சனி, 31 ஆகஸ்ட், 2024

செனித்தல், ஜனித்தல், ஜனனம் முதலான

 இந்தச் சொற்களைச் சிந்திப்போம்.

ஜனம் என்ற சொல்,  சமஸ்கிருதம் என்று அறியப்படுவது.  இதன் அம் விகுதி கெட்டு. இகரம் ஏறி வினைச்சொல்லாகும்.  இந்த விகுதி முதலியவை தமிழில் பயன்படுபவைதாம், இங்கு இகரமாக வருவது பிறமொழிகளிலும் வினையாக்கத்துக்கு வருகிறது. மலாய் மொழியில்  இ வினையாக்க விகுதி வந்து ஒட்டி,  செயப்பாட்டு வினையாகிறது.  ( di-perchaya-i) எனக் காண்க.  ஆங்கிலத்தில் இ- யுடன்  ise. ize வினையாக்கம் பெறும். ( conceptualize). தெரிந்ததுகொண்டு தெரியாததை விளக்குதலே போதிப்பு முறை.  வேறுசில இங்குத் தேவையில்லை.

செல்+ நிற்றல்>  செனித்தல்  என்று ஆகும். பிறத்தல் விந்து சென்று கருவறையில் நிற்பதால் மனிதன் உருவெடுத்துப் பிறக்கிறான். செனிற்றல்> செனித்தல் என்றும் ஆகும் ஆதலின், செனித்தல் என்பது ஒரு பல்பிறப்பிச் சொல். செல்நிற்றல்> செல்நித்தல்> செனித்தல் > சனித்தல்> ஜனித்தல்.

ஆனால் பிறத்தல் என்ற வினைச்சொல், தாயினின்று பிறிதாகுவதையே (பிறத்தல் என்று) குறிக்கிறது எனற்பாலதைக் கருத்தியலாகக் கொள்கிறோம்..  எனவே தாயினின்று நீங்குதலில் ஆவதுதான் பிறப்பு என்று கொண்டு,  ஜனித்தல் ஆயினும் பிறத்தலாயினும் இக்கருத்திலேதான் தோன்றிய சொற்கள் என்று முடிபு கொள்ளுதல் சரி. இது மரபாதிச் சிந்தனை.

தனித்தல் என்ற சொல், தனியாகுதல். இது பிறத்தலையும் பொதுவாகக் குறிக்கும். ஆனால் வழக்கில் இது இப்பொருளில் கையாளப்பெறுவதில்லை. இது வழக்கிலில்லை என்றாலும், இச்சொல் இன்னொரு பேச்சுமுறைக்குப் பயனாம் நேரம் வந்துற்ற காலை இது சொற்பிறப்புக்கு ஏற்கப்படுவதில் தடை ஏதும் விளைவதில்லை.  தனி என்பது சனி என்றும் திரிதற் குரிய தாகையினால் தனித்தல்- சனித்தல் என்பது மறுத்த லேறாத உண்மை.  இச்சொல் வந்து ஜ என்ற அயல்மெருகு ஏறி ஜனித்தல் என்றானது என்பதே சரி. தகரம் சகரமான திரிபுகள் பல முன் தரப்பட்டுள்ளன.

தகரச் சகரத் திரிபு:   கரணவாதனை என்ற சொல் கரணவாசனை என்றும் வரும்.

பூசைப் பாடகர்களிடையே  (பாணர்கள்)  தோன்றிய சமஸ்கிருதம் தமிழ்ப் பிறத்தல் என்ற சொல்லின் செயலொற்றுமைக் காரணியாக,  ஜனித்தல் என்ற சனித்தலான தனித்தலையே பிறத்தலுக்குப் பயன்படுத்திக்கொண்டதென்பது வெள்ளிடைமலையாகும். சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழியன்று. சமஸ்கிருதத்திலிருந்து அவர்கள் கடன்பெற்றனர். இது இந்திய மொழி.

இதன் மூலம் ஜனித்தலின் மூலம் அறியப்பட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்/


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சமஸ்கிருதம் என்பதன் பொருள்.

 இன்று சமஸ்கிருதம் என்பதன் சொற்பொருளை அறிவோம்.

இதனை மோனியர் வில்லியம்சு என்னும் வெள்ளையர் தெரிந்துகொண்டபடி செல்லாமல். சொல்லின் பகவுகளை நன்கு கவனித்தறிந்து  காண்போமாக.

இச்சொல்லில் இருப்பது: சமம், கதம் என்ற இருபகவுகள்.

சமம் என்ற சொல், இது வேறொரு மொழிக்கு அல்லது பேச்சுமுறைக்கு ஒப்பான என்று பொருள்படும். இதனை இரண்டு விதமாக ஏற்புடைத்தாகக் கருத இடமுண்டு. தனக்கு அதாவது   " இந்த மொழிக்கு முன்னிருந்த நிலைகளுக்கு ஏற்புடைத்தான" என்று பொருள்கூறலாம்.  அவ்வாறாயின் முன்னிருந்த நிலைகள் யாவை என்ற கேள்வி எழும். அதற்குப் பதிலறிதலும் தேவையாகும். முன்னிருந்த நிலைகள் இம்மொழியின் தந்நிலைகள் அல்லது இதற்கு முன் இலங்கிய மொழிகள் என்னும் முடிபே இங்கு வெளிப்படுவதாம்.

இந்த மொழிக்கு முன் இருந்த நிலைக்குச் சந்தாசா என்று பெயர்.  சந்தாசா என்றால் சந்த அசைவுகள் அல்லது ஒலி அசைவுகள் என்று பொருள். சந்தாசா என்பது ஒரு மொழிப்பெயராகவே இருந்தது. சமஸ்கிருதம் என்பது பழங்காலச் சந்தாசா மொழியின் பண்பட்ட அல்லது வளர்ச்சியடைந்த நிலை. சந்தாசா என்பது இம்மொழி சந்தப் பாடல்களாகப் பாடப்பட்ட முன்னைய நிலை. பூசை மொழியாதலால் பூசை அல்லது அருச்சனைகளின் போது சந்தத்துடன் இம்மொழி பாடப்பட்டது. தாம் தம் தன தம் என்பன போல ஒலி போதருதலே சந்தம் ஆகும்.  தம் என்பது திரிந்து சம் ஆகும்.  அடுத்த அசையாகிய சம் என்பது திரியாமல் நின்றது. சம்+ தம் > சந்தம் என்ற சொல்லாய் அமைந்தது. இப்பெயர் இசைவடிவினையே கொணர்ந்து முன் நிறுத்துகிறது.

இந்தச் சந்தங்கள் ஐரோப்பாவில் ஏற்படவில்லை. அவர்களுக்குப் பூசைமொழியும் இல்லை.  

இம்மொழிக்கு வேண்டிய சந்தங்கள் தென் மாநிலங்களிலே படைக்கப்பட்டன.

சுனில்குமார் சாட்டர்ஜி என்ற மொழியறிஞர் சமஸ்கிருதம் என்பது தென்மாநிலங்களின் ஒலிமுறையைப் பின்பற்றி அமைந்த மொழி என்றார். சமஸ்கிருதம் பூசைகளின் போது பலுக்கப் படும் ஒலித் தொகுதியைச் செவிமடுத்து,   பிறமொழியினர், தமிழ் அல்லது தென்மாநில மொழிகள் போலவே ஒலிக்கின்றது என்று கூறியுள்ளனர்.

சமஸ்கிருதம் ஒரு தென்மொழி. அது வடக்கில் வழங்கும்போது புதிய சொற்களைப் பெற்றிருந்தாலும், அது தென்னொலியே இயைந்து வளர்ந்தது என்று அறிக. தென்மொழியின் ஒலிப்பட்டது என்றாலும் யாவருக்கும் உரியதே இதுவும் மற்றெந்த மொழியும். எந்த மொழியையும் யாரும் பேசலாம்.  எம்மொழியும் நம்மொழியே.  எல்லா மொழிகளும் மனித குலத்துக்குச் சொந்தமானவை.

தமிழின் இலக்கணத்துக்கும் ஒலியமைப்புக்கும் ஒட்டி அமைந்ததால், சம் அல்லது சம என்பது தமிழுக்குச் சமமானது என்று பொருள்படும். மற்ற தென்மொழிகட்கும் சமமானதே ஆகும். 

அடுத்து வரும் சொற்பகவு: கிருதம் என்பது.  கதம் என்ற சொல்லே கிருதம் என்று மாற்றொலி பெறுகிறது.  இது படி> பிரதி என்பதுபோலும் ஒப்பொலி ஆகும் . இன்னொரு சொல்: மகம். மக என்றால் பிறந்தது என்று பொருள். இது மகம்> ம்ருகம்> மிருகம் என்று மாற்றொலி பெறும். இன்னொன்று: கமம்> க்ரமம் என்பது. கிராமம் என்ற சொல்லும் கமம் என்பதன் திரிபுதான்.  பண்டை நாட்களில் குடியிருப்புகளும் மக்களின் நிலங்கட்கருகிலே அமைந்ததால், இச்சொல் சிற்றூர் என்று பொருட்பேறு எய்திற்று.

சமஸ்கிருதம் என்றால் தென்மொழிகட்குச் சம்மான ஒலியுடைய மொழி என்று பொருள். அது தன் முந்திய நிலையினின்று வளர்ச்சி அடைந்துவிட்ட படியால்தான் புதிய பெயர் பெற்றது என்பதால் அது தன் முந்திய  மொழி நிலையை இப்பெயர் மூலம் தெரிவித்தது என்பது பொருந்தவில்லை.  இவ்வளர்ச்சி இலக்கியங்களின் வளர்ச்சி என்பது தெளிவு,

சமஸ்கிருதம் என்பது நன்றாக இயன்ற மொழிதான். ஆனால் அதன் பெயர் இதனால் (மொழியின் தந்நிலைக் கட்டமைப்பு ம்)  உண்டானதன்று.  அவர்களின் பெயர்விளக்கம் சற்று வழுவினது ஆகும்.  பிராகிருதங்களிலிருந்து அல்லது பிறவழிகளில்  என்ன கட்டமைப்பினைப் புதுமையாய்ப் பெற்றதென்பதற்கு விளக்கம் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வியாழன், 29 ஆகஸ்ட், 2024

துர்க்கையம்மன் மலர் அழகுறுத்தம்


மலரா  லுன்னை  அழகுறுத்தின் ---- மகிழ்

மனமெங்கும்  இசைவானதே.

சில நொடி உன்றன்  தெரிசனமே---- எனில்

 சீர்உரு  அசலானதே.


அசல் -  அருகில் வருதல்.  இது   அயல் என்ற சொல்லின் திரிபு.

Fabricius,  a lexicographer,  also records this meaning.  See his dictionary page 6.

அழகுறுத்தின் - அலங்காரம் செய்தால்.

நிமையம் -  நிமிடம்.  இந்தச் சொல் தேவனேயப்பாவாணரால் அமைக்கப்பட்டது.  இதற்குப் பதிலாக நொடிகள் என்ற  சொல் இடப்பட்டது.

தெரிசனமே - அம்மன் சிலை  பற்றன் கண்ணுறுதல்.  இசைதல் -இயைதல்.

மனம் மகிழ்வில் இயைந்தது.

சில நிமிடங்களே தெரிசனம் செய்தாலும் அம்மை வந்து காவல் தருவார்கள். அயல் என்ற சொல் அசல் என்று ஆகி இப்பொருளை உணர்த்துகிறது.  அதாவது எழுந்தருளிவிடுவார்கள்.  பற்றன் உண்மையானவனாயின்.

நன்றி  கருஜி  அவர்கள்.

மெய்ப்பு பின்னர்