறிப்பது)
மணவாளம் என்ற சொல் அமையவில்லை. தன்மை குறிக்கும் இதற்குத் தேவை ஏற்படாமையினால் இல்லை என்று அறிகிறோம், மணவாட்டி என்ற சொல்வடிவம் உள்ளது,
ஆளம் என்ற சொல்லில் ஒரு குழப்பமும் இல்லை. ஆனால் தார் என்ற சொல்லுக்கும் தாறு என்ற சொல்லுக்கும் தொடர்பு உண்டு என்று அறிஞர்கள் எண்ணினர். இதைப்போல மாறும் அல்லது திரிபுறும் இன்னொரு சொல் மார் என்பதே. . மாறு என்னும் பதத்திற்கும் மார் - மர்( அடி ) - மரு - மருவு என்னும் சொல்வடிவங்களுக்கும் பிறப்பியல் தொடர்பு உள்ளது. இத்தன்மையை முன்னிருந்த ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.
மேற்கூறிய கருத்து யாதெனில் யாம் இங்கு புதியது ஒன்றும் கூறவில்லை என்பதுதான். படிகொள்வோர் செயல் மறுத்தற்கு இங்கு நூல்கள் எவற்றையும் குறிக்கவில்லை.
தார் என்பது ஓர் ஆயுதம். மாட்டுக்குத் தார்போடுதல், தாறுப் போடுதல் என்று இருவழியிலும் இது வரும். முடிவில் இரும்பு முள் உள்ள ஆயுதம் போர்க்கருவி யாகவும் பயன்பட்டது, ஆதலின் தார் ஆள் என்பது இத்தகைய கருவி உடையோனைக் குறித்தது என்பது ஒருபொருள். படைமறவர்கள் எங்கும் அதிகமாகவே கொடுப்பதும் எடுப்பதும் உடையவர்கள். ஆதலில் எல்லை வைத்துக்கொள்ளாத தன்மையைத் தாராளம் என்பது குறித்தது.
இச்சொல்லை ( தாராளம்) தரும்தன்மை உடைய ஆள் என்றும் கொள்ளுதல் இன்னொன்று ஆகும். தருதல் குறிக்கும் தரு என்ற அடியும் தார் என்று திரியும். தருவான் என்பது தாருமே என்று முன்னிலை வடிவம் கொள்ளும். ஆதலால், தார்+ ஆளம் என்பது கொடைசெய்வோனைப் போல என்றும் பொருள்தருதல் காண்க.
தார் > தா என்பது இலத்தீனில் do என்று திரியும். donation என்ற ஆங்கிலச்சொல்லில் இந்த டோ இருக்கிறது.
தா என்பது தமிழ்ச்சொல். தமிழ் முச்சங்க மரபு உடைய மொழி.
இதன்மூலம் தாராளம் என்ற சொல்லின் பொருளை உணர்ந்தீர்.
தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்து நூல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்..
.