புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டே வருக வருக.

புரண்டுவரும் செல்வங்கள் பொன்னும் மணியும்

இரண்டா  யிரத்திருபத் தாறில் ----- திரண்டுவரும்

இம்மா நிலம்படைத்த    இன்தெய்வம் ஆசிதர

நன்மா நிலம்செழிக்கும்  நாள்.


இது புத்தாண்டை வரவேற்கும்  நேரிசை வெண்பா .

பொன்னும் மணியும் புரண்டுவரும் செல்வங்களும்  இந்த 26-ம்  ஆண்டில்

செறிந்து வரும் என்று இப்பாடல் வாழ்த்துகிறது.  இதற்கான  ஆசிகளை  

கடவுள் கொடுப்பார். குற்றம் முதலிய மிக்கில்லாத நாடுகள் தமக்கு இந்த 

புத்தாண்டு நாள் வளம் தருவதாகும். புத்தாண்டு நாளையும் சிறப்பித்தவாறு. 


சிவமாலா.

திங்கள், 29 டிசம்பர், 2025

இலாயக்கு

தமிழர் நாகரிகத்தில் இல்லமும் அதனுடன் தொடர்புபட்ட பொருள்களும்  முதன்மை வாய்ந்தன ஆகும்.  புறத்தனவாய் வாழ்வில் இணைவனவினும்  அகத்தனவாய் மிளிர்வனவே மிக்க விரிவுடையன  ஆகும். சங்கத் தொகை நூல்களில்  அகவொழுக்கமே மிக்க விரிவாக விளக்கப்படுகிறது. காதலித்து மணம் புரிந்துகொண்டு வீட்டுடன் வாழும் வாழ்வே தமிழன் விரும்பிய முழுமையான வாழ்வு ஆகும்.  புறவாழ்வின் வெற்றியும் விரிவேகமும் அகவாழ்வினை அமைத்துக்கொள்ள உதவினவே  ஆகும்.

இலாயக்கு என்ற பேச்சுவழக்குச் சொல்.  அகவாழ்வில் அவன் அடைந்த அமைதியினை நன்கு உணர்ந்துகொள்ள உதவிடும் வழக்குச் சொற்களில் சிறந்த ஒன்றாகும். இலாயக்கு என்பதைப் பிரித்துப் பார்த்தால்.  அகவாழ்வுக்கு உடையவை என்ற  கருத்து  மேலெழுந்து நிற்பதனை அறியமுடிகிறது.

இலாயக்கு என்ற  சொல் இன்று தலையிழந்து,  லாயக்கு என்றே வழங்குகிறது. இந்தச் சொல்  மூன்று பகவுகளை உடையதாய் உள்ளது.  இந்தப் பகவுகளை ஒவ்வொன்றாக அறிந்து இன்புறுவோம்.  இல்,  ஆய்,  அ, அக்கு என்பன இவை. இல்லத்துக்கு ஆன உரிமையை அடையாதவை,  ஒன்றுக்கும் தகுதி இல்லாதவை  ஆகும். ஆகவே உரிமை உடையவை என்பதைக் குறிக்க '' இலாயக்கு'' என்ற சொல் வழங்குகிறது.

இக்காலத்தில் உதவாதவற்றைக் குறிக்கவரும்போதுதான்  தகுதி என்ற பொருளில் லாயக்கு என்பது வழங்குகிறது.  '' இ--லாயக்கு இல்லை'' என்று இச்சொல் வந்துவிடுகிறது.

அக்கு என்பது சொல்லின் இறுதிப் பகவு  ஆகும்.  அக்கு என்றால் உரிமை.  இந்தச் சொல் நெடுங்காலமாக ஓர் இணைத் தொடரில் பொதிந்துள்ளதைக் காணலாம்.  இச்சொல்லுக்கு உரிமை என்ற பொருள் எவ்வாறு வந்துற்றதென்பதை கண்டுகொள்வோம்.   அக்கு என்ற சொல்லில் இரண்டு மிக்கப் பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. எவை எனில்   ''அ'' (அவை) என்னும் சுட்டுச்சொல்லும் கு என்ற சேர்வு குறிக்கும் சொல்லுமாகும்.  சென்னைக்குச் சென்றான் என்ற வாக்கியத்தில் வரும் கு என்னும் சொல் சேர்தலைக் குறிக்கும் சொல். அக்கு என்பதில்   இவை இரண்டும் அதற்குச் சேர்ந்தது என்ற பொருள்தரவே,  ''உரிமை'' என்ற பொருள்  போதருகிறது.  அக்கு வேறு ஆணிவேறாகக் கழன்றது என்ற வாக்கியத்தில்,  உரியன வேறு,  அல்லாதன வேறாகக் கழன்றுவிட்டது  என்ற் பொருள் கிட்டுகிறது. புல்லுக் கட்டில்,  உரியவை  புல்லும் தழையும்.  கயிறு  மாட்டுக்கு உணவாகாத வெளிப்பொருள் ஆகும்.

இல் -  இல்லிற்கு என்று பொருள்தரும். ஆய் -  ஆக என்று பொருள்.  அ -  சேர்ந்தன என்று பொருள்.  

இலாயக்கு என்றால்  இல்லாத்திற்கான உரிமை என்று பொருள்.

இச்சொல் முன்னாளில் வீட்டுக்குத் தேவை என்பது குறித்து, பின் இல்லாதவை என்ற சொல்லால் அவ்வுரிமை இல்லாதவை என்று பொருள் தந்தது.

இது அரபிச்சொல் என்று கொள்ளப்பட்டிருப்பினும் தமிழில்  இருந்த இந்த வழக்குச்சொல்,  பின்னர் அரபியர்களால் பெரிதும் கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது.  .  சில தமிழ்ச்சொற்கள் வெளிநாட்டினரால்  விரும்பி வழங்கப்படுகின்றது..  கடித்துக்கொள்வதற்கான உணவு என்ற பொருள்தரும் ''கறி''.  இன்று உலகப்புகழ் பெற்ற சொல்லாகி விட்டது

இலாயக்கு என்பது தமிழாகவும்  ''லாயக்''  என்பது தொடர்பற்ற சொல்லாகவும் ஓர் உடனிகழ்வு  காரணமாக (coincidence)  ஒலியொற்றுமை உடையனவாக இருக்கின்றன என்பதாகவுக் கூறலாம்.  ''லாயக்'' என்பதன் அடிச்சொற்கள் அரபியில் ஆய்வுக்குரியது ஆகும். இலாயக்கு என்பது தமிழ் என்பதில் ஐயமில்லை.

அரபியில் லாயக்  என்றால் பொருத்தமானது. தமிழில் இலாயக்கு என்றால் இல்லத்துக்கு உரிமையானது அல்லது வேண்டப்படுவது என்பது. பொருள்வேற்றுமை சிறிது உள்ளது.  அடிச்சொற்கள் அரபியில் வேறு. (عدم اللّياقة)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

.பகிர்வுரிமை





அக்கு -  உரிமை.

