திங்கள், 20 அக்டோபர், 2025

பயம் (அச்சம்) என்ற சொல்.

 இன்று பயம் என்ற சொல்லை ஆய்வு செய்தல் நண்ணுவோம்.

பைம்மை என்பது  இளமைக்காலத்தைக் குறிக்கும்.   பை>  பையன்,  இது இளவயதினனைக் குறிக்கும் சொல்.  இச்சொல் முன் தமிழில் பையல் என்றிருந்து பின்னர் பையன் என்று அன் விகுதி பெற்றது.  லகர ஒற்றால் இறுதி பெற்று, பின்னர்  னகர ஒற்றால் முடியும்  சொற்களில் பையன் என்பதும் ஒன்றாகும்.  பையல் > பையன் ;  

பையல் >  பயல் என்றுமாகும்.   ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியத்தில் சொல்லப்படுகின்றது.  சொல்லாக்கத்திலும் இக்குறுக்கம் நிகழும்.

ஒருவன் பையனாக இருக்கும்போது,  எளிதில் அவனைப் பயமுறுத்திவிடுதல் கூடும். அச்சமின்றி நடந்துகொள்வது எல்லாப் பையன்களாலும் இயலுவதில்லை.   சொற்கள் பெரும்பாலும் பொதுப்பண்பு கருத்தியே அமைபவை. இவ்வாறு,  பயம் என்ற சொல்  அச்சத்தைக் குறிக்கலாயிற்று. இதன் அடிச்சொல் பை  என்பதே.

இதே அடியிலிருந்து  பைத்தியம் என்ற சொல்லும் வந்துள்ளது. இது:

பை -  இளமை குறிக்கும் அடிச்சொல்.

பை+ து >  பைத்து   பொருள்:  இளந்தன்மை காரணமாய் எழுவது.

பைத்து + இ+ அம் > [பைத்தியம்.  இளமையினால் அல்லதூ முதிர்வின்மையால் எழும் மனநோய்.]

''ஆளும் வளரணும்  அறிவும் வளரணும்'' என்று பாட்டில் சொல்வதுபோல்  ஆள் வளர்ந்தும் அறிவு பைம்மை நிலையில் இருப்பதுதான்  பைத்தியம்.

பயில்தல், பயிற்றுதல் என்ற சொற்களும் பைம்மை அடியாகப் பிறந்தவையே.  

பை> பயம் என்பதே  இதன் பிறப்பு.   பயன் என்ற சொல் பயம் என்றும் வரும்.  அதை வேறு சொல்லாகக் கொள்ளலாம்.  இங்குப் பயிர் என்ற சொல்லையும் இணைத்துப் பொருள் சொல்லலாம் எனினும் அதை வேறோர் இடுகையில் செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை,


வியாழன், 16 அக்டோபர், 2025

உலவுதலும் உராவுதலும்.

 லகரம்  சொல்லில் ரகரமாக மாறிவிடும் என்பது நம் பல இடுகைகளில் முன்னர் சொல்லியிருத்தலைக் காணலாம். இம்மாற்றங்களில் பலவற்றை மிக்க நுட்பமாக ஆய்வு செய்தால் இந்தத் திரிபு மனப்பாடமாக மறக்க முடியாததாகி விடும் என்பது தெளிவு.

இவ்வகைத் திரிபு மிக விரிந்த தாக்கமுடையது ஆகும். 

பழந்தமிழில் லகர ஒற்றில் முடிந்த சொற்கள் பலவிருந்தன.  வள்ளல் என்ற சொல் இன்னும் வழக்குடையதாய் உள்ளது. நாளடைவில் அல் என்று முடிந்த மனிதனைக் குறிக்கும் சொற்கள் அல் என்று முடியும்படி இல்லாமல் அர் என்று முடிவெய்தின. இளவல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம் .  தம்பி என்று பொருள்படும் இச்சொல் இறுதி லகர ஒற்றில் முடிந்தது. இதுவும் எப்போதாவது உயர்ந்தோர் (கல்வியாளர்கள்) நடையில் தோன்றி மகிழ்விக்கும்.  தோன்றல் என்ற சொல்லும் மிகப்பெரியோன் என்று பொருள்தருவது.  வேறு பொருள் உண்டாயினும்,  இது லகர ஒற்றில் முடிதலைக் கண்டுகொள்க.

