செவ்வாய், 30 செப்டம்பர், 2025

பூவராகம்

இது திருமாலின் ஓர் அவதாரத்தைக் குறிக்கும் சொல்.  இதனைச் சமஸ்கிருதம் என்றாலும் தமிழ் என்றாலும்  காணப்படும் வேறுபாடு ஒன்றுமில்லை. எம்மொழிக்கு உரித்தாயினும் இதன் மூலச்சொற்கள் தமிழே  ஆகும்,  அவற்றை இங்குக் காண்போம்.

பூ வர ஆகும் என்பதே  பூவராகம் என்று ஒருசொல் ஆனது.  பூமியே அதன்  உருவாகி வந்த கொம்புகளாக இருத்தல் என்பதே பொருள்.  பூ வர அல்லது உருக்கொள்வதற்கு  ஆக்கம் தருவது  பூமி.  இந்தச் சொல்லைப் படைத்தவன் ஒரு தோட்டத்தில் இருந்துகொண்டு இதனை அமைத்திருக்கிறான் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும்.

பூ என்ற சொல்லிற்குச் செடியினின்று தோன்றியது என்பது பொருள். செடி பூமியிலிருந்து தோன்றியதாகின்றது.  பூமி என்றால்  (1) தோன்றியாதாகின நிலம் என்றும், (2) நிலைத்திணையையும் உயிரினங்களையும் தோற்றுவித்ததாகிய நிலம் என்றும் பொருள் கூறலாம்.   நில் > நிலம் :  நிற்பதற்கான இடம் தருவது என்று பொருள்.  தரை :  தரு> தரை.  நிற்பிடமும் வாழ்விடமும் தருவது என்று பொருள்.  இந்தச் சொல் பிறமொழிகளிலும் ஊடுருவியுள்ளது  நமது கொடை. மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பூமியானது தோற்றமடைந்த ஒரு பெரும் பந்து ஆகும்.  பூத்தல் என்றால்  அழகான தோற்றம் தருதல்.  இம் என்றால் இங்கு என்பதன் சுருக்கம்.  பூ இம் இ >  பூமி, இகரம் தொகுந்தது.  ம் என்ற மெய்யின் ஒலி வெளிவர இ முன் வந்து உதவி செய்கின்றது. மகர ஒற்றில் இகரம் முன்வந்தாலன்றி ஒலி வெளிப்படாது. இ இறுதியை விகுதி எனின் ஒக்கும்.  பூ என்பது முதனிலைத் தொழிற்பெயர். விகுதி இன்றி பகுதி மட்டுமே நின்று பெயராவது.

இனி வராகம் என்பது பன்றியாய் வந்து மாலானது என்று பொருளும் கூறலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 29 செப்டம்பர், 2025

பொருள் என்ற சொல்லின் தோற்றம்.

 அர்த்த சாத்திரம்  ( சாஸ்திரம்) என்பதைத் தமிழில் ''பொருள்புரி நூல்'' என்பர். பொருள்நூல் என்பதைப்  பொருணூல்  என்றும் புணர்த்தி எழுதலாம். (ள்+நூ-- ணூ என்று வரும்.)  இந்தப் பெயரில் சாணக்கிய(ன்) என்போர் சமஸ்கிருதத்தில்  அர்த்தசாத்திரம் என்ற நூலை இயற்றினார் என்பது அறிந்ததே.

அறுத்த என்ற வினையெச்சத்தைத்தான்  அர்த்த என்று சமஸ்கிருதத்தில்  சொல்வர். பாதி என்பது பகுதி  என்பதன் திரிபு என்றாலும்  இதன் அமைப்புப்பொருள் பகுக்கப்பட்டது  என்பதுதான். வழக்கில் சரிபாதியைக் குறிக்கின்றது.  அறுத்த என்பதும் பகுக்கப்பட்டது என்பதே ;  ஆனால் தமிழில்போல் வடமொழியில் பாதியைக் குறிக்கிறது. இருமொழிகட்கு மிடையில் உள்ள பொருளமைப்பு ஒற்றுமையை இது காட்டுகிறது.

பொரு என்பது  சொல்லின் ஒரு  முதன்மைப் பகுதி  ஆகும். பொருள்  அறியவியலாத வாயொலி  ஒரு வெற்றொலிதான். இதைச் சொல் என்று பெரும்பாலும் குறிப்பதில்லை.  பெரும்பாலான மொழிகள் ஒலிவடிவம் வரிவடிவம் என இரண்டு வடிவங்களும் உடையவை. ஒலிவடிவம் மட்டும் உள்ள மொழிகளும் ஆய்வறிஞர்களால் அறியப்பட்டுள்ளன.

பொரு ( பொர்)  என்பது   ஓர் அடிச்சொல். இது உள் விகுதி பெற்று பொருள் என்று ஆகிறது.   பொர் - பொரு என்ற அடியிலிருந்து வரும் இன்னொரு சொல் பொருந்து என்பது. இச்சொல்லிலிருந்து பொருள் என்பதன் அறிகிடப்பினைத் தெரிந்துகொள்கிறோம்.  சொல்லுடன் பொருந்தி நிற்பதே பொருள்  என்று அறியப்படுகின்றது.  சொல் எதைக் குறிக்கிறது என்பதைப்  பொருந்தி நிற்பதான பொருள் நமக்கு அறிவிக்கின்றது.

செதிள்போலப் பிரியும் மேற்படிவைப் பொருக்கு என்கின்றோம். இதுவும் பொருந்தியிருந்தது  என்பதைக் குறிக்கும் சொல்.

இவ்வாறே நீங்களே தொடர்புடைய சொற்களை அறிந்துகொள்ளலாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


_-----_-----------------------------


ethereal.  எத்தி ரியல்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

வராகனெடை --- வராகனிடை.

 வருவதற்கான எடை என்பதற்கு நிறுத்தெடுத்த பின்பு  அது கொடுக்கப்படவேண்டியவனுக்குச் சென்றுசேரவேண்டியதைக் குறிப்பதாகும். அதுவரைக்கும் அந்தத் தராசுவில் உள்ள எடை போற்றப்படும்.  இது பொன்னின் .எடையையும் காட்டும்.

வராகன் என்பது தங்கவராகனையும் குறித்த சொல்.  தங்கம் என்பது ஒரு காலத்தில் நாணயமாகவும்  வழங்கியது.

தங்க வணிகம் புரிதலில் தங்கம் மென்மேலும் வரவு பெறுவதே  தங்க+ வரு+ ஆகம்  என்பதாகும். ஆகு+ அம் >  ஆகம். இது பொருளோடு  சொல்லிறுதியாய் வருதல் இதன் சிறப்பு. ஆகி அமைதல் என்பது ஆகம் என்பது அறிக.  தங்க இருப்பு போதலை  விட வருதலே தொழிற் சிறப்பு.

வரு ஆகம் என்பது வராகம் என்றமைந்தபின் வராகன் என்று திரிந்தது அம் என்ற இறுதி  அன் என்று திரிதல்.  அதன்பின் எடை எனல் இணைய, வராகனெடை ஆயிற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை






----------------------------------------------------------------------------------------------------------------


திரிபு ( நினைவுக்குறிப்பு)

தேய்வடை > தேவடை