தனக்குத் தெரியாத ஒன்று சரியாக நடைபெறுகிறது என்று முடிவு கொள்ளும் மனத்திடம் எளிதில் அமையாமையால், தேவர்கட்கு அடியார்களாக இருக்கும் பெண்டிர் சரியான நடப்பு உடையவர்கள் என்று முடிவு செய்யும் திடமனம் ஒருவற்கு ஏற்படுவதில்லை. அதனால் தேவரடியார் என்ற சொற்கு நல்ல பொருண்மை ஏற்படவில்லை.
இதிலிருந்து தேவடியாள் என்ற சொல் ஏற்பட்டது. அது இழிபொருளை சொல்லுக்கு ஏற்றியது,
தேவு என்ற சொல்லே தேய்வு என்பதன் இடைக்குறையிலிருந்து ஏற்பட்டது. மரங்களின் உராய்வு தீப்பற்றுவதாலும் தீயானது பிற்காலத்து வணக்கம் பெற்றமையாலும் தேய்வு> தேவு என்ற சொல் தெய்வத்தன்மை, இறைவன் என்பவற்றைக் குறிக்க எழுந்தது. தேவு என்ற சொல்லோ தமிழிற் றோன்றிய சொல்லே ஆகும்.
தேய்வு அடை என்ற சொல் தேய்வடை> தேவடை என்று திரிந்தமையும் உணர்க. நாணய எழுத்துக்கள் தேய்ந்தபின் அந்நாணயங்கள் தேவடை என்று குறிக்கப்பட்டன. சாய் என்ற வினை சா என்று யகர மெய் இழந்த இன்னொரு வினையாய் அமைந்தமையும் கண்டுகொள்க. தாய் என்ற சொல்லும் பெயர்களில் தா என்ற நிற்றல், தேவ(த்)தாய் > தேவதா என்று குறைந்தமையும் கண்டுகொள்க. பெண்பெயர்களில் தாய் என்பது தா என்றே முடிந்து , வனிதைத் தாய் என்பது வனிதா என்று பெயராகும். புனிதத் தாய் > புனிதத்தா> புனிதா என்றாகும். பல்திரிபு மொழிகள் தனிமொழிகளான பின் இவற்றின் தொடர்புகள் மறைந்தன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிவுரிமை