திங்கள், 6 அக்டோபர், 2025

துப்பு என்னும் வழக்குச் சொல் மற்றும் இலக்கியச் சொல்

 துப்பு என்பது '' பல்பொருள் ஒருசொல்.''  இதன் பொருள்களில் உளவு, உளவாளி என்றும் பொருள் உள்ளது.  இது மனிதனைக் குறிக்கும்போது, உளவன் என்று அன் விகுதி பெற்றும் வருதலை உடையதாம்.  

இது அகம் என்னும் சொல்லுடன் சேர்ந்து துப்பகம் என்றுமாகும்.  துப்பு, அ , கு அம் என்னும் பகவுகளை இணைத்து உண்டான சொல்.  அகம் என்பதை சொற்பகவாய்க் கொள்ளாமல் விகுதி மற்றும் இடைநிலைப் பகவுகளாகக் கொண்டு,   அ -  அங்கு, கு - சேர்ந்து அல்லது கூடி, மற்றும் அம் - அமைதல் பொருளதான விகுதி என்றும் கொண்டு,  அங்கு சேர்ந்து அமைவது என்று பொருள்கூற, அது வழக்கில் உண்ணும்போது சோற்றில் முன்னர் ஊற்றப்படுவதான நெய்யைக் குறித்தது என்று கொள்ளல் அதன் வழக்குப் பொருளுடன் சரியாகின்றது. 

துப்பன் என்பது ஆற்றல்லுள்ள மனிதனைக் குறித்தது.   து என்பது முற்செலவு குறிக்கும் சொல்லாகையால், எதிலும்  முன்செல்பவன் வலியோன் என்று பொருள்பயந்து நிற்கிறது. அரசன் செல்லுமுன் முன்சென்று அறிந்து வருவோன் ஒற்றனாதலின், அது ஒற்றனையும் குறிக்கும் சொல்.

துப்புரவு என்னும் சொல்லிலும் துப்பு உள்ளது.  துப்பு, உரு, அ, வு என்பன பகவுகள்.  வு என்பது விகுதி.  துப்பு - முன்னர், உரு -  தெளிவாகி, அ என்பது அங்கு என்று குறிப்பது.  ஆகவே, எல்லாவற்றிலும் முன்னர் அங்கு நிற்பது என்றால் அது தூய்மைதான்.  தூய்மை என்ற சொல்லுமே முன்வரு தன்மையையே குறித்து எழுந்த சொல்தான்.  ஆகவே கருத்தொற்றுமை உள்ளது காண்க. பண்டைத் தமிழர் தூய்மையை வெகுவாகக் கொண்டாடியது இதிலிருந்து தெரிகின்றது.

துப்புரவு என்ற சொல் துப்பரவு என்றும் வரும்,  அரவு என்பது அருமை என்று கொள்க. அரு+மை > அருமை;  அரு+ வு > அரவு.  ரு என்பதிலுள்ள இறுதி உகரம் ரகரமாயிற்று,  இது திரிபு.   தூய்மையே அருமையானது என்பது இதன் சொல்லமைப்புப் பொருளாகிறது.

துப்பற்றவன் என்றால்  முன் நிற்கும் தகுதி அற்றவன் என்று கொள்க.

அரக்கு  என்பதும் பொருள். இன்னும் இச்சொல்லின் பொருளை அகரவரிசைகளில் முழுமையாக அறிந்துகொள்க.  எல்லாம் முன்மை காட்டும் பொருட்களே  ஆகும். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்னும் குறளும் காண்க.

துப்புதல் என்ற வினை முன் கொணர்ந்து எச்சிலை உமிழ்தல் என்ற பொருளுடன் அறியப்படுகிறது.  ஆகவே து என்பதற்கு முற்செலவே பொருள். உமிழ் என்ற சொல்லிலும் உ என்ற உகரத்திற்கு முன் என்பதே பொருள்.