இல் -   இல்லலம்  உரி

ஆய்  ஆய் - உரிமை



வெள்ளி, 26 டிசம்பர், 2025

சூடு இயல்விக்கும் விண்கருவி சூரியன் ஆன தமிழ்மொழிப்பண்பு

 அடு மற்றும் அரு என்ற இருசொற்களையும் முதலில் எடுத்துக்கொள்வோம். அடுத்தல் என்றால் அருகிற் செல்லுதல்.  அருகுவைத்தல் என்றால் சூடு ஏற்றும்  ஒரு சட்டியையோ மற்ற வெப்பமேற்றியையோ அடுத்து வைத்தல் என்று பொருள்.  குழந்தைக்கு இசிவு வரும்போது இது செய்யப்படுகிறது. இதுபோழ்து இதற்கு மின்னாற்றலால் இயங்கும் கருவிகள் ஏற்பட்டுவிட்டன. அருகுவைத்தல் என்பது இப்போது யாருக்கும் நினைவிலிருக்கும் என்று யாம் நினைக்கவில்லை. அதற்கான ஆங்கில மருத்துவச்சொல் வழங்கிக்கொண்டிருக்கும். சூரியன் எத்துணைக்கல் தொலைவி லிருந்தாலும். அருகிலிருப்பவன் போல் நமக்கு வெப்பமளிப்பதால்,  அவனுக்கு ''அருக்கர்''  என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.  அருகு+ அர்>  அருக்கர் என்ற பெயர் உள்ளது.. சிலம்பு+ அதிகாரம் >  சில்ப்பதிகாரம் என்று பெயர் ஏற்பட்டதுபோல் இது ஒரு வலித்தல் விகாரம். மிகு+ ஆர்+ அம் > விகாரம் என்றாகும்.  மிஞ்சு> விஞ்சு என்று திரிதல்போல் விகாரம் இது.. 

உடு - உரு என்ற இணையும் இத்தகு பொருளணுக்கத்தை முன்நிறுத்தும்.  சொற்கள் வெவ்வேறு விகுதிகளைப் பெற்றுச் சொல்லமைந்தாலும்,  பகுதிகளையே ஒப்புநோக்கி இதை உணர்ந்துகொள்க. உடு > உடல்,  உரு- உருவம் என்பன காண்க. பொருள் சற்று வேறுபடுதல்,  ஒப்புமை எவ்வாறு எழுமென்பதைத் தெளிவாக்குகிறது. மனிதன் உருவிற்கு உடை அணிவிக்கப்படுகிறது.  உரு என்பது உடலின் புறக்காட்சி;  உடை என்பதும் புறக்காட்சிக்கு உதவுவதே  ஆகும்.  தமிழ்மொழிக்கு ஒரு சொல்லாக்கப் பண்பு மேவுவது  இதன்மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது.

மடி - மரி என்பன டகர ரகர திரிபியலுக்கு எடுத்துக்காட்டப் பெறும் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.  இவை பொருத்தமான விகுதிகளைப் பெறும்,  மடிதல், மரித்தல் என்பவற்றில் ஒன்றில் வலிமிகாதும் இன்னொன்றில் வலிமிக்கும் வரும்.  மரிதல் என்ற சொல் அமையவில்லை போலும்.  அதற்குப் பதிலாக, மருவுதல் என்ற வினைச்சொல் அமைந்துள்ளது. மடிதல், மரித்தல் இன்னும் மருவுதல் ஆகிய எல்லாம் மாறுதல் கருத்துக்கள் என்ற அளவில் ஒருமைப்பாடு உடையவை. இங்கு நாம் இத்துணை சொல்லமைப்புப் பண்புகளை எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவற்றுக்குள் செல்லாமலே,  ஒரு சொல் திரிபைக் காட்டிவிட்டு,  சூடியன் - சூரியன் என்பதைக் காட்டலாம்.  அது போதுமானதாகவே இருக்கும் என்றாலும்,  சிறிது அதிகச் சர்க்கரையை இங்கு தந்துள்ளோம்.

சூடு தருவதே சூரியனின் வேலை.  இது ஒரு நாட்டுப்புற வழக்கி லிருந்து வந்த ஒரு சொல்.  வெப்பி என்று பெயரைக் கூட வைத்திருக்கலாம்.  வழக்குப் பெற்றுவிடுமாயில் மொழியில் இடம்பெற்றுவிடும். சூடு கொளுத்தினும்  கொளுத்தி என்றும் அமையவில்லை. கொளுக்கி என்ற பெயர் கொளுவிக்கு அமைந்தது.   கொளுக்கி என்பது இடைக்குறையாய் கொக்கி என்று வந்தது.  இவை வேறு பொருட்களுக்கு அமைந்தன.

சூரியனுக்கு அமைந்த பெயர்கள் பல.  அவை நீங்கள் அறிந்தவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை