சனி, 12 ஜூலை, 2025

செட்டியார் சிறஷ்டார்

 இந்தச் சொல்லை இன்று பார்ப்போம்.

செட்டியார்கள் என்போர், வணிகத்தின் மூலம் அரசனிடம் மிக்க மதிப்பு பெற்றவர்கள் ஆயினர்.  குடிமக்களில் மிக்கச் சிறப்புடையோர் செட்டியார்கள்.

சிறப்பு என்ற சொல்லில் உள்ள சிற என்ற சொல்லிலிருந்தே அவர்களுக்குப் பெயர் அமைந்திருக்கலாம். சிறப்புற்றார் >சிறற்றார்>  சிறஷ்டார் என்று வடமாநிலங்களில் பெயர் உண்டாகிற்று/

ஆனால்  எட்டிப்பூ அணிவித்து உயர்த்தப்பெற்றதால்,  எட்டி> செட்டி என்று உண்டானது என்பது தேவநேயப்பாவாணர்  ஆய்வு 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிவுரிமை  உடையது.


செவ்வாய், 8 ஜூலை, 2025

மகிமை இன்னொரு முடிபு

 மகிமை என்ற சொல்லுக்கு ஆக்கம் கூறிய புலவர் பலர். யாமும் முன் கூறினோம். இப்போது இன்னொன்று  கூ  றுவோம்.    

இச்சொல்லை மக + இம்மை என்று பிரித்துப் பின் இம்மை என்பதை இமை என்று இடைக்குறை  ஆக்குக. பின் "மக இமை" என்ப து புணர்க்க, மகிமை ஆகும். .மக என்பதன் ஈ ற்று  அகரம் கெடும். கெடவே "மக் + இமை" என்பது மகிமை யாம்.

பொருள்: இம்மையில் மக்களுடையர் ஆதல் மகிமை. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பிறருடன் பகிர்ந்து கொள்க.



வியாழன், 3 ஜூலை, 2025

மாலுதல் மாலை

 மாலுதல் என்னும்  வினைச் சொல்: மயங்குதல் -  கலத்தல் என்பன பொருள்


சொல்லின் அடி மால் என்பதுதான். இதனுடன் ஐ விகுதி இணைந்து வர, மாலை என்ற சொல்  உண்டாகும். பூக்கள் பலவும் கலந்து தொடுப்பதால் கலத்தல் பொருளதாயிற்று. பூக்கள் ஒன்றுடன் ஒன்று மயங்குவன என்பதும் அறிக. 

இனி அடிச்சொல் ஆ விகுதி பெற்றும் சொல் ஆகும். அப்போது மாலா என்றும்  சொல்லாம். இச்சொல் பிறமொழிகள் பலவினும் சென்று கலக்கும். இது தமிழுக்கும் பெருமையே. பலா நிலா என்பனவும் ஆ விகுதி உடையனவே . நீலா என்ற பெயரில் ஆ விகுதி கண்டு கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பிறருடன் பகிர்ந்து கொள்க.