இவ்வாறு அறிய இதன் பொருண்மை எளிதாகிவிடுதல் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஆலிங்கனம் தமிழ் மூலம்

 ஆளை இங்கு அணை அம் என்ற சொற்களை அல்லது வாக்கியத்தைத் திரித்து இணைத்தாலும்  ஆலிங்கனம் என்ற சொல் வந்துவிடும்.  இவ்வாறு இணைக்கும்போது  உட்பகவுகளைத் திரிக்காமல் இருத்தல்  இயல்வதில்லை. ஆளை என்பது ஆலை என்று மாறிவிடும்.  இங்கு என்பதை இணைக்கையில், ஆலை + இங்கு > ஆல்+இங்கு என்று மாறி,  ஆலிங்கு என்று வரும். ஐகாரக் குறுக்கம் என்பது தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது.. பண்டைக் காலத்தில் கவிதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டன. ஐயை என்ற சொல்லுடன் ஐ என்ற வேற்றுமை விகுதியைப் புணர்த்தினால்,  பலுக்கும்போது  ஐயயை என்று ஒலித்து, நடுவு இடத்து யை  என்பது ய என்றாவது காண்க. இவண்  ஆளை இங்கு என்பது ஆள்+ இங்கு என்றாகி   ஆளிங்கு > ஆலிங்கு என்றாம்.

இனி அணை என்பது  அனை> அன்  என்று ஐகாரம் முற்றும் தொலைந்துவிடும். இவ்வாறு ஐகாரம் வீடுற,  அனம் என்று வருதல் எளிதாம்.  ஆகவே  ஆல் இங்கு அன் அம் என்று தோற்றமுற்று,   ஆலிங்கனம் என்று எளிதாம் என் க.

இது இன்னொரு வகையிலும் உருவாக்கம் பெறலாம். இது முன் எழுதப்பட்டது. அதனை ஈண்டு காண்புறுவீர். 

ஆலிங்கனம் என்பதற்கு இன்னொரு முடிவு:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_28.html

இந்த இடுகையைச் சொடுக்கி, இன்னொரு வகை விளக்கத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை  உடையது.

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

பூவராகம்

இது திருமாலின் ஓர் அவதாரத்தைக் குறிக்கும் சொல்.  இதனைச் சமஸ்கிருதம் என்றாலும் தமிழ் என்றாலும்  காணப்படும் வேறுபாடு ஒன்றுமில்லை. எம்மொழிக்கு உரித்தாயினும் இதன் மூலச்சொற்கள் தமிழே  ஆகும்,  அவற்றை இங்குக் காண்போம்.

பூ வர ஆகும் என்பதே  பூவராகம் என்று ஒருசொல் ஆனது.  பூமியே அதன்  உருவாகி வந்த கொம்புகளாக இருத்தல் என்பதே பொருள்.  பூ வர அல்லது உருக்கொள்வதற்கு  ஆக்கம் தருவது  பூமி.  இந்தச் சொல்லைப் படைத்தவன் ஒரு தோட்டத்தில் இருந்துகொண்டு இதனை அமைத்திருக்கிறான் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும்.

பூ என்ற சொல்லிற்குச் செடியினின்று தோன்றியது என்பது பொருள். செடி பூமியிலிருந்து தோன்றியதாகின்றது.  பூமி என்றால்  (1) தோன்றியாதாகின நிலம் என்றும், (2) நிலைத்திணையையும் உயிரினங்களையும் தோற்றுவித்ததாகிய நிலம் என்றும் பொருள் கூறலாம்.   நில் > நிலம் :  நிற்பதற்கான இடம் தருவது என்று பொருள்.  தரை :  தரு> தரை.  நிற்பிடமும் வாழ்விடமும் தருவது என்று பொருள்.  இந்தச் சொல் பிறமொழிகளிலும் ஊடுருவியுள்ளது  நமது கொடை. மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பூமியானது தோற்றமடைந்த ஒரு பெரும் பந்து ஆகும்.  பூத்தல் என்றால்  அழகான தோற்றம் தருதல்.  இம் என்றால் இங்கு என்பதன் சுருக்கம்.  பூ இம் இ >  பூமி, இகரம் தொகுந்தது.  ம் என்ற மெய்யின் ஒலி வெளிவர இ முன் வந்து உதவி செய்கின்றது. மகர ஒற்றில் இகரம் முன்வந்தாலன்றி ஒலி வெளிப்படாது. இ இறுதியை விகுதி எனின் ஒக்கும்.  பூ என்பது முதனிலைத் தொழிற்பெயர். விகுதி இன்றி பகுதி மட்டுமே நின்று பெயராவது.

இனி வராகம் என்பது பன்றியாய் வந்து மாலானது என்று பொருளும் கூறலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை