செவ்வாய், 11 ஜூன், 2024

நம் தமிழன்பரின் மறைவு. பி. பாக்கியமுத்து

 




தமிழன்பர்களுக்கு ஆதரவாகவும் நல்லன்பராகவும் 

நின்ற நம் தமிழன்பர் பி. பாக்கியமுத்து அவர்கள்

 கடந்த எட்டாம் திகதி ஜூன் மாதம் 2024 ல் காலமானார் 

என்பதை  அறிந்து வருந்துகிறோம். அவர்தம் 

ஆத்மசாந்திக்காகப்  பிரார்த்திக்கின்றோம்.


இறைவனின் ஒளியுலகில் வாழ்க.



HELPFUL TO ALL.......

He was helpful to all:

Among Tamils he stood tall. 

 Any in need  of assistance,

He went forward,  helped with persistence.

Sad we are, he left us early,

We can't say all in words thus merely;

Rest in skies above the seas

Your thoughts remain, like golden keys.

-------------------------------------------------------------------




குறிப்பு:

[அகத்துமா - உள்ளில் உள்ள ஒரு பெரிய கண்ணுக்குத் தெரியாதது. இதுஆத்துமா ஆத்மா ஆன்மா என்றெல்லாம் திரிந்து வழங்குகிறது.]




ஞாயிறு, 9 ஜூன், 2024

சொல்லமைக்க எந்த எழுத்தை வீசவேண்டும்?

 விகுதி, சொல்லிறுதி களைவு:

இதை அறிந்துகொள்ள, தொல்காப்பியம் பல்காப்பியம்,  காக்கைபாடினியம் முதலிய இலக்கணங்களின்  நூற்பாக்களை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

கழுகுகள் நேரப்படி வந்து தமக்கு வைக்கும் உணவுகளை உண்டுவிட்டுப் போகும் கோயில் திருக்கழுக்குன்றம்.

அங்கு அந்தக் கழுகுகளும் இன்னும் உள்ளவையும் வருகை புரிந்துவிட்டுப் போகும் கோயில் இந்தத் தலத்தில் இருக்கிறது.

இதற்குப் பெயர் அமைக்கும்போது,  முன்னரே மக்கள் இதைக் கழுகுமலை, கழுகுக்குன்றம் என்றெல்லாம் அழைத்தனர் என்று தெரிந்திருக்கிறது. பின்னர் முறையான பெயர் வந்தது.

திருக் கழுகுக் குன்றம்  என்று சொன்னால், கழுகு என்பதில் கு இருந்து பெயரில் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.  அந்தக் குகரத்தை நீக்கிவிட்டு, திருக் கழுக் குன்றம் என்று பெயர் அமைத்தனர்.

ஆனால், கழு என்றால் அது கழுகு என்றும் குறிக்கும்.  கழாய் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இதனாலும் கு என்னும் ஈறு தேவையில்லை ஆயிற்று.

சொல்லமைக்கும்போது, பொருளறிந்து விகுதி களைந்துவிடுதல் நல்ல உத்தி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

சனி, 8 ஜூன், 2024

காண் கிரசிலிருந்து மோடிமயக்க ஓட்டம்

 காண்கரைசற் கட்சிக்கால் கடந்தோர் எல்லாம்

கட்சிப்பின் செயிப்போராய்க் கடுகி வந்து 

வான் உயரம் தொடலாமே என்றே  நம்பி

வந்திட்ட சொல்வருதே வாழ்க வாழ்க!

வீண்குடியின் கட்டுக்குள் வீழ்ந்து ணங்கி

விடுபாடே அறியாராய் விளியா வானின்

மீன்நிலையைக் கண்டிடலாம்  எனவந் தாரே

மீண்டுவர  வாழ்சொர்க்கம்  மீளும்  வெறறி! 


காண் கிரசுக் கட்சியிலிருந்து ஓட்டம் பிடித்துச் சிலர்

பின் ஜெய்ப் பின் கட்சிக்கு வருகின்றராம். அதைப் பற்றிய

கவி இது

பின் ஜெயி(ப்)- போர் என்பது  BJP  என்று வரக்கூடியது. ஒரு போரைப் பின்பு ஜெயித்தோம் என்பது,

காண்- கரைசல்- கட்சி என்பது ஒரு கட்சிப்பெயர்.

கடுகி - விரைவாக

வான் உயரம் தொடலாம் -  எம் பி பதவி கிடைக்கலாம் என்பது

நம்பி வந்திட்ட -  நம்பிக்கையுடன் கட்சி மாறி வந்த

வீண் குடியின் கட்டுக்குள் -  பயனின்றி ஒரு குடும்பத் தலைமையில் அடக்குமுறைக்குள்

வீழ்ந்து உணங்கி -  சாய்ந்து ஈரம் உலர்ந்து போய்

விடுபாடே அறியாராய் -  எப்படி இதிலிருந்து பிய்த்துக்கொண்டு போவது என்பது தெரியாமல்

விளியா -  சாகவும் முடியாமல் ( அதாவது அரசியலிலிருந்து விலகவும் இயலாமல் )

வானின் மீன் நிலையைக் கண்டிடலாம் -  நட்சத்திர எல்லையை எட்டிவிடலாம் (என்று)

வந்தாரே - கட்சி கடந்து வந்தனரே

மீண்டுவர வாழ்சொர்க்கம் - மறுமலர்ச்சி வந்துவிடும்,

மீளும் வெற்றி  - வெற்றி வந்துவிடும் என்பது. 

கால் கடந்தோர் - இருந்து உயர்வு இன்றிக் காலம் கழித்தோர் என்றும் பொருள்.

கால் : காலம்.

அறிக மகிழ்க

மெய்ப்ப் பின்னர்