To think of nothing
If it gives the peace
Reckon that as something
Like fruits in the garden trees
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
To think of nothing
If it gives the peace
Reckon that as something
Like fruits in the garden trees
மேதாவி என்பது முதலாவதாக அஃறிணைகளுள் பல்திறங் கொண்டவற்றை குறித்த சொல்லா அல்லது மனிதருள் கல்விமேன்மை உடையோரைக் குறித்ததா என்பதை இப்போது கூறுதல் எளிதன்று. இச்சொல் கிளியையும் குறிக்கிறது. கிளிகள் அவற்றை வளர்ப்போரை அசத்தும் அளவிற்கு அறிவுத்திறம் காட்டியதாலே இச்சொல் அவற்றையும் குறித்ததென்று கூறற்கு உரிய அடிப்படை உள்ளது. பேசும் கிளிகளைக் கண்டு இதனை அறியலாம். கடினமான சீனமொழியையும் அவை நன்றாகப் பேசுகின்றன. எம் வீட்டின் பலகணி வழியாக சாலையின் மறு புறத்தில் உள்ள ஒரு கிளி யாம் உணவு கொள்வதை அறிந்து பலமான ஒலி எழுப்பி ஐயா ஐயா என்று அழைப்பது உண்மையில் வியப்பை வரவழைக்கிறது.
மேலே தாவுதல் என்பது, நாம் ஒன்றைக் கண்டுகொள்ளுமுன், கிளி அதை எதிர்பார்த்துக் கண்டு சொல்லிவிடுகிறது என்பதைக் குறிக்கும் மனிதன் இப்படி அறிந்துகொள்ளும் திறம் உடையவன். அதனால் அவ்வாறு திறனுள்ள மனிதனையும் அது குறிக்கும்.
மேல் தாவுதல் > மே தாவு இ > மேதாவி என்பது பொருந்துகிறது.
விபுதர் என்பது விழுமிய புலத்தினால் தருபவர் என்பது. ( குறுக்கச்சொல்). தற்கால வெளியீடுகளில் வராத சொல் இது. புலம் என்பது கண் செவி முதலான பொறிகளால் பெற்றறிதல்.
மேலானவற்றையே தருகின்ற விற்பன்னரையும் அது குறிக்கும். இயல்பான பொருண்மைகளைத் தவிர்த்து எப்போதும் உயர்கருத்தையே முன் வைக்கும் பழக்கம் உடையர் என்ற பொருளில், மே - மேலானவற்றை, தா - தருகின்ற, வி- விற்பன்னர் என்ற பொருளும் இதிற் பொருந்துகிறத். விற்பன்னர், விரிப்பவர், விள்ளுவார் என்பவை மூன்றும் இயைவன ஆகும்.
வில் : வில்போலும் குறிபார்த்துச் சொல் விட்டு,
பன்னர் - பன்னுபவர், பலகாலும் வலியுறுத்துபவர்.
பன்னுதல் என்பது: பல் - பன்: பலமுறை சொல்வது.
பல்லிலும் பட்டு வெளிவருவதே சொல். பல் இல்லையானால் பேச்சு, பிறழ்ச்சி அடையும். பல்> பன் என்பது லகர னகரத் திரிபு. பிறமொழிகளும் இத்தகைய திரிபுகளை உடையன. பழைய இடுகைகளில் இவை உள்ளபடியால் இங்கு கூறப்படவில்லை. கூறின் பன்முறை சொல்லி அலுப்பை எழுப்புவதாக அன்பர்கள் எழுதிக் கடிவதால், கூறியவை கூறல் விடுத்துவிட்டோம்.
மேயவை தருதல், விடுபவர் என்றும் பொருள். மேயவை தாரா விடுபாடு என்பதும் மே- தா - வி என்றாகும்.. இது பழிப்புரை பாற்படும்.
மேவுதல் மென்மேல் உரைத்தலுமாகும்.
வில ஆயது அம்: விலக்கவேண்டியன விலக்கி, ஆவன இணைத்து, அமைத்தல். வில ஆய அம் > வில ஆச அம்> விலாசம். யகரம் சகரமாகும், இது திரிபு நெறி. இவற்றை அறியாதார் பலருள்ளனர்.
விள் ஆசு - சொல்லப் பற்றுவன என்று பொருள். விளாசு. விளாசுதல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கந்தல் என்ற சொல்லினை அறிவோம்.
இப்போது பன்னாட்டிலும் மக்களின் வாழ்க்கை மேம்பட்டு அரசுகள் திறம்படச் செயல்படுவதனால் கந்தல் கட்டிக்கொண்டு நடமாடுவோர் தேடிப் பிடிக்கவேண்டியவர்களாகி விட்டனர். திருட்டுகளும் பல்கிவிட்ட படியால் துணிகள் கிழிந்துவிட்டால் அவற்றைத் தையலிட்டு உடுப்பவர்கள் இலர். பூச்சி மருந்துகள் கிடைப்பதால் துணிகளில் பொத்தல்கள் விழுந்து உடுத்த முடியாமற் போகும்வரை யாரும் வைத்திருப்பதில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிந்து கொஞ்சக் காலம்வரை கந்தல் துணிகளைத் தைத்து உடுத்துவோர் இருந்தனர். பொருளியல் முன்னேற்றத்தால் பிச்சைக்கரர்களுக்கும் வீடுகள் இருக்கின்றன. அவர்கள் தங்கள் இடங்களை வாடகைக்கு வி
ட்டபடி பணம் சேர்க்கின்றனர் என்பது பல்வேறு காவல்துறை நடவடிக்கைகளின் மூலம் அறிந்துகொள்கிறோம்.
ஔவைப் பாட்டியின் காலத்தில் துணி பலருக்குத் தாராளமாகக் கிடைக்கவில்லை. திருடும் எண்ணமுடையோரும் குறைவாக இருந்தனர். அதனால் அவர் கந்தல் உடுத்துவோர் அதைத் துவைத்துக் கட்டுதல் நலம் என்று தெரிவித்தார். கந்தல் ஆயினும் என்றதால், துணி நல்லதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் துவைத்து உடுத்தவேண்டும் என்றார் ஔவைப் பாட்டி.
பொருளியல் நிலை சிறக்கச்சிறக்க, கந்தல் என்ற சொல் காணாமற் போகக் கூடும்.
கந்துதல் என்றால் கெட்டுப் போதல் என்பது குறிக்கும் வினைச்சொல். துணி பல்வேறு காரணங்களால் கெட்டுப் போதல் உளதாவதால் கந்து > கந்தல் என்று இச்சொல் அமைந்துள்ளது.
இன்னும் சில வழிகளிலும் இச்சொல் அமையக்கூடும். அவற்றை நீங்கள் கண்டுபிடியுங்கள். பகர்ப்பு வரைவுகள் மிகுந்து வருவதால் மற்ற வழிகளில் இச்சொல் அமைவதை இப்போது வெளியிடவில்லை.
உங்கள் மூளைக்கு வேலை கொடுத்துத் தமிழை அறிந்துகொள்க.
இன்னோர் இடுகையில் இச்சொல்லைத் தொடர்வோம் பிற அளவைகளினால்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்