சனி, 2 ஆகஸ்ட், 2025

பத்து, நூறு, ஆயிரம் முதல் தசம், சதம் என்பன வரை

 தலைப்பில் கண்ட பத்து, நூறு, தசம், சதம் என்பவை பற்றி அறிந்துகொள்வோம்.

தசைத்தல் என்றால் ''பற்றிப் பிடித்தல்''  என்று சொல்லலாம்.  பிடித்தல் என்பதும் பற்றுதல் என்பதும் ஒரு பொருளன ஆயினும் விளக்கத்தின் பொருட்டு இங்கு இணைத்துக் கூறப்பட்டன.  பல்+ து > பத்து என்பதும் பற்றிக்கொள்ளுதல் என்ற  பொருளுடையதே.  ஒன்றுமுதல் எண்கள் ஒன்றை ஒன்று பற்றிப்  பெரிதாகி,  ( ஒன்றாகி என்பதால் பெரியனவாகி என்று கூறவில்லை.  )  உண்டான எண்ணேதான் தசம் என்பது. பத்து என்பதும் அதுவே.  இவை ஒரே கருத்துடையனவாக உள்ளபடியால்  கருத்தியல் ஒற்றுமை இவ்விரண்டு எண்களுள்ளும் காணப்படுகிறது.  இதுபோலப் பல சொற்களில் கருத்துகள் ஒன்றாய் உள்ளமை எம் இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது கண்டுகொள்க.

தசம் என்ற சொல்லை அமைத்தபின், சதம் என்ற சொல்லை அமைப்பதில் அவர்கள் அதிக முயற்சி மேற்கொள்வதைத் தவிர்த்தனர்.  எழுத்துக்களை மாற்றிப்போட்டு,  சதம் என்ற நூறு குறிக்கும் சொல் மேற்கொள்ளப்பட்டது.

தசம் >  சதம் :  இது எழுத்து முறைமாற்றுப் புனைவு என்று பெயர்பெறும்.

சிறிதானது பெரியதாவதுதான்  தசைத்தல் அல்லது கொழுத்தல்.  இவை ஒருவகைப் பெரிதாதல் என்றாலும்  சிலவிடங்களிலே பயன்பாடு உடையது.  கழுதை கொழுத்தது எனலாம்;  ஆனால் மரம் கொழுத்தது என்று பேசுவதைக் கேட்டதில்லை. எங்காவது யாராவது பேசியிருக்கலாம். தசைத்தல் என்பதும் அத்தகையதே  ஆம்.  ஆனால் கொழு என்ற சொல் கொள் என்பதிலிருந்து திரிந்ததுதான்.  முன் இல்லாத சதைப்பிடிப்பு இப்போது ஏற்படுவதை இது குறிக்கும்.  முன் இல்லாத ஒன்றினை இப்போது ''கொள்வதால்''  அல்லது உள்ளடக்குவதால்  கொள் > கொழு என்பது பொருத்தமான சொல்லமைப்பே ஆகும், இதன்மூலம்  சதம்  தசம் என்பன தெளிவாகின்றன.

ஆயிரம் அமைத்த காலத்தில் அதுவே பெரிய எண்ணாய் இருந்தது.  ஆகப் பெரியது என்ற பொருளில்,  ஆய் + இரு   =  ஆகப் பெரியது என்ற பொருளில் அதை அமைத்தனர். இரு என்றால் பெரிது என்றும் பொருள்.

இதையும் வாசித்தறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2023/01/blog-post_4.html  இங்கு ஏகாதசி என்னும் சொல்லை விளக்குமுகத்தான் யாம் சொல்லமைப்புகள் சிலவற்றை விளக்கியுள்ளோம்.  தொடர்புடைய கருத்துகள் இவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.



வியாழன், 31 ஜூலை, 2025

அமானுடம் சொல்

 மனிதன் என்பவன் தன்னையே சீரிய, மிக உயர்ந்த  பிறவியாக எண்ணிக் கொண்டவன். என்றாலும் இயல்பு நிலை கடந்த நிகழ்வுகளைக் காணும்போதும் கேள்விப் படும் போதும்  அவற்றை "அமானுட மானவை  " என்று சொல்வதுண்டு. இச் சொல் ஒரு  பிற்காலப் புனைவு தான்.  சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தமிழர்கள் உண்டாக்கிய சொல்தான்.

இது எப்படி அமைந்தது என்பது காண்போம்.

மனிதன் என்ற சொல் மன்  என்ற  அடியில் தோன்றுவது. மன் என்ற  அடிச்சொல்லுக்குரிய பொருள்களில் நிலைபெறுதல் என்பது சிறப்பானது. எல்லா உயிரினங்களிலும் சிறப்புடையவன் ஏன் எனில் கலை பல அறிந்தவன். அறிவியல் கண்டவன் . மன் + இ+ து +அன் என்றபடி அவனுக்குச் சொல் அமைந்தது. மற்ற உயிரினங்களைவிடத் தன்னைப் புவியி லெங்கும் நிலைபேறு உடையோனாய்க் கருதிக் கொள்பவன்.

முன் எப்போதினும் நிலைபேறு என்பதற் குரிய பொருள் இப்போதுதான் மனிதனுக்கு  மிகுதியும பொருந்தினதாகத் தெரிகிறது. படைப்புத் திறன் மிக்குவந்து சி றந்தவனாகிவிட்டான்.

நாளேற நாளேறச் சிறப்படைந்துவிட்டான்

இப்போது "அமானுடம்" என்ற சொல். அ என்பது  மறுதலை , ( "மாற்று இடம்").  அல்லாதது என்பது பொருள்.  மனிதனுக்குரிய இயல்புகளுக்கு மாற்றம் உடையதாய் இருத்தல் என்று பொருள்.

அகரம் இங்கு முன்னொட்டாக வருகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது




ஆபயன் என்னும் சொல்

 இன்று ஆபயன்  என்னும் சொல்லைத் தெரிந்து இன்புறுவோம்.

இது  இலக்கண முறையில் எத்தகையை சொல்? ,வினைத்தொகை என்னும் வகையுட்  பட்டால்  ஆகும் பயன் என்னும் பொருளில் வந்து, வலித்தல் விகாரம் தோன்றாமல் போதரும்.  அப்போது ஆ என்பது பசுவைக் குறிக்காது. ஆப்பயன் என பகர மெய் தோன்றினால் பசு தந்தது என்று பொருள் பட்டுப் பால் ( தயிர், மோர், வெண்ணெய். நெய் முதலானவற்றைக் குறிக்கும்.

பாட்டில் ( செய்யுளில்) எதுகை நோக்கிக் குன்றி  மீண்டும் "ஆபயன்" என்று வருதலும் கொள்க. அப்போது அஃது ஆவின் பயனே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்க.