வெள்ளி, 31 அக்டோபர், 2025

காண்தாரம் என்பதன் திரிபு

 காண்தாரம் என்ற சொல் எவ்வாறு திரிந்துள்ளது என்பதைக் காண்போம்.

காண்தார நாட்டின் இளவரசி காந்தாரி.  இவள் பாரதக் கதையில் வரும் கதைமகள் ஆவாள்.  

காண்தார நாட்டின் அழகின் காரணமாக அந்நாட்டுக்குக் காந்தாரம் (காண்தாரம்) என்ற பெயர் ஏற்பட்டது.  காணபதற்குப் பல அழகுகளை உடைய நாடு என்ற பொருளில் இச்சொல் அமைந்துள்ளது.  காண் -  காண்பதற்கு  தாரம் - அழகுபல தருவதான நகர்.  காணுதல் தருதல் என்பன இதன் வினைச்சொற்கள்.

மகாபாரதச் சொற்களில் பல தமிழ் மூலங்கள் உடையவை என்பதை முன்னர் எடுத்துக்காட்டி யுள்ளோம்.

காண்தரு அழகுடைய நகர்.  காண்தரு+ அம் > காண்தாரம்.

காண் தரு > காண்தாரி> காந்தாரி.

சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  இச்சொல் வழங்குகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை,

வியாழன், 30 அக்டோபர், 2025

நாமம் நாவு

 நாவு என்ற சொல் நாக்கு என்றபடி  இன்று பேச்சிலும்  எழுத்திலும் வழங்குகிறது.  நாவு என்பது  நா  என்றும் வழங்கும். நாய் என்ற விலங்குக்கும் இச்சொல்லே அடிச்சொல் என்பது புலவர்கள் கருத்து. பரத்தல் என்ற வினையின் அடி பர என்பது.  பர என்பது பார் என்று திரிந்து,  உலகு என்ற பொருளில் உலவுகின்ற சொல். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பார்வையைக் குறுக்கிச் செலுத்திக்  காட்சிகொள்ளாமல் விரிந்து செல்வதுதான்  '' பார்த்தல் '' எனப்படும். கடவுள் என்பவர்க்கு இருப்பிடம் கைலாயம், வைகுண்டம் என்று சொற்கள் இருப்பினும் அவர் ஓரிடத்துக்கும் ஒடுங்காதவர்.  ஆகையால் இவர்க்கும் பரமன், பரப்பிரம்மம் என்றபடி பெயர்கள் அமைந்துள்ளன.

நா என்பதிலிருந்து நாய் என்ற சொல் அமைந்தது போலவே,  பரவலுற விரிக்கப்படுவதற்குப்  பார்>  பாய் என்ற சொல் அமைந்தது. இது போலவே, பழத்திற்கு முந்தியது  காக்கப்பட்டதனால்  கா(த்தல்) > காய்  ஆயிற்று. காய்கள் சில கசப்பு உடையவையாக இருப்பதானால்   கச> கய>  காய்  என்ற சொல் வந்தது.

மனிதன் பிறக்கிறான்,  காலம் செல்ல, இறந்துவிடுகிறான்.  நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்பர். பழங்காலத்தில்,  கொலை என்பதை  ஆங்கில மொழியில் மர்டர் என்று எப்படிப் பெயரிட்டனர்?  மர்ட்ரம் என்பது  கொன்றவனிடம் வசூலிக்கப்பட்ட ஒரு வரி. இதிலிருந்தே  மர்டர் (கொலை) என்பதற்கான சொல் பெறப்பட்டது.  அரசனின் கவனம் இதில் பெயரிடும் அளவுக்கு ஏன் சென்றது என்றால்,  இறந்தவன் அரசுக்குச் செலுத்திய வரி வராமல் கொலைஞன் கெடுத்துவிட்டான் என்பதனால்தான்.  சொல் அமைவதற்குக் காரணம் வரலாறு தொடர்புடையதாகவும் இருக்கலாம்..

