தமிழர் நாகரிகத்தில் இல்லமும் அதனுடன் தொடர்புபட்ட பொருள்களும் முதன்மை வாய்ந்தன ஆகும். புறத்தனவாய் வாழ்வில் இணைவனவினும் அகத்தனவாய் மிளிர்வனவே மிக்க விரிவுடையன ஆகும். சங்கத் தொகை நூல்களில் அகவொழுக்கமே மிக்க விரிவாக விளக்கப்படுகிறது. காதலித்து மணம் புரிந்துகொண்டு வீட்டுடன் வாழும் வாழ்வே தமிழன் விரும்பிய முழுமையான வாழ்வு ஆகும். புறவாழ்வின் வெற்றியும் விரிவேகமும் அகவாழ்வினை அமைத்துக்கொள்ள உதவினவே ஆகும்.
இலாயக்கு என்ற பேச்சுவழக்குச் சொல். அகவாழ்வில் அவன் அடைந்த அமைதியினை நன்கு உணர்ந்துகொள்ள உதவிடும் வழக்குச் சொற்களில் சிறந்த ஒன்றாகும். இலாயக்கு என்பதைப் பிரித்துப் பார்த்தால். அகவாழ்வுக்கு உடையவை என்ற கருத்து மேலெழுந்து நிற்பதனை அறியமுடிகிறது.
இலாயக்கு என்ற சொல் இன்று தலையிழந்து, லாயக்கு என்றே வழங்குகிறது. இந்தச் சொல் மூன்று பகவுகளை உடையதாய் உள்ளது. இந்தப் பகவுகளை ஒவ்வொன்றாக அறிந்து இன்புறுவோம். இல், ஆய், அ, அக்கு என்பன இவை. இல்லத்துக்கு ஆன உரிமையை அடையாதவை, ஒன்றுக்கும் தகுதி இல்லாதவை ஆகும். ஆகவே உரிமை உடையவை என்பதைக் குறிக்க '' இலாயக்கு'' என்ற சொல் வழங்குகிறது.
இக்காலத்தில் உதவாதவற்றைக் குறிக்கவரும்போதுதான் தகுதி என்ற பொருளில் லாயக்கு என்பது வழங்குகிறது. '' இ--லாயக்கு இல்லை'' என்று இச்சொல் வந்துவிடுகிறது.
அக்கு என்பது சொல்லின் இறுதிப் பகவு ஆகும். அக்கு என்றால் உரிமை. இந்தச் சொல் நெடுங்காலமாக ஓர் இணைத் தொடரில் பொதிந்துள்ளதைக் காணலாம். இச்சொல்லுக்கு உரிமை என்ற பொருள் எவ்வாறு வந்துற்றதென்பதை கண்டுகொள்வோம். அக்கு என்ற சொல்லில் இரண்டு மிக்கப் பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. எவை எனில் ''அ'' (அவை) என்னும் சுட்டுச்சொல்லும் கு என்ற சேர்வு குறிக்கும் சொல்லுமாகும். சென்னைக்குச் சென்றான் என்ற வாக்கியத்தில் வரும் கு என்னும் சொல் சேர்தலைக் குறிக்கும் சொல். அக்கு என்பதில் இவை இரண்டும் அதற்குச் சேர்ந்தது என்ற பொருள்தரவே, ''உரிமை'' என்ற பொருள் போதருகிறது. அக்கு வேறு ஆணிவேறாகக் கழன்றது என்ற வாக்கியத்தில், உரியன வேறு, அல்லாதன வேறாகக் கழன்றுவிட்டது என்ற் பொருள் கிட்டுகிறது. புல்லுக் கட்டில், உரியவை புல்லும் தழையும். கயிறு மாட்டுக்கு உணவாகாத வெளிப்பொருள் ஆகும்.
இல் - இல்லிற்கு என்று பொருள்தரும். ஆய் - ஆக என்று பொருள். அ - சேர்ந்தன என்று பொருள்.
இலாயக்கு என்றால் இல்லாத்திற்கான உரிமை என்று பொருள்.
இச்சொல் முன்னாளில் வீட்டுக்குத் தேவை என்பது குறித்து, பின் இல்லாதவை என்ற சொல்லால் அவ்வுரிமை இல்லாதவை என்று பொருள் தந்தது.
இது அரபிச்சொல் என்று கொள்ளப்பட்டிருப்பினும் தமிழில் இருந்த இந்த வழக்குச்சொல், பின்னர் அரபியர்களால் பெரிதும் கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. . சில தமிழ்ச்சொற்கள் வெளிநாட்டினரால் விரும்பி வழங்கப்படுகின்றது.. கடித்துக்கொள்வதற்கான உணவு என்ற பொருள்தரும் ''கறி''. இன்று உலகப்புகழ் பெற்ற சொல்லாகி விட்டது
இலாயக்கு என்பது தமிழாகவும் ''லாயக்'' என்பது தொடர்பற்ற சொல்லாகவும் ஓர் உடனிகழ்வு காரணமாக (coincidence) ஒலியொற்றுமை உடையனவாக இருக்கின்றன என்பதாகவுக் கூறலாம். ''லாயக்'' என்பதன் அடிச்சொற்கள் அரபியில் ஆய்வுக்குரியது ஆகும். இலாயக்கு என்பது தமிழ் என்பதில் ஐயமில்லை.
அரபியில் லாயக் என்றால் பொருத்தமானது. தமிழில் இலாயக்கு என்றால் இல்லத்துக்கு உரிமையானது அல்லது வேண்டப்படுவது என்பது. பொருள்வேற்றுமை சிறிது உள்ளது. அடிச்சொற்கள் அரபியில் வேறு. (عدم اللّياقة)
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
.பகிர்வுரிமை
அக்கு - உரிமை.
இல் - இல்லலம் உரி
ஆய் ஆய் - உரிமை