இங்கு காட்டப்பெற்றவை சொல்லின் இறுதியில் வரும் லகர ஒற்று. லகர ரகரங்கள் சொல்முதலாக வருவதில்லை.  ( மொழிமுதல் என்பர் இலக்கணியர்).

உலாவுதல் என்பது உராவுதல் என்றும் வந்ததற்கான இலக்கியம் உண்டு என்பதறிக. இத்திரிபு  லகர ரகரத்தது ஆகும்.

லகர ரகரத் திரிபுகள் பிறமொழிகளிலும் காணப்பெறுவது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



திங்கள், 13 அக்டோபர், 2025

இரக்கம் , ரக்கம்> ரட்சம், ரட்சகர் முதலியவை

 மேற்கண்ட (தலைப்புச்) சொற்களை ஆராய்வோம்.

ஒரு பறவைக்கு  அது இடம்பெயர்வதற்கான உதவி உறுப்புகள்  பக்கவாட்டில் அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே.  அதனால் அதற்குப் பக்கி என்ற பெயர் அமைந்தது.  பக்கங்களில் அமைந்தவை என்று இந்தச் சொல்லுக்கு பொருள்.  பகு+ அம் >  பக்கம்;  பகு+ இ >  பக்கி.  இ என்பது ஒரு விகுதியும், இருப்பவை என்பதற்கான முதலெழுத்தாகவும் கொள்ளலாம்.   பக்கி என்ற சொல்லே பின் பட்சி என்று  திரிந்தது.

பக்கி > பட்சி என்ற திரிபு,......  என்பதில்  க்கி என்பது ட்சி என்று திரிந்தது போலவே,  இரக்கம் என்ற சொல்லும்  ரக்க> ரட்ச என்று திரியலானது.  இது சொல்லியலுக்கு ஒத்த திரிபு ஆகும்.  கேரளம் என்ற சொல்  சேரலம் என்ற சொல்லின் திரிபு.  சேரல் என்பது சேரன் எனற சொல்லின் முன்வடிவம்.  க > ச என்றித் திரிபுவகையைக் குறிக்கலாம்.  ச என்பது பின் ட்ச என்று சமஸ்கிருதத்தில் திரிந்து  எளிதாக்கம் பெறும்.  

இரட்சகர் என்றால் இரக்கம் காட்டி உதவுபவர் என்று பொருள். இரக்ககர் என்ற சொல்லே இரட்சகர் என்று திரிந்தது.  அதன்பின் முன்வடிவம் இறந்துபட்டது என்பது தெளிவு. இரக்க அகர் என்பதை இரக்கமுள்ள அகத்தினர் என்று பொருள்கூற வேண்டும்.  அகத்தினர் -  மனத்தினர்.  இரட்ச அணியம் >  இரட்சணியம் > இரட்சண்ய.

மரங்களுக்கு விருட்சம் என்ற சம்ஸ்கிருதச் சொல் வழங்குகிறது.  கிளைகளில் இலைகள் ஏற்பட்டு  விரித்த -   அல்லது விரிந்த நிலையில் நிற்பனவாதலின் இவற்றுக்கு  விரிச்ச < விரித்த என்பதிலிருந்து  விரிச்சம்>  விருச்சம் என்ற பெயர் ஏற்பட்டது நல்ல அமைப்பு.  இது தமிழை ஒட்டி எழுந்த பெயர்தான்.  விரிச்ச என்பது ஊர்வழக்குத் திரிபு.  இது பின் விருட்சம் என்று திருத்தப்பட்டது தெளிவு.

பரிந்து மணவர்களுக்கு இடப்படுவது பரிட்சை.  பரி + இடு + சுஐ (சை).  பரிதல் - ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்குச் செல்லுக்கின்ற ( பரவுகின்ற)  இரக்க குணம்.  பரீட்சையில் மணவர்களை ஆய்வு செய்தல் பரவும் ஒன்றுதான்.   அது ஆசிரியனிடமிருந்து மாணவனை நோக்கிச் செல்லும் ஓர் ஆய்வுநிகழ்வு.  பரிதல் என்பது இடம்பெயர்தல்  . பரவுதல் இடம்பெயர்தலே  ஆகும்,

ககரத்துக்குச் சகரம் வந்த இடங்களை இவ்வாறே  அறிந்துகொள்க.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.