பழங்காலத்தில் மக்கள்தம் பிறப்பு இறப்பு பற்றியவை  கல்வெட்டில் பொறிக்கும்   அளவுக்கு முன்மை ( முக்கியத்துவம்) பெறவில்லை. குடும்பத்தார் ஓலைகளில் எழுதி வைத்திருந்திருக்கலாம்.  இது எழுத்துக்கள் உண்டான பின்புதான் இயன்றிருக்க முடியும்.  பெயரிடும் வழக்கம்  அதற்கும் முன்னரே உண்டானது என்பதற்கு நாமம் என்ற சொல் சான்றாகின்றது.  பெயர்கள் நாவினால் அழைத்து உண்டானவை. நாவினால் பலமுறை அழைத்தபின்பு தான் அது நாமம் ஆகிறது.    நா> நா அம் > நாமம்.    அம் என்ற இடைநிலையும்  அம் என்ற இன்னொரு விகுதியும் பெற்ற சொல்லே நாமம் ஆகும்.

சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான்.  ஐரோப்பியர்கள் அதனுடன் உறவு கொண்டாடி,  அதிலிருந்து பல சொற்களை எடுத்துக்கொண்டனர். சீன மொழியை அவர்கள் கவனித்தனர் என்றாலும் அங்குள்ள சொற்களால் வசதியான உறவை அம்மொழியுடன் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பெரிதும் ஓரசைச் சொற்களாய் இருந்ததும் ஒரு காரணம். இதைக் கூறும் இடுகைகள் அல்லது கட்டுரைகள் தொடக்கத்தில் இணையத்தில் இருந்தாலும் இப்போது அவை அங்கு இல்லை.  நூல்களில் கிட்டலாம்.

வீட்டில் உம்மைப் பலகாலும் அழைக்கப்  பயன் தருவதே  நாமம்.  நா> நாமம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 24 அக்டோபர், 2025

துரியோதனன்

துரியோதனன் தான் கல்வி கற்கும் காலங்களில் சிறப்புடையோனாகத் திகழ்ந்ததாகவே தெரிகிறது.  தான் கசடறக் கற்றதுடன், பிறருக்கும் போதித்த பெருமையோன் என்பது தெளிவு.  துரியோதனன் என்ற பெயர் இயற்பெயராகத் தோன்றினபோதிலும்  இது தமிழ் மூலங்களை உடைய சொல் என்பது எமக்குத் தெளிவாய் உள்ளது.  நீங்கள் இதை உடனடியாக ஏற்கவேண்டியதில்லை,  ஆய்வு செய்து ஏற்கலாம்  அல்லது புறந்தள்ளிவிடலாம்.  இவ்வாறு செய்வது உங்கள் ஆய்வுரிமை.

துரியோதனன் கல்வியிற் சிறந்தோன்.  அவன் '' துருவி ஓதுநன்''  ஆவான்.

ஒன்றைத் துருவி துருவிக் கற்று மனத்தில் அமைத்துக்கொள்பவன்.

துருவி ஓதுநன் >  துருவோதுநன் >  துரியோதன >  துரியோதனன்.

பாண்டவர் என்பதற்கும் பாண்டியர் என்பதற்கும் உள்ள ஒலியொற்றுமையை கவனித்துக்கொள்ளுங்கள். உடன்வீழ்க என்று யாம் சொல்லவில்லை.

இதை வேறு யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று யான் அறியவில்லை. அவர்களை மேற்கோள் காட்டவும் எண்ணவில்லை.

ஒன்றை நன்றாகத் துருவி ஆய்ந்து அறிந்தபின்  அவன் அதை  ஓதும் பண்பினன். அவன் அதைப் பின் ஒலிப்படுத்துவான். தன் செவிகட்கும் அவன் ஓதுவான்; பிறருக்கும் ஓதுவான்  ( ஓதுவிப்பான் /கற்பிப்பான்).

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை